உள்ளத்து ஓசை

Thursday, January 13, 2005

சுனாமி அரங்க உரையாடல்கள்-4

ஜனவரி 12, 2005 புதன் அன்று சுனாமி மீட்பு உதவி அரங்கத்தில் நடந்த உரையாடல்கள்

இர.அருள்குமரன்(11:16:51am):
சந்திப்பதில் உள்ள சிக்கல்கள்
----------------------
அரங்கு இருபத்தி நான்கு மணி நேரமும் திறந்திருக்கும்.

ஒரு நிமிட இடைவெளிக்குள் அரங்குக்குள் கிட்டத்தட்ட நான்குபேர் நுழைந்து யாருமில்லை என்று
வெளியேறிவிடுவது அடிக்கடி நடக்கிறது. பலமுறை முயன்று பார்த்தேன் யாருமே இல்லை என்று பலரும்
அலுப்படைகிறார்கள்.

சிறிது நேரம் அரங்கினுள் காத்திருங்கள் என்று சொன்னால் அதிலும் சிக்கல், கணினியில் ஒன்றுக்கும் மேற்பட்ட
சாளரங்களை திறந்துவிடுவதால் மற்ற நபர்கள் வந்து அழைப்பதே நமக்கு தெரிவதில்லை. இப்படியும் சந்திப்புகள்
நிகழாமல் போகின்றன

யார் எப்போது வருவார்கள்? யாருக்கும் தெரிவதில்லை.

சில எளிய தீர்வுகள்
---------------
ஒவ்வொருமுறை உள்ளே வந்து வெளியேறும் போதும் நீங்கள் வந்த நேரத்தை (இந்திய நேரப்படி) மறக்காமல்
குறிப்பிடுங்கள். இன்ன நேரத்தில் நீங்கள் வருகிறீர்கள் என்பதை மற்றவர்கள் உணர்ந்து அந்த நேரத்திற்கு வர
முயற்சிக்க ஏதுவாக இருக்கும்

அடுத்து நீங்கள் வர இருக்கும் நேரத்தையும் (இந்திய நேரப்படி) குறிப்பிடவும்

இணைய தொடர்பில் சிக்கல் இல்லை என்றால் சற்று நேரமாவது அரங்கில் காத்திருந்து பார்க்கலாம்.
மற்றவர்களின் வருகை, வெளியேற்றங்களை அறிவிக்க ChatAlert ஐ
http://www.shockwave-india.com/tamil/tsunami/ தளத்திலிருந்து இறக்கி இயக்கிவிடவும்.
இது யாஹ¥ தூதுவன் போல ஒளி, ஒலி ஊடகங்கள் வழியாக நமக்கு அறிவிக்கும்.

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று சேவை செய்

இர.அருள்குமரன்(11:17:12am): பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று சேவை செய்யும் நண்பர்கள் தாங்கள் அரங்குக்கு வருகை தர இருக்கும்
நேரத்தை (இந்திய நேரப்படி) தங்கள் வலைப்பதிவிலும், மடற்குழுக்களிலும் அறிவியுங்கள். உங்களிடம் பேச
நிறைய வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் காத்திருக்கிறார்கள்

மற்றபடி ஒவ்வொரு நாளுக்கும் காலையும் மாலைவும் குறிப்பிட்ட நேரத்தை சந்திப்பு நேரமாக அறிவித்து
விடலாம், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வசதியாக இருக்கும்படி இந்த நேரத்தை ஒவ்வொரு நாளைக்கும்
மாற்றி அமைக்கலாம்.

இர.அருள்குமரன்(11:17:52am): சுனாமி அரங்க சந்திப்பு நேரப் பட்டியல்
-----------------------------

கீழ்கண்ட நேரப் பட்டியல் பலரையும் ஒரே நேரத்தில் திரட்டுவதற்காக மட்டுமே குறிப்பிடப்படுகிறது. மற்றபடி
அரங்கம் எல்லா நேரங்களிலும் திறந்தே இருக்கும். (எனக்கு தோன்றிய படி நேரத்தை குறித்திருக்கிறேன்,
மாற்றம் வேண்டுவோர் எனக்கு மடலிடவும். அல்லது பின்னூட்டம் கொடுக்கவும்)

(இந்திய நேரப்படி)
திங்கள் காலை 6:00 மதியம் 3:30
செவ்வாய் காலை 8:00 மாலை 5:30
புதன் காலை 10:00 மாலை 7:30
வியாழன் காலை 12:00 இரவு 9:30
வெள்ளி மதியம் 2:00 இரவு 11:30
சனி மாலை 4:00 அதிகாலை: 1:30
ஞாயிறு மாலை 6:00 அதிகாலை: 3:30



சீமாச்சு(12:03:26am): என்ன செய்யலாம் கார்த்திக்.. நம்ம ஹீரோ ரஜினிராம்கி என்ன சொல்றாரு?


கார்த்திக்ராமஸ்(12:03:40am): காலையில் ரோசா,நரைனிடம் பேசியதை உங்களுடன் கலந்து கொள்கிறேன்


வாசன்(12:03:42am): ர.ராம்கியிடம் கொஞ்ச நாட்கள் கழித்து ,நிலமை சீரடைந்தவுடன் சில விடயங்களை கேட்கலாமென்றுள்ளேன்.


கார்த்திக்ராமஸ்(12:03:55am): நல்லது


சீமாச்சு(12:03:58am): சொல்லுங்க ரெண்டு பேரும்..


சீமாச்சு(12:04:17am): ரோசா என்ன சொன்னார்?


கார்த்திக்ராமஸ்(12:04:28am): முதலில் , ரோசாவின் பெயரை வலைப்பதிவில் னீக்கவேண்டும் என்று கோரினேன்


கார்த்திக்ராமஸ்(12:04:59am): எனக்கு முன்னரே அவரும் அதை யோசித்துவிட்டு காசிக்கு இ மெயில் செய்வதாய் சொன்னார்


வாசன்(12:05:00am): கடலோர சிற்றூர்களிலிருந்து ஏழைச் சிறார்களை பொருள் உதவி செய்து -தத்தெடுப்பது


கார்த்திக்ராமஸ்(12:05:31am): ரோசாவின் பல விவாதங்களப்பார்த்து யாரும் தடங்கலாய் னினைக்கலாம் என்றேன்


வாசன்(12:05:39am): ?? ஏன் நீக்க வேண்டும்


கார்த்திக்ராமஸ்(12:05:44am): அவரும் ஏற்றுக்கொண்டார்; ஆவன செய்யப்பது


கார்த்திக்ராமஸ்(12:06:01am): இல்லை அது ஒரு கூட்டுபதிவு என்பதே சிறந்தது


வாசன்(12:06:04am): ஓ...


கார்த்திக்ராமஸ்(12:06:27am): ரஜினி, பத்ரி போன்றவர்களுக்கு எழுத அழைப்பு விடுப்ப்பதாய் ரோசா சொன்னார்


கார்த்திக்ராமஸ்(12:06:58am): முதலில் ஒரே இடத்தில் எழுதுவதில் நிறைட நன்மைகள் உள்ளது


கார்த்திக்ராமஸ்(12:07:26am): நான் னினைத்த் இன்னொன்று


கார்த்திக்ராமஸ்(12:07:53am): ராம்கி போல் , பல வேறு இடங்களிலிருந்து னிலவரத்தை சொல்ல ஆளில்லை


கார்த்திக்ராமஸ்(12:08:14am): முக்கியமாய் சொல்ல வேண்டும் என்று னினைத்த ஒன்று


கார்த்திக்ராமஸ்(12:08:27am): மீனவர்கள் பற்றி அதிக தவல்கள் இல்லை


கார்த்திக்ராமஸ்(12:08:48am): யாராவது ஒரு தொடர்பு ஏற்படுத்த முயலலாம்


வாசன்(12:08:53am): என்னுடைய கனவு/விருப்பம் என்னவென்றால்,இம்முயற்சி நீடித்து நிலைக்கும் ஒரு திட்டமாய் அமைய வேண்டும்...


கார்த்திக்ராமஸ்(12:09:06am): ஒத்துக்கொள்கிறேன் வாசன்


கார்த்திக்ராமஸ்(12:09:44am): மேலும் , மாலன் சொன்னதில் எளிதில் உடனடியாய் செய்யக்கூடியது என்று கணினி வாங்கி தபோவனத்து அனுப்புவது பற்றி குறிப்பிட்டேன்


கார்த்திக்ராமஸ்(12:10:04am): மேலும் தத்து எடுப்பது பற்றி எழுதி இருந்தேன்


கார்த்திக்ராமஸ்(12:10:32am): நான் மேலே சொன்ன அனைத்தையும் நானோ , ரோசாவோ நாளை பதிவில் வெளியிடுவோம்


சீமாச்சு(12:10:39am): பத்ரி சொன்னார். ஒரு ஸ்டீம் போட் வாங்க் ஒரு லட்ச ரூபாய் தான் ஆகுமென்றூ. நாம் ஆளுக்கு பணம் போட்டு ஒரு நிதி ஆரம்பித்து மீனவர்களுக்கு வட்டியில்லாக் கடனும் மானியமும் தரலாமே.. நான் ரெடிப்பா..


வாசன்(12:10:41am): முன்னரே தெரிந்திருக்கும் உங்களிருவருக்கும்..இருந்தாலும் திரும்ப ஒரு தடவை: கோவை கல்லூரி மாணவிகள் நினைவாக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளை,நிலைக்காமல் தொய்ந்து போய்விட்டது..


வாசன்(12:10:54am): ஏனெனில்,,


சீமாச்சு(12:10:57am): ஏன்..


கார்த்திக்ராமஸ்(12:10:58am): என்ன பிரச்சினை என சொல்லுங்கள் வாசன்


கார்த்திக்ராமஸ்(12:11:12am): அதைப்பற்றி யோசிக்க கேட்கிறேன்


சீமாச்சு(12:11:30am): revive பண்ணுவோமே வாசன்..


வாசன்(12:11:32am): ஆரம்பத்திலிருந்த ஆர்வம் அவரவர்களின் தினசரி வாழ்க்கை ஏற்ற இறக்கங்களில் அடிபட்டு போனது.


கார்த்திக்ராமஸ்(12:11:56am): இது போன்ற இடத்தில்தான் வலைப்பதிவு போன்றவை இன்றியமையாதவை ஆகின்றன


கார்த்திக்ராமஸ்(12:12:02am): என் தாழ் அபிப்


கார்த்திக்ராமஸ்(12:12:19am): தொடந்து சந்திப்பு இருக்கவேண்டும்


கார்த்திக்ராமஸ்(12:12:37am): எழுத்துக்கள், அரட்டை தொடர்ந்து நடக்கவேண்டும்


கார்த்திக்ராமஸ்(12:12:53am): இடையிடையே சீரியஸ் விஷயங்கள் நடக்கவேண்டும்


வாசன்(12:13:02am): இணைய நண்பர்கள் ஒன்றுகூடி இந்திய ரூபாய் 65000.ஓ தான் திரட்ட முடிந்தது...அறக்கட்டளையை பதிவு செய்ய,தமிழக அரசு பதிவாளருக்கு கொடுத்த சில ஆயிர லஞ்சமும் இதில் அடங்கும் ;((


கார்த்திக்ராமஸ்(12:13:23am): அந்த அறக்கட்டளை இன்னும் உள்ளதா?


சீமாச்சு(12:13:32am): வெறும் 65000 தானா.. இன்னும் பண்ணலாமே...


வாசன்(12:13:33am): சென்னை நண்பர்கள் மனம் வெதும்பி போனார்கள்..


வாசன்(12:13:37am): ஆம்..


வாசன்(12:13:47am): தமிழம் அறக்கட்டளை...


சீமாச்சு(12:13:48am): எனக்கு இதைப்பற்றி தெரியவே தெரியாதே


கார்த்திக்ராமஸ்(12:14:01am): எனக்கும் இப்போது தான் தெரியும்


வாசன்(12:14:14am): மன்னிக்கவும்..


கார்த்திக்ராமஸ்(12:14:53am): இன்னும் இயங்குகிறதா அவ்வறக்கட்டளை


சீமாச்சு(12:15:02am): வாசன் இது தான் தருணம் மறுபடியும் அதை revive பண்ணுங்கள்.. உதவிகளை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்..


வாசன்(12:15:02am): எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என ஊகித்துக் கொண்டேன்..நீங்களிருவரும் கடந்த 2/3 வருடங்களில் இணையத்தில் உலவ ஆரம்பித்திருக்கலாம்


சீமாச்சு(12:15:40am): உங்களுக்கு இதில் ஒப்புமை இருந்தால் நான் பொறுப்பெடுத்துக்கொள்ளத் தயார்...


கார்த்திக்ராமஸ்(12:15:52am): பத்ரி ஒரு அறக்கட்டளை தொடங்குவது பேசியதாய் ஞாபகம்


வாசன்(12:15:58am): சென்னை நண்பர்கள் நாக.இளங்கோவன்,இராம.கி மற்றும் கோவை முனைவர் ரமணி நாயுடு ஆகியோருடன் தொடர்பு கொண்டு புதுபிக்கலாம்..


கார்த்திக்ராமஸ்(12:16:10am): சூப்பர் ஐடியா


கார்த்திக்ராமஸ்(12:16:26am): அறக்கட்டளையின் நோக்கம் என்ன என்ன வாசன்


வாசன்(12:16:53am): இந்த உரையாடலை மின்னஞ்சலில் அந்த நண்பர்களுக்கு அனுப்புகிறேன்.


வாசன்(12:16:56am): நோக்கம்:


சீமாச்சு(12:17:17am): செய்யுங்கள் வாசன்.. நான் ரெடி.. என்னுடன் இன்னும் நிறைய பேரைச் சேர்க்கவும் தயார்.. Goals & mission & financial targets set பண்ணுங்கள்...


சீமாச்சு(12:18:01am): யாராவது சேவை நோக்கமுள்ளவர்களை நிதிநிலை பொறுப்பாளர்களாக்குங்கள்


வாசன்(12:18:20am): பேருந்தில் உயிருடன் எரிக்கப்பட்ட 3 மாணவிகள் நினைவாக 60000.00 ரு அறக்கட்டளை ஏற்படுத்தி அதில் கிடைக்கும் வருவாய் ஐ வைத்து ஏழ்மையானவர்களுக்கு உதவுதல்


கார்த்திக்ராமஸ்(12:18:39am): நல்லது


கார்த்திக்ராமஸ்(12:18:57am): இப்ப என்ன தேவை வாசன்


வாசன்(12:19:20am): நிச்சயம் அ.கட்டளையை ஏற்படுத்திய 3 இந்திய நண்பர்களை கேட்டு பார்க்கிறேன்..


சீமாச்சு(12:19:39am): 60000 பத்தாது.. அதை 10 லட்சமாக்குங்கள்.. 3-6 மாதம் டார்கெட் வையுங்கள்.


கார்த்திக்ராமஸ்(12:19:43am): வாசன் எனக்கு ஒன்று தோன்றுகிறது


கார்த்திக்ராமஸ்(12:20:47am): ஏற்கனவே சுனாமிக்காக வேலை செய்யும் ,பத்ரி ராம்கி போன்றவர்களை இதில் இணைப்பது சரியாகும்; அதனால் பலன் னிறைய இருக்கும் என தோன்றுகிறது


கார்த்திக்ராமஸ்(12:20:57am): னீங்கள் என்ன சொல்கிறீர்கள்


சீமாச்சு(12:21:06am): வாசன் கடமை அழைக்கிறது.... முடிவெடுத்து என் பங்கு என்ன சேவைகள் என்று சொல்லுங்கள்.. தவறாமல் நிறைவேற்றுகிறேன்...


வாசன்(12:21:26am): சென்னை அன்பர்கள் ஒத்துப் போனால் நிச்சயம் செய்யலாம்


சீமாச்சு(12:21:54am): cio2003@yahoo.com


வாசன்(12:22:02am): vaasus@gmail.com க்கு அனுபுங்கள்


மூர்த்தி(1:15:18pm): தற்போது எங்கே அண்ணா பாதிக்கப் பட்ட மக்களைத் தங்க வைத்துள்ளார்கள்?


மூர்த்தி(1:15:29pm): பள்ளிகள் திறந்து விட்டதாக அறிந்தேனே


எஸ்.கே(1:15:33pm): ஆமாம்


மூர்த்தி(1:15:34pm): சரி


எஸ்.கே(1:15:37pm): ஆனால்


மூர்த்தி(1:15:43pm): சொல்லுங்க அண்ணா


எஸ்.கே(1:16:02pm): மன வருத்தம் கொல்ளத்தக்க விஷயம் நிறைய இருக்கிறது


மூர்த்தி(1:16:14pm): கொஞ்சம் அறிவேன்


எஸ்.கே(1:16:23pm): நிவாரண நிதி 5 லட்சம் என்ற அறிவிப்புக்கப்புறம்


மூர்த்தி(1:16:29pm): சரி


மூர்த்தி(1:17:18pm): அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க அரசு ஏதும் நில மீட்பு விசயங்களில் இறங்கியதாகத் தெரியவில்லையே


மூர்த்தி(1:17:44pm): மறுபடியும் கடல் கரை என்றால் அவர்களின் வாழ்க்கை வாழ்நாள் முடுதும் தண்ணீரில்தானா?


மூர்த்தி(1:18:18pm): நேற்றைய விவாதத்தில் சொன்னதுபோல கடற்கரையோரம் சிறு காடுகள் வளர்க்கலாம்


மூர்த்தி(1:18:40pm): அதனை பூங்கா போன்ற அமைப்பாகவும் மாற்றலாம்


எஸ்.கே(1:23:27pm): சின்மயா மிஷன் அந்த வகை தொண்டுகள் செய்வதாக செய்தி பார்த்தேன்


மூர்த்தி(1:23:37pm): ஆமாம்


எஸ்.கே(1:23:39pm): ஏனென்றால்


மூர்த்தி(1:23:46pm): சொல்லுங்க


எஸ்.கே(1:24:09pm): மனப்புண்களும் ஆற்றப்பட வேண்டும்


மூர்த்தி(1:24:17pm): ஆமாம்


மூர்த்தி(1:24:30pm): தற்போது அவர்களுக்குத் தேவை ஆறுதல்


எஸ்.கே(1:24:37pm): ஆமாம்


மூர்த்தி(1:24:56pm): அந்த கோரக் காட்சிகளைக் கண்டவர்கள் மனப் பாதிப்பிற்கு உள்ளானதாக தொலைக் காட்சியில் பார்த்தேன்


எஸ்.கே(1:25:09pm): ஆனால் நிவாரண நிதியைக் கைப்பர்றுவதற்காக மக்கள் நடந்துகொள்ளும் முறைதான்


மூர்த்தி(1:25:20pm): ஆமாம் நேற்று பத்ரி சொன்னார்


எஸ்.கே(1:25:35pm): ஆச்சரியமாகவும் இருக்கிறது, அருவருப்பாகவும் இருக்கிறது


மூர்த்தி(1:25:37pm): ஏற்கெனவே இறந்தவர்களையும் பட்டியலில் இணைப்பதாக அறிந்தேன்


எஸ்.கே(1:25:50pm): "இவர்களா இப்படி?" என்று நினைக்கத் தோன்றுகிறது


மூர்த்தி(1:26:06pm): எந்த ஒரு நல்ல நோக்கத்திலும் தீய செயல்கள் குறிக்கிடுவது உண்டு


மூர்த்தி(1:26:17pm): அதற்காக நோக்கம் தவறு கிடையாது


எஸ்.கே(1:26:25pm): அது இத்தனை பெரிய அளவில் வெளிப்படுகிறது


மூர்த்தி(1:26:28pm): ஓரிருவர் அப்படி இருக்கலாம்


மூர்த்தி(1:26:42pm): அரசியல்வாதிகள் குறுக்கீடு உண்டா அண்ணா?


எஸ்.கே(1:26:53pm): அதிகமாக இல்லை


எஸ்.கே(1:27:03pm): அவர்கள் அடக்கி வாசிக்கிறார்கள்


மூர்த்தி(1:27:03pm): திருமாவளவன் மட்டுமே வரிந்துகட்டி செயல்களில் இறங்கியதாக அறிந்தேன்


எஸ்.கே(1:27:08pm): ஆமாம்


மூர்த்தி(1:27:32pm): விவேக் ஓபராய்க்கு இருக்கும் பற்று பாசம் இங்குள்ளவர்களுக்கு இல்லாமல் போயிற்றே


எஸ்.கே(1:27:41pm): ஆமாம்


எஸ்.கே(1:27:57pm): அவருடைய பணி ஆச்சரியமானது


எஸ்.கே(1:28:04pm): something unique


மூர்த்தி(1:28:12pm): எங்கிருந்தோ வந்து இவாண்டர் ஹோலிபீல்டு கோடிகோடியாய் செய்யும்போது..தமிழகத்தை சுரண்டிப் பிழைத்த நடிக நடிக நடிகையர்...


மூர்த்தி(1:28:16pm): என்ன சொல்வது


எஸ்.கே(1:28:29pm): நீங்கள் இலங்கையில் இருக்கிறீர்களா


விஜயாலயன்(1:28:35pm): ஆமாம்


விஜயாலயன்(1:28:41pm): கொழும்பில்


எஸ்.கே(1:29:07pm): அங்கு ஏஎதாவது நிவாரணம் போய்ச்சேருகிறதா


விஜயாலயன்(1:29:19pm): ஆனால் சுனாமி தாக்கியபோது திருகோணமலையில் இருந்தேன்


மூர்த்தி(1:29:19pm): கோபி அண்ணானை தமிழ் பகுதிகளுக்கு அரசு விட மறுத்ததாக அறிந்தோம். உண்மையா விஜயாலயன்??


எஸ்.கே(1:29:21pm): முல்லைத் தீவு


விஜயாலயன்(1:29:26pm): ஆமாம்


எஸ்.கே(1:29:33pm): யாழ், திரிகோணமலை


எஸ்.கே(1:29:41pm): மட்டக்களப்பு


விஜயாலயன்(1:29:42pm): இங்கே அரசியல், இனப்பாகுபாடுகள் அதிகம்


மூர்த்தி(1:29:58pm): பத்ரி அவர்களின் மருந்து பார்சல்கூட அரசினால் கையகப் படுத்தப் பட்டது என்றும் இன்னும் மக்களைச் சென்றடையவில்லையாம்


மூர்த்தி(1:30:31pm): வெளிநாட்டு உதவிகள் தமிழ் பகுதிகளை அடைகிறதா விஜயாலயன்?


எஸ்.கே(1:30:33pm): நார்வே, செஞ்சிலுவைச் சங்கம் முதலியவை ஏதாவது செய்ய முடியுமா


மூர்த்தி(1:30:43pm): அஜீவன் அண்ணா கட்டுரையாக வடித்திருந்தார்


விஜயாலயன்(1:30:46pm): நான் நேரடியாக திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம் சென்றேன்


மூர்த்தி(1:30:56pm): சரி


எஸ்.கே(1:31:21pm): தயவு செய்து இங்குள்ளவர்கள் எவ்வகையில் உதவ முடியும் என்பதைக் கண்டு சொல்லுங்கள்


விஜயாலயன்(1:31:30pm): அங்கெல்லாம் நிவாரணப் பொருட்கள் அரசு மூலம் சென்றடையவில்லை


எஸ்.கே(1:31:36pm): பலர் மன எழுச்சியுடன் இருக்கிறார்கள்


மூர்த்தி(1:31:39pm): சரி


விஜயாலயன்(1:31:54pm): TRO மட்டுமே ஒரே வழி


எஸ்.கே(1:32:05pm): ok


விஜயாலயன்(1:32:25pm): அவர்கள் நேர்த்தியாக செய்கிறார்கள்


மூர்த்தி(1:32:32pm): சரி


மூர்த்தி(1:33:06pm): இந்தோவில்கூட அரசியல்


எஸ்.கே(1:33:14pm): சேதம், உயிழப்பு, குழந்தைகளின் நிலை முதலியவை பற்றி அறிந்தபின் தெரிவியுங்கள்


மூர்த்தி(1:33:17pm): உதவி செய்பவர்களின்கூட ராணுவம் இருக்குமாம்


விஜயாலயன்(1:33:24pm): அரசின் இனப்பாகுபாடு, அரச அதிகாரிகளின் சோம்பேறித்தனம் என்று....


மூர்த்தி(1:33:44pm): எந்த சமயத்தில் எதனைப் பேசுவது என ...ஒன்றுமே தெரியாமல்


மூர்த்தி(1:33:57pm): ம்..சொல்லுங்க


விஜயாலயன்(1:34:11pm): கிடைத்த பொருட்களைக் கூட அரச அதிகாரிகள் மக்களுக்கு வழங்கவில்லை


மூர்த்தி(1:35:14pm): பரிசோதனை செய்தபின்னாவது வழங்கி இருக்க வேண்டும்


விஜயாலயன்(1:35:26pm): யாழில் ஒரு அரச அலுவலகத்தில் வெளிநாட்டினால் வழங்கப்பட்ட கூடாரங்கள் பல தேங்கிக்கிடந்தன


மூர்த்தி(1:35:37pm): பேரழிவு நடந்திருக்கும்போது இனமென்ன மதமென்ன?


மூர்த்தி(1:35:48pm): ஆமாம் அறிய நேரிட்டது


மூர்த்தி(1:36:18pm): தமிழ் பகுதிகளில் இருந்து ராணுவத்தி ¦வையேற தமிழ்செல்வன் அறிக்கை விட்டார்


மூர்த்தி(1:36:28pm): அதனால் ஏதேனும் பாதகம் உண்டா விஜயாலயன்?


விஜயாலயன்(1:36:33pm): அவற்றை நானும் எனது நண்பர்களும் எங்கள் வாகனத்தில் எடுத்துச் சென்று அகதி முகாமில் கொடுத்தோம்


மூர்த்தி(1:36:47pm): நல்லது..நல்லது


மூர்த்தி(1:37:22pm): சிங்கள புத்த பிக்குகளும்கூட பாதிக்கப்பட்ட தமிழ் பகுதிகளுக்கு சென்று உதவி செய்தார்களாம்


மூர்த்தி(1:37:54pm): புலிகள் பொருட்களைப் பிடுங்குகிறார்கள்..உள்ளே விட மறுக்கிறார்கள் என்பதெல்லாம் பொய் என அந்த பிக்கே சொல்லி இருக்கிறார்


விஜயாலயன்(1:37:55pm): அப்படி அவர்கள் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை


மூர்த்தி(1:38:09pm): அஜீவன் அண்ணா எழுதி இருந்தார்


விஜயாலயன்(1:39:21pm): எங்கள் நிறுவனத்தில் எங்கள் சம்பளப்பணத்தில் வாங்கப்பட்ட பொருட்களை தெற்கிற்கு மட்டுமே கொடுத்தார்கள்


மூர்த்தி(1:39:34pm): ம்


விஜயாலயன்(1:41:09pm): சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து தனிப்பட்ட முறையில் பணம் சேர்த்து அகதி முகாம்களுக்கும் வைத்தியசாலைகளுக்கும் தேவையானவற்றை வாங்கிச்சென்று கொடுத்தோம்


எஸ்.கே(1:41:15pm): தெற்கே தமிழர் பகுதியில் சேதம் உண்டா


விஜயாலயன்(1:41:20pm): இல்லை


எஸ்.கே(1:41:25pm): ok


மூர்த்தி(1:41:34pm): ம்


எஸ்.கே(1:41:47pm): அவர்கள் மேட்டுப் பகுதியில் உள்ளார்கள் போல


விஜயாலயன்(1:42:31pm): அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு (வன்னி), யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள்


விஜயாலயன்(1:43:13pm): கிட்டத்தட்ட 16000 பேர் இந்த இடங்களில் மட்டும் கொல்லப்பட்டனர்ட்


மூர்த்தி(1:43:22pm): அய்யோ


மூர்த்தி(1:43:43pm): தமிழர்கள் அதிகம் பாதிக்கப் பட்டனர்..உதவிகள் என்னவோ அங்கே செல்கிறது


விஜயாலயன்(1:45:06pm): கொல்லப்பட்டவர்களின் சடலங்கள், காயப்பட்டவர்கள், சேதங்கள் என்பவற்றை நேரில் பார்த்ததன் தாக்கம் என்னை நிரம்ப பாதித்துவிட்டது


மூர்த்தி(1:45:18pm): ம்


மூர்த்தி(1:45:44pm): இணையத்தில் பார்க்கவே மனம் பதறுகிறது


விஜயாலயன்(1:46:29pm): அதனால் 2ம் கட்ட பணிகளிலும் இணைய திட்டமிட்டுள்ளேன்


விஜயாலயன்(1:47:57pm): விரைவில் தமிழ் பிரதேங்களில் counselling செய்வதற்கு செல்வேன்.


விஜயாலயன்(1:48:56pm): அதற்கான பயிற்சிகளிற்கு இணைந்துள்ளேன்


மூர்த்தி(1:49:01pm): நல்லது விஜயாலயன்


மூர்த்தி(1:49:23pm): நண்பர்களையும் அதில் இணையுங்கள்


விஜயாலயன்(1:50:01pm): நிறைய இடங்களில் பாதிக்கப்பட்ட பலர் ஆறுதல் சொல்ல யாரிமில்லாமல் இருக்கின்றார்கள்


மூர்த்தி(1:50:01pm): நாளை பாதிக்கப் பட்ட இடங்களுக்கு செல்வதாக இருந்தீர்களே...


ரஜினி ராம்கி(1:50:17pm): இன்றிரவு கிளம்புகிறேன்


மூர்த்தி(1:50:36pm): பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லவுமா மனமில்லை@விஜயாலயன்


மூர்த்தி(1:50:43pm): சரி@ராம்கி


ரஜினி ராம்கி(1:50:43pm):
நேராக கரூர் சென்று பெட்ஷீட்களை சேகரித்துக்கொண்டு நாளை மாலை பூம்புகார் பகுதிகளுக்கு சென்றுவிடுவேன்

மூர்த்தி(1:50:52pm): நல்லது


ரஜினி ராம்கி(1:51:11pm):
எல்லாம் திட்டப்படி நடந்தால் பொங்கலுக்குள் அனைத்து பெட்ஷீட்களையும் விநியோகித்துவிட முடியும்

மூர்த்தி(1:51:20pm): உஷா,சைலஜா,ஐயப்பன் எல்லாம் வருகிறார்களா?


விஜயாலயன்(1:51:23pm): இல்லை... எல்லோரும் பாதிக்கப்பட்ட இடங்களில் யாரும் அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடிவதில்லை


மூர்த்தி(1:51:30pm): ம்


ரஜினி ராம்கி(1:51:33pm): இல்லை.


மூர்த்தி(1:51:41pm): சரி


மூர்த்தி(1:51:55pm): சென்னை நண்பர்களை அழைத்துக் கொள்ளலாம் ராம்கி


ரஜினி ராம்கி(1:51:59pm): நேற்று சுனாமியால் பாதிக்கப்பட்ட சந்திரபாடி கிராமத்து பிரசிடெண்ட் என்னைதொடர்பு கொண்டார்


மூர்த்தி(1:52:07pm): சரி


ரஜினி ராம்கி(1:52:23pm):
இல்லை மூர்த்தி. மயிலாடுதுறையிலேயே போதுமான ஆட்கள் இருக்கிறார்கள். பிரச்னையில்லை

மூர்த்தி(1:52:23pm): பெரிய கிராமமா அது?


விஜயாலயன்(1:52:29pm): அவசர வேலை.... மீண்டும் சிறிது நேரத்தில் இணைகிறேன்


மூர்த்தி(1:52:29pm): சரி


ரஜினி ராம்கி(1:52:46pm): ரொம்பவும் சின்ன கிராமம். காரைக்கால், தரங்கம்பாடி எல்லையில் இருக்கிறது


மூர்த்தி(1:52:52pm): சரி


மூர்த்தி(1:53:10pm): ஊராட்சித் தலைவர் என்ன கேட்டார் ராம்கி?


ரஜினி ராம்கி(1:53:21pm): சரி. கொஞ்சம் வேலையிருக்கிறது. மதியத்துக்கு பின்னர் வருகிறேன்


மூர்த்தி(1:53:30pm): சரி ராம்கி


மூர்த்தி(1:53:48pm): மற்றவர்களும் விரைவில் வருவார்கள்


ரஜினி ராம்கி(1:54:02pm): கொஞ்சம் உதவிகள் கேட்டார். முக்கியமாக கட்டுமரங்கள் சம்பந்தமாக. அதெல்லாம் பெரிய தொகை. நேரில் பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்


மூர்த்தி(1:54:08pm): நானும் விடை பெறட்டுமா கிச்சு அண்ணா?


மூர்த்தி(1:54:27pm): முதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள்


நேச குமார்(10:41:40pm): நான் நேற்று பேசியவரை


நேச குமார்(10:41:54pm): கண் பிரச்சினை, பயந்த மாதிரி இல்லை


எஸ்.கே(10:42:00pm): நல்லது


நேச குமார்(10:42:02pm): சண்முக சுந்தரம் என்று ஒரு டாக்டர்


நேச குமார்(10:42:11pm): நியூக்ளியர் மெடிசினில் எக்ஸ்பேர்ட்


எஸ்.கே(10:42:20pm): ok


நேச குமார்(10:42:43pm): BARC ள் வேலை செய்தவர்


நேச குமார்(10:42:58pm): அவரிடம் செக் செய்தோம்


நேச குமார்(10:43:32pm): பயந்து போய் கண் பார்வை போய்விட்டது என்று நினைத்திருக்கிறார்கள். மங்கலாகத் தெரியவே


நேச குமார்(10:43:46pm): மேலும், நிறைய பேரி சிறுவர்கள்


எஸ்.கே(10:44:04pm): அவ்வளவு minerals kadal padukaiyil irukkumaa


நேச குமார்(10:44:15pm): இருக்கிறது என்று சொன்னார்கள்


எஸ்.கே(10:44:20pm): சரி


நேச குமார்(10:44:25pm): நீங்கள் போகும் போது பாருங்கள்


நேச குமார்(10:44:32pm): டன் கணக்கில் கறுப்பு மண்


எஸ்.கே(10:44:33pm): பாக்கறேன்


எஸ்.கே(10:44:50pm): அதிலேயே பயந்து போயிருப்பாங்க


நேச குமார்(10:44:56pm): அது கடல் களிமண்ணாம் ,அதனுடன் இந்த மினரல்கள் கலந்து வந்துள்ளன


நேச குமார்(10:45:14pm): ஆம், அந்தக் கறுப்பு குழம்பு கண்களுக்குள் போகவே கெமிக்கல் என்று


நேச குமார்(10:45:30pm): நினைத்து பயந்து போயிருக்கின்றார்கள் ஆரம்பத்தில்,


நேச குமார்(10:46:12pm): இல்லிமேட் எனும் மினரல் நிறைய வந்து குவிந்துள்ளதாம், அது செல்போன்களில் உபயோகப் படுத்தும் மினரலாம்


நேச குமார்(10:46:47pm): எல்லோருக்கும் அரசு சார்பில் நான்காயிரம் ரூபாய் தந்துள்ளார்கள்


நேச குமார்(10:48:01pm): ஒரு லட்ச ரூபாய்க்குத்தான், தாசில்தார் சர்ட்டிபிகேட், போலீஸ் புகார் காப்பி போன்றவை கேட்கிறார்களாம்


எஸ்.கே(10:48:42pm): அரசு இயந்திரம் இப்போ வேலை செய்யுதா


நேச குமார்(10:53:47pm): ஆம் எஸ்கே, அப்படித்தான் கேள்விப்படுகிறேன்


Wednesday, January 12, 2005

சுனாமி அரங்க உரையாடல்கள்-3

ஜனவரி 11, 2005 செவ்வாய் அன்று சுனாமி மீட்பு உதவி அரங்கத்தில் நடந்த உரையாடல்கள்

திருமலை(8:24:23am): என்ன முடிவு செய்தீர்கள்?


மூர்த்தி(8:24:28am): ரஜினிராம்கியோடு ஐகாரஸ்,உஷா,சைலஜா இன்னும் பலரும் பாதிக்கப் பட்ட இடங்களுக்கு நேரில் செல்வதாகக் கூறினார்கள்


திருமலை(8:24:44am): உஷா சென்னையில் இருக்கிறா ?


மூர்த்தி(8:24:48am): வரும் 13க்கு மேல் அவர்கள் அங்கு செல்வதாக சொன்னார்கள்


திருமலை(8:24:54am): சரி


மூர்த்தி(8:24:57am): பெங்களூரில் இருக்கிறார்


திருமலை(8:25:04am): குழப்பமாக இருக்கிறது


திருமலை(8:25:15am): இங்கு பெருமளவில் நிதி சேர்கிறது


மூர்த்தி(8:25:19am): யாருமில்லா குழந்தைகளை தத்து எடுப்பது பற்றியும் பேசினோம்


திருமலை(8:25:26am): பல்வேறு தன்னார்வ நிறுவனங்களுக்கு


மூர்த்தி(8:25:30am): ஆமாம் நிதி முக்கிய தேவைதான்


மூர்த்தி(8:25:44am): அது சரியாகப் பயன்படுத்தப் பட்டால் மிக நன்று


மூர்த்தி(8:25:55am): பத்ரியும் கலந்துகொண்டார் நேற்று


மூர்த்தி(8:26:08am): இலங்கை நிலவரங்கள் பற்றியும் பேசினோம்


திருமலை(8:26:11am): அதை யாருக்கு எங்கு அளிப்பது என்பதில் பல குழப்பங்கள் நிலவுகின்றன


மூர்த்தி(8:26:22am): பணத்தையா?


மூர்த்தி(8:26:34am): பத்ரிக்கோ அல்லது ராம்கிக்கோ அனுப்புங்கள்


திருமலை(8:26:48am): அனைத்து நிறுவனங்களிலும் 100 சதவீத மாட்ச்சிங் கிராண்ட் அளிக்கிறார்கள்


மூர்த்தி(8:26:53am): பிகேசிவகுமார் கொடுத்த பெட்சீட் எல்லாம் இனிதான் விநியோகிக்கனுமாம்


மூர்த்தி(8:27:05am): ரஜினி ராம்கி சொன்னார்


மூர்த்தி(8:27:06am): சரி


திருமலை(8:27:21am): அவையெல்லாம் இன்னும் தேவைப்படுகின்றனவா இத்துனை நாட்கள் கழித்தும்?


மூர்த்தி(8:27:43am): இன்னும் சரியான தங்குமிடம் கிடைக்கவில்லை அல்லவா?


திருமலை(8:27:52am): அங்கே இருப்பவர்களுக்குத்தான் தெரியும்


மூர்த்தி(8:27:59am): பள்ளிகள் வேறு திறக்கப்பட்டு விட்டதால் அவர்களின் நிலை கஷ்டம்


திருமலை(8:27:59am): இன்னும் தேவைப் படலாம்


திருமலை(8:28:14am): ஆமாம்


மூர்த்தி(8:28:24am): அதனால் கோயில்கள், மடங்கள், பொது இடங்களில்தானே அவர்கள் தற்போது


மூர்த்தி(8:28:30am): அதனால் தேவைப்படலாம்


திருமலை(8:28:35am): ஆமாம்


திருமலை(8:29:00am): எத்தனை மணிக்கு இங்கு கூடுவார்கள்?


மூர்த்தி(8:29:12am): அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை


திருமலை(8:29:28am): ஆமாம் நேசகுமார் தெரிவித்திருந்தார்


மூர்த்தி(8:29:40am): நேற்று நாங்கள் கூடியது சிங்கை நேரப்படி மதியம் 2 மணி இருக்கலாம்


மூர்த்தி(8:29:56am): அருள்குமரனும் இருந்தார்


மூர்த்தி(8:30:06am): நம்பி வந்திருந்தார்


திருமலை(8:30:10am): சரி


மூர்த்தி(8:30:22am): அருள்குமரன் ஆன்லைனில் வந்தால் தொடர்பு கொள்ளுங்கள் அண்ணா


திருமலை(8:30:29am): சரி


மூர்த்தி(8:30:44am): ஆனால் நேற்று கூடிய நேரம் என்றால் உங்களுக்கு தூங்கும் நேரம் என நினைக்கிறேன்


திருமலை(8:30:54am): இப்பொழுது என்ன மணி?


மூர்த்தி(8:31:02am): 8.30காலை


திருமலை(8:31:37am): சரி எங்கள் நேரம் இரவு 9 மணிக்கு நான் வருகிறேன்


மூர்த்தி(8:31:50am): ஒரு கிராமத்தை நம் இணைய நண்பர்கள் தத்து எடுக்கலாம் என்று ராம்கி சொன்னார்


திருமலை(8:31:53am): இப்பொழுது இங்கே மாலை 4.30


மூர்த்தி(8:32:00am): அதனை யோசித்து செய்யவேண்டும்


மூர்த்தி(8:32:20am): அப்புறம் ஒரு பையனை தத்து எடுக்க நிறைய கஸ்டப்பட வேண்டி இருக்கிறதாம்


மூர்த்தி(8:32:26am): அப்படியா...சரி


திருமலை(8:32:34am): ஆமாம் அவ்வளவு எளிதல்ல


திருமலை(8:32:46am): அரசாங்கக் குறுக்கீடுகள் இருக்கும்


திருமலை(8:33:03am): இல்லாவிடில் பிள்ளைகளைத் திருடிச் சென்று விடுவார்கள்


மூர்த்தி(8:33:04am): ராம்கி யாரோ ஒரு பையனை மருத்துவப் படிப்புச் எகவை அவரின் ரஜினிபேன்ஸ் தளம் ஏற்றுக் கொண்டதாக சொன்னார்


மூர்த்தி(8:33:10am): ஆமாம்..


மூர்த்தி(8:33:16am): அது பற்றியும் பேசினோம்


திருமலை(8:33:42am): அரசாங்கம் தேவைப்படும் அத்துனை வேலைகளையும், தேவைகளையும் பட்டியலிட்டு


மூர்த்தி(8:33:58am): தமிழகத்தில் இருப்பவர்களால் நேரில் பார்க்க முடியும்


திருமலை(8:34:00am): அவற்றை பல்வேறு நிறுவனங்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும்


மூர்த்தி(8:34:06am): ஆமாம்


மூர்த்தி(8:34:16am): அதனால் நன்கு யோசித்து செயல்படவேண்டும்


திருமலை(8:34:16am): அவர்கள்தான் அது போன்ற பணிகளை ஒருங்கிணைக்க முடியும்


மூர்த்தி(8:34:20am): ஆமாம்


மூர்த்தி(8:34:35am): நாம் தகவல் சாதனங்கள் மூலம்தானே உணர்கிறோம்


மூர்த்தி(8:34:54am): அதனால் பத்ரி,ராம்கியை முன்னிறுத்தி உதவிகள் தொடரட்டும் என பேசினோம்


திருமலை(8:34:54am): ஒரு உதாரணத்துக்கு ஒரு 1000 தேவைகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் இருக்கும் தன்னார்வலர்கள் அனைவரும் ஆளுக்கொன்றாக எடுத்து


மூர்த்தி(8:35:00am): ம்


திருமலை(8:35:01am): சரியாகச் செய்ய முடியும்


மூர்த்தி(8:35:05am): ஆமாம் அதே


திருமலை(8:35:19am): இல்லாவிடில் குழப்பமும் செய்வவனச் செய்தலுமே மிஞ்சும்


மூர்த்தி(8:35:22am): பத்ரி இலங்கைக்கு அனுப்பிய மருந்து பொருட்கள் இன்னும் சென்று சேரவில்லையாம்


மூர்த்தி(8:35:37am): அரசாங்கக் கைகளில் இருக்கிறதாம் மருந்துகள்


திருமலை(8:35:40am): இலங்கை நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது


மூர்த்தி(8:35:56am): இன்னும் உதவி தேவைப்பட்டும் அனுப்ப ஐடியா தெரியாமல் பேசினார்


திருமலை(8:36:00am): எனக்குத் தெரியவில்லை


மூர்த்தி(8:36:15am): தமிழ் பகுதிகளுக்கு உதவிகள் சரிவர போவதில்லையாம்


திருமலை(8:36:24am): ம்ம்ம்


மூர்த்தி(8:36:40am): கோபி அண்ணானைக்கூட புலிகளின் கட்டுப்பாட்டுக்குச் செல்ல சந்திரிகா தடை விதித்து விட்டாராம்


திருமலை(8:36:56am): படித்தேன்


மூர்த்தி(8:37:00am): மீறிப் போனால் ஜெயலலிதா மாதிரி கைது செய்தாலும் செய்வார்


மூர்த்தி(8:37:06am): பாவம் மக்கள்


மூர்த்தி(8:37:22am): இடையில் புலி,அரசு அரசியல் சண்டை


திருமலை(8:37:53am): தமிழீழத்தைப் பொருத்தவரை ரெட் க்ராஸ் போன்ற அமைப்புகளை அனுமதித்தால் அவர்களுக்கு நேரடியாக உதவி அனுப்பலாம்


திருமலை(8:38:22am): இங்குள்ள பலருக்கும் யாருக்கு அனுப்புவது என்பதில் சந்தேகங்களுகும் குழப்பங்களும் உள்ளன


மூர்த்தி(8:38:27am): டி.ஆர்.ஓ என்ற அமைப்புக்குத் தானே பத்ரி அனுப்பினார்


மூர்த்தி(8:38:46am): அது அரசு புலிகள் சாரா தன்னார்வ தொண்டு அமைப்பு


திருமலை(8:38:55am): அது புலிகளின் ஒரு அமைப்பு என்ற சந்தேகம் பலரையும் உதவி செய்யத் தயங்க வைக்கிறது


மூர்த்தி(8:39:14am): அப்படித்தான் பலரும் சொல்கிறார்கள்


மூர்த்தி(8:39:28am): ஆனால் அதில் சிங்கள உறுப்பினர்களும் இருக்கிறார்கள்


திருமலை(8:39:50am): அதனால்தான் அங்கு சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ரெட் கிராஸ் போன்ற அமைப்புகள் அங்கு சென்று செயல் பட வேண்டும்


மூர்த்தி(8:39:57am): புலிகளின் நடவடிக்கைகளில் அவர்கள் தங்களை பிணைத்தது இல்லை என படித்தேன்


மூர்த்தி(8:40:02am): ஆமாம்


மூர்த்தி(8:40:14am): செஞ்சிலுவைச் சங்கம் இருக்கிறதா என தெரியவில்லை


திருமலை(8:40:21am): இருக்கலாம், நமக்குத் தெரிவதில்லை, வதந்திகள்தான் அதிகம் வருகின்றன


மூர்த்தி(8:40:46am): அப்படியே அதனிடம் நாம் அளித்தாலும்கூட சென்று சேரும் உதவிகள் யாவும் அரசிடம்தான் போகிரதாம்


மூர்த்தி(8:41:01am): தமிழ்ப் பகுதிகளுக்கு செல்வதில்லையாம்


திருமலை(8:41:23am): குழப்பமான நிலைமைதான்


மூர்த்தி(8:41:28am): ஆமாம்


மூர்த்தி(8:41:46am): போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுனாமியின் தாக்கம்


மூர்த்தி(8:41:52am): தமிழகம் பரவாயில்லை


திருமலை(8:41:53am): சரி மூர்த்தி, மீண்டும் பிறகு கலந்து கொள்கிறேன்


மூர்த்தி(8:42:09am): உதவி நிதிகள் அரசிடமிருந்து சென்று சேரத் தொடங்கி உள்ளதாம்


திருமலை(8:42:09am): இங்கு நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளை விளக்குகிறேன்


மூர்த்தி(8:42:13am): சரி


பிகேசிவகுமார்(10:36:16am): அருள்குமரன் வலைப்பதிவில் நேற்று காலை விவரங்கள் உள்ளன


ஐயப்பன்(10:36:33am): ஓ உரல் ??


பிகேசிவகுமார்(10:37:08am): http://www.shockwave-india.com/tamil/blog/


நேச குமார்(10:52:44am): டிடானியம், இல்லிமேட் போன்ற கனிமங்களை கொண்டுவந்து நாகப்பட்டினம் பகுதிகளில் அடித்துள்ளது சுனாமி, டன் கணக்கில்


பிகேசிவகுமார்(10:53:16am): எங்கிருந்து இவற்றை எடுத்துக் கொண்டு வந்தது


நேச குமார்(10:53:20am): அங்கு செவைபுரிந்து வரும் எனது நன்பர் கூறியிருந்தார்


பிகேசிவகுமார்(10:53:23am): ஏதும் தொழிற்சாலைகள் அருகில் உள்ளனவா


நேச குமார்(10:53:26am): இரண்டாவது அலை அடித்தபோது கறுப்புக்கலரில் குழம்பை கொண்டுவந்து


நேச குமார்(10:54:00am): அடித்தது, அதில்தான் கண்பார்வை பாதிக்கப் பட்டது என்று


பிகேசிவகுமார்(10:54:08am): அல்லது, இவை பூகம்ப லாவாவிலிருந்து வந்தனவா


நேச குமார்(10:54:14am): கடல் களிமண் அது, அதில் இந்த மினரல்கள்


பிகேசிவகுமார்(10:54:24am): gotcha


நேச குமார்(10:54:27am): இல்லை, கடலுக்கு அடியாழத்திலிருந்து புரட்டியதால்


பிகேசிவகுமார்(10:54:47am): நன்றி. புரிந்தது.


பிகேசிவகுமார்(10:54:57am): கேட்க கஷ்டமாக இருக்கிறது


நேச குமார்(10:55:02am): இந்த மினரல்கள் கண்ணுக்குள் போவதால் இப்படிப் பட்ட பாதிப்புகள் நிகழ்ந்துள்ளதா எனத் தெரிய வில்லை


பிகேசிவகுமார்(10:55:09am): ம்ம்ம்


நேச குமார்(10:55:25am): நேரில் பேசும்போது கேள்விப்பட்ட விஷயங்கள் ரொம்பவே கஷ்டப் படுத்தின


நேச குமார்(10:55:58am): நாகூர் , சாமந்தாம் பேட்டையில் பணிபுரிந்து வருகின்ற சிலரிடம் நேற்றுப் பேசினேன்


நேச குமார்(10:57:38am): அமிர்தானந்தமயி ஆசிரமத்துக்காரர்கள் மிகவும் சிறப்பாக பணிபுரிகிறார்கள் என்றார்கள், 7000 பேருக்கு மூன்று வேளை சாப்பாடு போடுகிறார்களாம்


நேச குமார்(10:58:05am): ஷெல்டர்ஸ் கட்டிக் கொடுக்கும் பணியையும் நேற்று துவக்கி இருக்கிறார்கள்


பிகேசிவகுமார்(10:58:33am): ஓ. அப்படியா


நேச குமார்(10:58:53am): ஆம், எல்லோரும் புகழ்ந்து சொன்னார்கள்,


பிகேசிவகுமார்(10:59:02am): பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்கள் யாராக இருந்தாலும் பாராட்ட வேண்டும்


நேச குமார்(10:59:02am): நல்ல சுத்தமான வேலை


நேச குமார்(10:59:25am): ஆம், ஜெயமோகன் குறிப்பிட்டிருந்தது பொலவே


நேச குமார்(10:59:46am): முஸ்லீம் அமைப்பு ஒன்றும் நல்ல பணி செய்துள்ளது


பிகேசிவகுமார்(11:00:19am): எங்கே நாகப்பட்டினம் பகுதியிலா?


நேச குமார்(11:00:45am): முதலில் கொஞ்சம் மனவருத்தம் இருந்திருக்கிறது, கிறிஸ்துவ அமைப்புகள் பாரபட்சமாக செயல்பட்டன என்று. ஆனால் அவர்கள் நிலையையும் பார்க்க வேண்டும். ஏராளமான டூரிஸ்டுகள் வேளாங்கன்னியில் உ


நேச குமார்(11:01:10am): நாகை மற்றுமல்லாது குளச்சல் பகுதியிலும்


பிகேசிவகுமார்(11:01:32am): உங்களுக்குக் கிடைத்த தகவல்களை ஒரு மடலாகக் குழுமங்களில் போடுங்களேன்


ஐயப்பன்(11:06:45am): நேசகுமார் இருக்கீங்களா


ஐயப்பன்(11:07:11am): இங்க சொன்னதை நீங்க மரத்தடில கட்டுரையா எழுதலாமே



'வாசன்' வருகை [Tue Jan 11 11:10:47 GMT+0800 2005]

நேச குமார்(11:11:06am): எழுதுகிறேன் ஐயப்பன், முதலில் எல்லா விவரங்களையும் கேட்டு, என்னளவில் எல்லாவற்றையும் ஒன்றுக்கு இரண்டுமுறை உறுதிப்படுத்திக் கொண்டு பின் எழுதுகிறேன்


இர.அருள்குமரன்(12:49:16am): இங்கே இந்திய நேரம் இரண்டு மணியளவில் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. நண்பர்கள் அந்நேரம் வரவும்


நேச குமார்(9:44:17pm): கண் பிரச்சினை பற்றித் தெரிவித்த நன்பரிடம் மீண்டும் இன்று பேசினேன். அது கிருமிகளால் தான் நிகழ்ந்துள்ளது என்றும், சரியாகிவிடும் என்றும் சோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர் என்று கூறினார். அநேகமாக எதாவது ஐ இன்·பக்ஷன் போலிருக்கிறது. கண் பார்வை மங்கலாகத் தெரியவே பார்வையே போய்விட்டது என்று சிறுவர்கள் தெரிவித்திருக்கின்றனர் போலிருக்கிறது.

இதற்கிடையில், அவர்கள் எல்லோம் கறுப்புக் கலரில் மண் அடித்தது என்று தெரிவித்ததையும், இன்று செய்தியில் டன் கணக்கில் டைடானியம், இல்லிமேட் போன்ற மினரல்கள் நாகப்பட்டினம் பகுதிகளில் சுனாமியால் கடலின் அடியாழத்திலிருந்து கொண்டு வந்து போடப்பட்டுள்ளது என்பதையும் கண்டு, நியூக்ளியர் மெடிசின் தெரிந்த நன்பர் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டேன்.

அவர் அதற்கு, டைட்டானியம் கண்ணுக்குள் போயிருந்தாலும் பிரச்சினை இல்லை. மண் உறுத்தலால் தான் பாதிப்பு ஏற்படுமே தவிர, மற்றபடி ஆபத்து எதுவுமே இல்லை என்று தெரிவித்தார்.




சுனாமி அரங்க சந்திப்பு நேரப் பட்டியல்

(இந்திய நேரப்படி)

திங்கள்காலை6:00மதியம்3:30
செவ்வாய்காலை8:00மாலை5:30
புதன்காலை10:00மாலை7:30
வியாழன்காலை12:00இரவு9:30
வெள்ளிமதியம்2:00இரவு11:30
சனிமாலை4:00 அதிகாலை1:30
ஞாயிறுமாலை6:00 அதிகாலை3:30

நேரப் பட்டியல் பலரையும் ஒரே நேரத்தில் திரட்டுவதற்காக மட்டுமே குறிப்பிடப்படுகிறது. மற்றபடி அரங்கம் எல்லா நேரங்களிலும் திறந்தே இருக்கும். எனக்கு தோன்றியபடி நேரத்தை குறித்திருக்கிறேன், மாற்றம் வேண்டுவோர் எனக்கு மடலிடவும். அல்லது பின்னூட்டம் கொடுக்கவும்

Tuesday, January 11, 2005

சுனாமி அரங்க உரையாடல்கள்-2

ஜனவரி 10, 2005 திங்கள் அன்று சுனாமி மீட்பு உதவி அரங்கத்தில் நடந்த உரையாடல்கள்

ரோஸாவசந்த்(0:03:43am): எனக்கு மூக்கிய கரிசனமாய் தாய் தந்தை இழந்த குழந்தைகள் பிர்ச்சனை


வாசன்(0:04:03am): அருள் & தமிழகத்தில் இருக்கும் அன்பர்கள் கவனத்திற்கு: சில வருடங்களுக்கு முன் கோவையில் பேருந்தில் எரிக்கப்பட்ட மாணவிகள் நினைவாக நினைவு அறக்கட்டளை ஏற்படுத்தினோம்,பல இணையத்தமிழர்கள் ஒன்று கூடி..அ.கட்டளை ஏற்படுத்த தமிழக நண்பர்கள் பட்ட இன்னற்கள் பல.உங்களில் யாராவது இதுபோல செய்யவிருந்தால் நிறைய யோசித்து செய்யுங்கள்.தமிழக இணைய நண்பர்கள்,இராம.கி,நாக.இளங்கோவனிடம் பேசுவது உதவும்..


ரோஸாவசந்த்(0:04:06am): நிலமை குறித்து மதுரபாரது


உஷா(0:05:04am): ஆமாம் குழு என்று ஆரம்பித்தால் பிரச்சனை செய்ய நாலுபேர்கள் கிளம்புவார்கள்


ரோஸாவசந்த்(0:05:08am): சரி வாசன்


ஆசிப் மீரான்(0:14:13am): நாங்க 5 கண்டய்னர் துணி அனுப்பினோம்


ஆசிப் மீரான்(0:14:39am): ஒரு கண்டய்னர் நிடோ பால் பொடி, ஒரு கண்டய்னர் கல்பா மினரல் த்ண்ணீர்


உஷா(0:14:43am): இங்க மினரல் வாட்டர் அனுப்பினோம்


ஆசிப் மீரான்(0:16:44am): 40 000 பெருடைய 1/2 நாள் சம்பளம்


ஆசிப் மீரான்(0:16:56am): இது போக 10 கண்டய்னர் பிஸ்கட்டுகள்


ரோஸாவசந்த்(0:17:11am): நேசகுமார் சொன்ன செய்தி பத்தி மேல ஏதாவது தெரியுமா? இ.பிர


ஆசிப் மீரான்(0:17:15am): எப்படியும் ஒரு கோடி தொடும்


உஷா(0:17:33am): நல்லது


ஆசிப் மீரான்(0:17:34am): ஈ டி ஏ நிறைய செஞ்சாங்க


இகாரஸ்(0:18:17am): நேசகுமார் சொன்னதை நான் எந்த செய்தித் தாள்லேயும் படிக்கலை .வசந்த். இது வதந்தியா இருக்க வாய்ப்பு இருக்கு,


ரோஸாவசந்த்(0:18:33am): இல்ல அவர் இங்க வந்து உறுதிபடுத்தினார்;


உஷா(0:18:47am): இங்கயும் பழைய துணின்னாங்க,


இகாரஸ்(0:18:49am): ஏதாச்சும் லிங்க் தந்தாரா?


இகாரஸ்(0:18:57am): இருந்தா போடுங்க


ரோஸாவசந்த்(0:19:06am): இல்ல அவரௌக்கு போன்ல சொன்னங்களாம்


இகாரஸ்(0:20:24am): யாருக்காவது ஐடியா இருக்கா? அதாவது, இதுவரைக்கும் கலக்ட் ஆன பணத்தை, மக்களுக்கு எப்படி, எந்த விதமாம் விநியோகம் பண்ணுவாங்கன்னு?


இகாரஸ்(0:20:48am): மத்திய/மாநில அரசு


font color="#55007F">ஆசிப் மீரான்(0:20:59am): ஈடிஏ அனுப்பியது அவங்களோட சென்னை அலுவலகம் மூலமாக


இகாரஸ்(0:22:29am): அம்மா, 5000 கோடி ரூபாய்லே ஒரு மகா சுவர் ஒண்ணு, கடலோரமா கட்டப் போறதா செய்தி வந்திருக்கு. இது சாத்தியமா?


ஆசிப் மீரான்(0:22:31am): கடைசியில ஏடியாநெட் ரேடியோ, சார்ஜா இந்தியன் அசோசியேசன்னு அமைப்புகள் தனியா வேலை செய்ய ஆரம்பிச்ச ஒரு வாரத்துக்கபுறம் சாவகாசமா கூட்டம் போட்டாங்க


வாசன்(0:22:40am): ஆசிப்,அரசாங்கத்தை நம்பி,நம்பி வாழ பழகிக்கொண்டதுதான் பெரும் பிரச்னை ;(


ஆசிப் மீரான்(0:22:56am): அப்படியில்ல வாசன்


ஆசிப் மீரான்(0:23:07am): இங்க யாரும் ப்ணம் பிரிக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்கு


உஷா(0:23:16am): ஆசிப், கல்பால இருந்தீங்க இல்லே, அங்க மட்டும் இப்படி அலையடிக்கும் இல்லையா


ஆசிப் மீரான்(0:24:12am): தூத்ரகம் அனுமதித்தால் பணம் வசூலிக்கலாம்


ஆசிப் மீரான்(0:24:32am): அதனால்தான் அரசாங்கத்தை நம்பி தொலைய வேண்டியதாப் போச்சு


ரோஸாவசந்த்(0:26:02am): அம்மா, 5000 கோடி ரூபாய்லே ஒரு மகா சுவர் ஒண்ணு, கடலோரமா கட்டப் போறதா செய்தி வந்திருக்கு. இது சாத்தியமா? எனக்கு அப்படி தோணலை நம்ம் ஊருக்கு ச்வரிபாடத்


ஆசிப் மீரான்(0:26:43am): மலையாளிகள் பணம் சேர்த்து கேரள கரையோரமா அனுப்பிட்டாங்க


இகாரஸ்(0:26:49am): இதையெல்லாம் அறிவிக்கும் போது, சம்பந்தப் பட்ட துறை வல்லுனர்களை எல்லாம் கலந்து ஆலோசிச்சு சொல்ல மாட்டாங்கெளோ?


ரோஸாவசந்த்(0:26:54am): அதுல ஆச்சரியமா


ஆசிப் மீரான்(0:27:31am): குறிப்பா பணமா அனுப்பாம கம்பளி, தற்காலிகமா தங்க வசதிக்கான உபகரணங்கள் எல்லாமா அனுப்பிட்டாங்க


உஷா(0:28:31am): நேத்து ராமேஸ்வரம் திருவள்ளுவர் சிலையை ஒரு விநாடி மறைத்தது அலை. நூத்தி முப்பது அடி


உஷா(0:29:24am): சாரி, கன்யாகுமரியில்


காசி(0:57:41am): நேரடியான உதவிகள் தான் (விவேக் ஓபராய் மாதிரி) மக்களுக்கு உடனடித்தேவைன்னு நினைக்கிறேன்


ஐயப்பன்(0:57:56am): திருமலை ராஜன் கூட எதுவோ நிதி திரட்டிட்டு இருக்கார்னு கேள்விபட்டேன்


காசி(0:58:37am): எனக்குத் தெரியலை. நான் என் மனதுக்கு சரிஉஎன்று பட்ட நிதியை


காசி(0:59:00am): aidindia.org and TRO ரெண்டுக்கும் அனுப்பினேன்


காசி(1:00:16am): மத்தபடி தமிழ்மணம் தளத்தின்மூலமா எதாவது செய்தி அளிப்பது மாதிரி எதாவது யாருக்காவது யோசனை இருந்தா என்னால் உடனடியா செய்யமுடியும்


இர.அருள்குமரன்(10:01:18am): http://www.shockwave-india.com/tamil/tsunami/


இர.அருள்குமரன்(10:01:43am): அங்கே தரவிறக்கம் செய்ய சுட்டி உள்ளது


இர.அருள்குமரன்(10:01:58am): உதவி குறிப்புக்களையும் படிக்கவும்


பிகேசிவகுமார்(10:02:23am): செய்துவிட்டேன்


பிகேசிவகுமார்(10:03:56am): சொல்லுங்க
குழுமத்தில் என்ன செய்ய வேண்டும் நான்?

இர.அருள்குமரன்(10:04:18am): இயக்கிய பின் அது system trayல் அமர்ந்துகொள்ளும்


இர.அருள்குமரன்(10:04:29am): இயக்கிவிட்டீர்கள் தானே?


பிகேசிவகுமார்(10:04:34am): ஆமாம்


இர.அருள்குமரன்(10:04:58am): குழுமத்தில் நேர அறிவிப்பு செய்தால் அனைவரையும் ஒரே நேரத்தில் பிடிக்கலாம்


பிகேசிவகுமார்(10:05:05am): ஆமாம்


பிகேசிவகுமார்(10:05:41am): முக்கியமாய், அமெரிக்க நண்பர்கள் வார விடுமுறையில் செய்ய வேண்டிய விஷயங்களை முன்னரே திட்டமிட்டு விடுவார்கள். எனவே, முன்கூட்டியே சொல்லிவைத்து அழைப்பது நல்லது


பிகேசிவகுமார்(10:06:17am): அப்புறம், ஒருத்தரும் சனி, ஞாயிறு காலைகளில் விமானம் பிடிக்கிற வேலை தவிர வேறு வேலைகளுக்கு 8 அல்லது 9 மணிக்கு முன் எழுந்திருக்க மாட்டார்கள்


இர.அருள்குமரன்(10:27:32am): port 80யில் இயங்க ஆவன செய்திருக்கிறேன். அலுவலகத்தில் சோதித்துப் பாருங்கள்


இர.அருள்குமரன்(10:29:35am): இனி உங்களுக்கு உரையாடல் கோப்புகளும் பதிவாகிவிடும்


இர.அருள்குமரன்(10:30:46am): சென்னை வாசிகளை ரஜினி ராம்கியை தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கிறேன்


பிகேசிவகுமார்(10:30:49am): இது நல்ல விஷயம். ஓர் அரங்கத்தை இப்படி எப்போதும் வைதிருக்கலாம்.


பிகேசிவகுமார்(10:31:04am): நான் ஒருமணி நேரம் முன்னர் ரஜினி ராம்கியுடன் தொலைபேசியில் பேசினேன்


இர.அருள்குமரன்(10:31:33am): அவர் எப்போது வருவார் என தெரிந்தால் மற்றவர்களுக்கும் அறிவித்துவிடலாம்


இர.அருள்குமரன்(10:31:42am): கொடுங்கள்


பிகேசிவகுமார்(10:31:47am): அரங்கத்துக்கா?


இர.அருள்குமரன்(10:31:54am): ஆம்


பிகேசிவகுமார்(10:32:01am): 12ஆம் தேதி கரூர் சென்று பெட்ஷீட்கள் வாங்கப் போகிறேன் என்று சொன்னார்


இர.அருள்குமரன்(10:39:41am): F2 உபயோகித்தால் மொழி மாற்றலாம்


இர.அருள்குமரன்(11:08:07am): ரஜினி ராம்கி இந்திய நேரம் 12:30க்கு அரங்குக்கு வர இருக்கிறார்


பிகேசிவகுமார்(11:08:32am): மதியம்?


இர.அருள்குமரன்(11:08:33am): அவரை பேசச் சொல்லி கேட்பதாக இருக்கிறோம்


இர.அருள்குமரன்(11:08:35am): ஆம்


பிகேசிவகுமார்(11:09:31am): என் நேரம் அப்போது இரவு 1:30 மணி


பிகேசிவகுமார்(11:09:43am): எனவே, நீங்கள் அவருடன் பேசி முடிவெடுங்கள்


இர.அருள்குமரன்(11:10:25am): அவர் அங்குமிங்கும் அலைய இருப்பதால் அவருடைய நேர வசதியே முக்கியம் என நினைத்தேன்


பரி(11:13:47am): ·பயர் பாக்ஸ்-ல என்டர் கீ தட்டினா போஸ்ட் ஆகாம இன்னொரு லைன் போடுது


இர.அருள்குமரன்(12:04:40am): இந்திய நேரம் 12:30க்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்த்த ரஜினி ராம்கி இந்த அரங்குக்கு வர இருக்கிறார்


இர.அருள்குமரன்(12:05:24am): அந்த நேரம் வந்தால் நிறைய ஆட்கள் இருப்பார்கள்


மூர்த்தி(3:06:32pm): சிங்கை வாழ் நண்பர்கள் சார்பாக நாம் என்ன செய்யலாம் அருள்குமரன்?


இர.அருள்குமரன்(3:06:44pm): யோசனை சொல்லுங்கள்


மூர்த்தி(3:07:17pm): ரஜினிராம்கி முன்னர் ஒரு யோசனை சொன்னார்


ரோஸாவசந்த்(3:07:38pm): ஒரு கிராமத்தை தத்து எடுப்பதாக..


இர.அருள்குமரன்(3:08:22pm): நண்பர் நேசமுடன் வெங்கடேஷ் அவர்கள் ரஜினி ராம்கியை தொலைபேசியில் அழைத்து அரங்கில் நுழையும்படி சொல்லப்போகிறார்


இகாரஸ்(3:13:07pm): பெட்ஷீட் விநியோகம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சதா ராம்கி?


J. ரஜஜஜஜ்னி ராம்கி(3:13:15pm): usha madam... unga amount vanthudutchu...


J. ரஜஜஜஜ்னி ராம்கி(3:13:39pm): illai prakash.. going to distribute on 13th


J. ரஜஜஜஜ்னி ராம்கி(3:15:25pm): நண்பர்களே, எல்லோரும் உங்கள் கருத்தை சொல்லுங்கள்.. என்ன செய்யலாம்?


உஷா(3:15:54pm): ராம்கி, பணத்தை உங்கள் செள்கரியம் போல உபயோகிச்சிக்குங்க


மூர்த்தி(3:16:20pm): தாங்கள் முன் சொன்ன ஐடியா என்ன ஆச்சு ராம்கி


J. ரஜஜஜஜ்னி ராம்கி(3:16:29pm): கையிருப்பு நிலவரம் பற்றி என்னுடைய பிளாக்கில் எழுதியிருக்கிறேன். போதுமான பணம் இருக்கிறது. நன்றி


J. ரஜஜஜஜ்னி ராம்கி(3:16:47pm): மூர்த்தி எதை சொல்கிறீர்கள்?


இகாரஸ்(3:17:47pm): ராம்கி, வாலண்டியர்ஸ் எல்லாம் இன்னும் நாகையிலே இருக்காங்களா?


இகாரஸ்(3:18:17pm): இல்லே முழுசா அரசாங்கம் டேக் ஓவர் பண்ணிகிடுச்சா?


J. ரஜஜஜஜ்னி ராம்கி(3:18:23pm): இருக்காங்க.. அறுசுவை பாபுவை தொடர்பு கொண்டேன். மீட்பு நடவடிக்கைகள் முடிந்துவிட்டன


மூர்த்தி(3:18:31pm): கிராமம் தத்து எடுப்போம் எனச் சொன்னீர்களே ராம்கி


இகாரஸ்(3:18:59pm): நிவாரணப் பணம் எல்லாம் எப்ப அவங்க கைக்கு கிடைக்கும்னு எதனா ஐடியா இருக்கா?


J. ரஜஜஜஜ்னி ராம்கி(3:19:14pm): மூர்த்தி, இப்போதைக்கு நிறைய உதவிகள் குவிகின்றன. கொஞ்ச காலம் பொறுத்து செய்தால் நிஜமாகவே பாதிக்கப்பட்டவர்களை நாம் அணுக முடியும்


ஷைலஜா(3:20:06pm): ரஜனி ராம்கி எப்படி அங்கு நிலமை?


ரஜினி ராம்கி(3:20:29pm): ரொம்ப மோசமில்லை மேடம்


ரோஸாவசந்த்(3:20:40pm): ரஜினி சொலறது சரின்னு படுது "|C!io C!Ao |A!UoD |oo?!o ?‘?A!C˜A A!?‘iCoAd?A€CNC ?!o நூIC OEOo"


ஷைலஜா(3:21:09pm): நாங்க இங இந்தியால இருக்கிறவங்க யாரும் உங்களுக்கு உதவ அங்கே வரணுமா ரஜனி ராம்கி?


ரஜினி ராம்கி(3:21:36pm): நான் பார்த்தவரையில் சந்தரபாடி என்கிற கிராமம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது காரைக்காலுக்கு அருகாமையில் உள்ளது.


தேவையில்லை வசந்த்.. ஆட்கள் இருக்கிறார்கள்



ரோஸாவசந்த்(3:21:37pm): எதையும் முயற்சிக்க்க்ல


உஷா(3:22:10pm): ராம்கி நீங்கள் கண்டதை தொடர்ந்து டைப் அடியுங்கள்


ஷைலஜா(3:22:26pm): ரஜனி ராம்கி பெண்கள் அங்கு குழந்தைகளை இழந்த நிலையில் எப்படி உள்ளனர்


ரஜினி ராம்கி(3:22:35pm): காணும் இடங்களெல்லாம் நிறைய உதவிகள். குவிகின்றன. நிறைய இடங்களில் நம்மை நொந்து போக வைக்கிறார்கள்


இர.அருள்குமரன்(3:22:44pm): ஏன்?


இகாரஸ்(3:22:47pm): என்ன பிரச்சன?


ஷைலஜா(3:22:51pm): நொந்து போகவா எப்படி


ரோஸாவசந்த்(3:22:54pm): அதே


ரஜினி ராம்கி(3:23:13pm): பெரிதாக பிரச்னையில்லை. பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டன. தமிழக அரசு புதிதாக காப்பகங்கள் கட்டப்போவதாக சொல்லியிருக்கிறது. ஆனாலும் நாளாகும்


இகாரஸ்(3:23:29pm): நொந்து போகும் படிஎன்ன் ஆச்சு?


ஷைலஜா(3:23:38pm): அதான் என்ன அது


ரஜினி ராம்கி(3:23:49pm): நொந்து போவது என்றால்.... கர்நாடகாவிலிருந்து சிலர் சப்பாத்திகளை பார்ஸல் பண்ணிக்கொண்டு லாரிகளில் வந்திருந்தார்கள்


இகாரஸ்(3:24:10pm): கஷ்டம் தான்


இர.அருள்குமரன்(3:24:14pm): ம்...


ரஜினி ராம்கி(3:24:17pm): மக்கள் எங்களுக்கு அதெல்லாம் வேண்டாம்.. கறி, மீன் இருந்தால் கொடுங்கள், இல்லாவிட்டால் வேண்டாம் என்றார்கள்


இர.அருள்குமரன்(3:24:27pm): இது கொடுமை


ஷைலஜா(3:24:33pm): இது நியாயமா என்ன


ரோஸாவசந்த்(3:24:36pm): எனக்கு அது தப்பாய் தெரியவில்லை


இகாரஸ்(3:24:38pm): கண் பிரஷ்சனை வருகிறது என்று சொல்கிறார்களே?


ரஜினி ராம்கி(3:24:45pm): நிறைய உதவிகள், ஆனால் முறைப்படுத்ததான் ஆட்கள் இல்லை


ரோஸாவசந்த்(3:24:46pm): அது உண்மையா


மூர்த்தி(3:24:50pm): ஆமாம். அதுவரைக்கும் அவர்களுக்கு தங்குமிடம் பிரச்னையாகும்.


மூர்த்தி(3:24:52pm): கோவில்கள் கூட தற்காலிகத் தீர்வுதானே...


ரோஸாவசந்த்(3:24:56pm): நேசம் சொன்னது


நம்பி(3:25:02pm): எனக்கும் அது தவறாய் தெரியவில்லை.


ஷைலஜா(3:25:28pm): பசிக்கு ஏதோ உணவெனக் கொள்ளாலாமே சப்பத்தியையும்


ரஜினி ராம்கி(3:25:31pm): நானும் தவறாக நினைக்கவில்லை. ஆனால், கொடுப்பதை மனமுவந்து வாங்கிக்கொள்ளலாம் இல்லையா!


இர.அருள்குமரன்(3:25:38pm): ஆம்


ஷைலஜா(3:25:52pm): கொடுப்பவர்கள் மனம் வருந்தும் அல்லவா


இகாரஸ்(3:26:01pm): ஆனால், அந்த நிலமையில், அவர்களது உள இயலையும் சற்று சிந்திக்க வேண்டும்


ரஜினி ராம்கி(3:26:08pm): அப்புறம் நாம் கொடுத்த தேங்காய் எண்ணெய், சோப் வகையறாக்கள் நிறையவே பயன்பட்டன


இர.அருள்குமரன்(3:26:09pm): கொடுக்க நினைத்து சிரமமெடுத்து வந்தவர்கள் நொந்துபோவது நல்லதல்ல


ரோஸாவசந்த்(3:26:13pm): அவர்களுக்குஎன்ன வேண்டும் என்று கேட்டு கொடுப்பதே நல்லதுஎ ன்று தோன்றுகிறது. அளவுக்கு மீறி உதவிகள் வரும்போது இப்படி பிரச்சனை வரெஉம்]


நம்பி(3:26:18pm): இங்கு கொடுபபவரைவிட வாங்குபவர் முக்கியம்.


இர.அருள்குமரன்(3:26:20pm): ஆம்


ஷைலஜா(3:26:36pm): ஒரு வகையில் நம்பி சொல்வதும் சரிதான்


ரஜினி ராம்கி(3:26:47pm): பெரும்பாலும் ஒவ்வொரு தெருக்களிலும் உதவியாய் வந்த பழைய துணிகளை குவித்து வைத்திருக்கிறார்கள். அதுவே பெரிய தொல்லைதான்!


ஷைலஜா(3:27:07pm): அதை யாரும் யூஸ் செஞ்சிக்கலயா


மூர்த்தி(3:27:14pm): மோசமாகக் கிழிந்த துணிகளும் இருந்தன என படித்தேன்.


நம்பி(3:27:21pm): ஆமாம். ஜெ.மோ கூட எழுதியிருந்தான், பழைய துணிகள் பற்றி


ரோஸாவசந்த்(3:27:26pm): அது ஜெயா சொனதுப் போல நம் மக்களின் அலபதனத்தையும் காட்டுகிறது


நம்பி(3:27:35pm): சாரி... இருந்தார்


ரஜினி ராம்கி(3:27:57pm): போன ஞாயிற்றுக்கிழமை பத்ரியுடன் பேசும்போது பள்ளிக்குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் வாங்கிக்கொடுக்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், சாயந்திரமே ஜெயா டிவியில் ப்ளாஷ், அரசே பாட புத்தகங்களை வழங்கும் என்று


நம்பி(3:27:58pm): ஜெ.மோ. எழுதியிருந்தார்


இகாரஸ்(3:28:21pm): ஆனால், இதெல்லாம் கைக்குக் கிடைக்க எத்தனை நாட்களாஅகும்?


ரோஸாவசந்த்(3:28:32pm): ரஜினி, குழந்தைகளை தத்து எடுப்பவ்ர்கள் இருக்கிறார்களா?


ரஜினி ராம்கி(3:28:43pm): பிரகாஷ் கண்பிரச்னை பற்றி தெரியவில்லை. ஆனால், மீடியா நிறைய புரளியை கிளப்புகிறது.


இகாரஸ்(3:28:55pm): நான் கூட அப்படித்தான் நினைத்தேன்


ரோஸாவசந்த்(3:28:56pm): நானும் செய்தி படிக்கவில்லை


நம்பி(3:28:56pm): ராம்கி: குழந்தைகள் நிலை எப்படி?. பெற்றோரை இழந்த குழந்தைகள் அதிகமா?


மூர்த்தி(3:29:02pm): கண் பிரச்னை வேறு பயமுறுத்துகிறது


ரஜினி ராம்கி(3:29:14pm): இல்லை வசந்த். எம்.கே.குமார் கூட கேட்டிருந்தார். ஆனால், அப்படிப்பட்ட குழந்தைகள் நான் பார்த்தவரையில் நிறைய இல்லை


ரோஸாவசந்த்(3:29:27pm): கண் பிரச்சனை நேகு தவிர எங்கேயும் கேள்விபடவில்லை


ரஜினி ராம்கி(3:29:48pm): அரசாங்கமே அனைத்து குழந்தைகளையும் தத்தெடுப்பதாக அறிவித்திருப்பதால், தனியார்கள் தத்தெடுப்பது கொஞ்சம் கஷ்டமான காரியம்


இகாரஸ்(3:30:02pm): நேசம்வந்தால், எங்கிருந்து அந்தச் செய்தியைப் ப்டித்தீர்கள் என்று கேட்கவும்


ரோஸாவசந்த்(3:30:05pm): பாலாஜி பாரி பதிவில் பாலு என்பவர் 15 நாட்கள் குழந்தைகள் 2 இருந்ததாக சொல்கிறார்.


மூர்த்தி(3:30:05pm): ஆமாம்


நம்பி(3:30:06pm): *நிறைய இல்லை* ?


உஷா(3:30:16pm): இன்று சன் டீவியில் நாகையில் நாற்பது சொச்ச பிள்ளைகள் அனாதை ஆகியிருக்கின்றன. தன்னார்வ நிறுவனங்கள், தனிமனிதர்களை பார்த்துதான் தத்து தரப்பட்டும் என்று காப்பகத்தில் சொன்னார்கள்


ரோஸாவசந்த்(3:30:26pm): தாய் தந்தை இழந்த 15நாட்கள் குழந்தை


ரஜினி ராம்கி(3:30:58pm): ஒரு சமூக சேவகர் தத்தெடுப்பதில் உள்ள சிரமங்கள் பற்றி என்டிடிவியில் பேசினார்.. கஷ்டமான காரியம்தான்


ஷைலஜா(3:31:01pm): பரிதாபம் இதெல்லாம் இல்லையா ரஜனிராம்கி


மூர்த்தி(3:31:06pm): பாவம். பிறக்கும்போதேவா அக்குழந்தைக்கு இப்படி ஒரு நிலை? இறைவனை என்ன சொல்வது?


ரோஸாவசந்த்(3:31:07pm): என்ன்·அ வகை க்சடம்


உஷா(3:31:13pm): ராம்கி அவசர உதவியாய் 10. 12 வது பிள்ளைகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள் போன்றவை வாங்கி தரலாம். தேர்வு நெருங்குகிறதே


ரோஸாவசந்த்(3:31:38pm): தத்து எடுப்பதில் என்ன வகை பிரச்சனைகள் வரக்கூடும்


இகாரஸ்(3:31:51pm): உஷா, பாட புத்தகங்களை இலவசமாகத் தர உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது


ரஜினி ராம்கி(3:32:02pm): பாடப்புத்தகங்கள் விநியோகம் ஆரம்பமாகிவிட்டது என்றுதான் நண்பர்கள் சொல்கிறார்கள். அப்படி இல்லாவிட்டால் உடனே நாம் களத்தில் இறங்கலாம்


ஷைலஜா(3:32:07pm): நாங்க பெண்கள் கொஞ்சபேரு நேரில் போய் ஆறுதலாப்பேசி முடிந்த உதவி செய்யலாம ரஜனி ராம்கீ


மூர்த்தி(3:32:08pm): நல்ல முடிவு


ரோஸாவசந்த்(3:32:21pm): நல்லது


உஷா(3:32:23pm): ஷைலு, காலையில் காப்பகம் காட்டினார்கள். இரண்ட்ரை வயது குழந்தை குப்புற படுத்துக் கொண்டு, வெறித்த பார்வையுடன். அதன் மனதில் என்ன் எண்ண்ம் ஓடும்?


இகாரஸ்(3:32:27pm): தத்து எடுக்கிறவர்களின் நிஜ நோக்கத்தை உறுதி செய்வது ரொம்ப முக்கியம் வசந்த். ஆகையால்...


ரஜினி ராம்கி(3:32:37pm): ஒரு முக்கியமான விஷயம். திரும்பவும் கடலுக்கு பக்கத்தில் குடிசைகள் கட்டக்கூடாது என்று சொல்லத்தான் ஆளில்லை


இகாரஸ்(3:32:49pm): வெரி குட் ஷைலஜா


இகாரஸ்(3:33:12pm): மொத்தமா சில பேர் இப்படி கிளம்பிப் போகலாம். நான் ரெடி


ரோஸாவசந்த்(3:33:20pm): அது கஷ்டம் என்றுதான் தோன்றுகிறது. குடிசை கட்டகூடது என்பது மட்டுமல்ல, வேறு இடத்தையும் காண்பிக்க வேண்டும்


இகாரஸ்(3:33:25pm): ராம்கியை கூப்பிட்டிக் கொண்டு


ரஜினி ராம்கி(3:33:25pm): கரெக்ட் ஷைலஜா. அதைத்தான் மகளிர் சுய உதவி குழுக்கள் திறம்பட செய்கின்றன. நேரில் பார்த்து நெகிழ்ந்துவிட்டேன். போட்டோ கூட என்னுடைய பிளாக்கில் போட்டிருந்தேன்


ஷைலஜா(3:33:27pm): இகாரஸ் நாங்க என்ன செய்யணும் என சொன்னால் ரெடி நானும்


ஷைலஜா(3:33:55pm): நான் ஷக்தி இங்கேருந்து வரோம்


உஷா(3:34:00pm): இகாரஸ், ராம்கி 24 காலை சென்னையில் இருப்பேன்


ஷைலஜா(3:34:16pm): சென்னை நன்பர்கள்திட்டமிட்டு சொல்லவும்


ரஜினி ராம்கி(3:34:21pm): நான் எப்போதும் ரெடி. இருந்தாலும் இந்த வாரம் நிலைமை எப்படியிருக்கு என்பதை பார்த்துவிட்டு சொல்கிறேன்


இகாரஸ்(3:34:29pm): ஒரு ஷெட்யூல் போட்டுக்கிட்டு, இங்கிருந்து எல்லாம் கிளம்பலாம்


ரோஸாவசந்த்(3:34:36pm): உங்கள் பதிவில் எழுதுங்கள்


ஷைலஜா(3:34:37pm): உஷா இருங்க நீங்க எங்களோட வரீங்களா அப்போ


இகாரஸ்(3:34:38pm): ராம்கி, உங்க செல் நம்பர்


ரோஸாவசந்த்(3:34:49pm): என் பதிவில் இருக்கு


இகாரஸ்(3:34:51pm): ராம்கி....


ரோஸாவசந்த்(3:34:53pm): ராம்கி நம்பொஅர்


ரஜினி ராம்கி(3:35:01pm): வரும் 13ம் தேதி யாராவது ·ப்ரீ என்றால் உடனே எனக்கு சொல்லுங்கள்


ஷைலஜா(3:35:14pm): சரியா ஒரு தேதி சொல்லுங்க நாங்க வரோம் ராம்கி


ரஜினி ராம்கி(3:35:23pm): 94444 53694


உஷா(3:35:33pm): ஷைலு நீங்க எப்ப கிளப்புறீங்க


ரோஸாவசந்த்(3:35:39pm): வாய்ஸ் சேட் என்று வேறு இடத்திற்கு வந்தேன். வாய்ஸ் வசதி இல்லையா?


ஷைலஜா(3:35:40pm): பொங்கல் ஆ மறுநாளே நான் ·ப்ரீதான்


ரஜினி ராம்கி(3:35:50pm): நிச்சயம் சொல்கிறேன். இந்த அமளியெல்லாம் அடங்கட்டும்.. பொறுமையாக போகலாம்


இர.அருள்குமரன்(3:35:54pm): வாய்ஸ் வசதி இருக்கு


இகாரஸ்(3:35:57pm): ஓகே.


ஷைலஜா(3:35:59pm): உஷ உங்க ப்ளான் படி போகலாம் நாம்


ரோஸாவசந்த்(3:36:04pm): என்ன செய்யவேண்டும்?


இர.அருள்குமரன்(3:36:06pm): ஆனால் சிலரிடம் ஸ்பீக்கர் இல்லை


ரோஸாவசந்த்(3:36:10pm): ஓகே


இர.அருள்குமரன்(3:36:20pm): அதனால் பேச்சை நிறுத்திவிட்டோம்


ரஜினி ராம்கி(3:36:24pm): பொங்கல் கழித்துதான் எல்லோருமே ·ப்ரீ ஆவார்கள். எனவே அதற்குபின்னரே வைத்துக்கொள்ளலாம்


ரோஸாவசந்த்(3:36:27pm): சரீ நன்றி


இகாரஸ்(3:36:27pm): யாராவது வலைப்பதிவுலே இதைப் பத்தி எழுதி, அங்கிருந்து எல்லாரையும் ஒன்று சேர்த்துக் கொள்ளலாம்.


இகாரஸ்(3:36:43pm): பொங்கலுக்குப் பிறகு ....


இகாரஸ்(3:36:49pm): நல்ல டயம்


உஷா(3:37:03pm): ஷைலு, இருபத்திஏழு எங்கப்பாவுக்கு எண்பதாவது பிறந்தநாள். அப்பொழுது சென்னையில் இருக்க வேண்டும். அதுக்கு நான் மட்டும் வருகிறேன்


ரஜினி ராம்கி(3:37:14pm): முடிந்தால் இரண்டு நாள் நிகழ்ச்சியாகவே தயார் செய்து பக்கத்திலிருக்கும் பிரபலமான கோயில்கள், இடங்களுக்கும் போய்வரலாம்


ஷைலஜா(3:37:15pm): ஓ வாங்க


இர.அருள்குமரன்(3:37:18pm): இந்த அரங்கத்தையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் நேரடி உரையாடலுக்கு


ஷைலஜா(3:37:29pm): நல்ல திட்டம் ரஜனி ராம்கி


இகாரஸ்(3:37:35pm): நிதானமாக எல்லா இடத்தையும் சுற்றிப் பார்த்து, நிஜமான தேவை என்ன என்று தெரிந்து கொண்டு, வலைப்பதிவுகளில் விளம்பரம் செய்து, உதவிகளைப் பெறலாம்


ஷைலஜா(3:37:50pm): 31 ராஜாக்கு திருமண வரவேற்பு சென்னையில்


இர.அருள்குமரன்(3:37:58pm): இன்னும் இலங்கை நண்பர்களை காணவில்லை


ரஜினி ராம்கி(3:38:05pm): கரெக்ட் பிரகாஷ். பொறுமையாக செய்தாலும் நிறைவாக செய்வோம்


உஷா(3:38:12pm): இன்னும் டிக்கேட் வாங்கவில்லை. ஒருவாரம் அல்லது பத்துநாள். போஸ்ட்போன், ப்ரீ போன் செய்யலாம். ஆனால் அதுக்கு மேலே முடியாது.


ஷைலஜா(3:38:16pm): அதுதான்சரிரனஜிராம்கி


ரோஸாவசந்த்(3:38:17pm): நல்லது


ரோஸாவசந்த்(3:38:42pm): பொறுமையாய் நிதானமாய்7 செய்யலாம்


ஷைலஜா(3:38:42pm): எப்படியும் நீங்க வரப்போ நாம் சேர்ந்து போகலாம் உஷா


ரஜினி ராம்கி(3:38:43pm): இலங்கையை எத்தகைய உதவி தேவை என்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை


ரோஸாவசந்த்(3:39:02pm): புரிந்தாலும் செய்யமுடியுமா என்று பிரச்சம்ன்னை


இகாரஸ்(3:39:17pm): என்ன பிரச்சனை ரோ.வ?


ஷைலஜா(3:39:31pm): ரஜனி ராம்கி உங்களோட யாரார் உதவிக்கு இப்போ வந்திட்டு இருக்க்காங்க


ரஜினி ராம்கி(3:39:32pm): தமிழகத்தில் தேவைக்கு அதிகமான உதவிகள் கிடைக்கின்றன. அந்தமான் மற்றும் இலங்கையைத்தான் நாம் கவனிக்க வேண்டும்


இகாரஸ்(3:39:32pm): ஓ.. இலங்கை பற்றி சொல்கிறீர்களாஅ?


ரோஸாவசந்த்(3:39:34pm): அரசாங்க அனுமதி, புலிகளிடம் போய் சேர்வது


இகாரஸ்(3:39:50pm): ஐ அண்டர்ஸ்டாண்ட் ... @ரோ.வ


ரோஸாவசந்த்(3:39:53pm): ஆமாம் இகாரஸ்


ரோஸாவசந்த்(3:40:14pm): சரி மீண்டும்பழைய கேள்வி.தத்து எடுப்பதில் என்ன வகை பிரச்சனைகள் வரக்கூடும்ம


ரஜினி ராம்கி(3:40:20pm): என்னுடைய சென்னை ரூம்மேட் மற்றும் மயிலாடுதுறை நண்பர்கள்தான் அதிகமான உதவிகள் செய்கிறார்கள். பத்ரி வழிகாட்டுகிறா


உஷா(3:40:26pm): ஷைலு எப்படியும் தனியாகவோ, ரெண்டு மூணுபேராகவோ நாம்ப போக முடியாது. குழுவாய் போனாதாதான் சரிப்படும். மொதல்ல எங்க பேரண்ட் விடமாட்டாங்க


ரஜினி ராம்கி(3:41:06pm): உஷா மேடம், அப்படி போவதாக இருந்தால் ஒரு வேனை வாடகைக்கு அமர்த்தி பத்து பேராகவே போய்விட்டு வரலாம்


ரோஸாவசந்த்(3:41:13pm): வாழ்துக்கள்


ஷைலஜா(3:41:15pm): சரி ரஜனி


ரோஸாவசந்த்(3:41:31pm): நான் இங்கிருந்து நகரமுடியாது


ஷைலஜா(3:41:50pm): மெயில்ல சொல்லிடுங்க எனக்கு அல்லது நான் போன் செஞ்சி உங்களக் கேட்டுக்கறேன்


ரஜினி ராம்கி(3:41:54pm): எல்லோருக்கும் நன்றி. 13ம்தேதி அன்று பிகேஎஸ் கொடுத்த பெட்ஷீட்களை விநியோகித்துவிட்டு விரிவாகவே எழுதுகிறேன்


உஷா(3:41:58pm): டிக்கெட் 15ம்தேதி வாங்குவேன். சொல்லுங்க ஷைலு, ராம்கி நான் ரெடி


ரோஸாவசந்த்(3:42:00pm): சரி, ரஜினி கொஞ்சம் விளக்கமாய் , மீண்டும்பழைய கேள்வி.தத்து எடுப்பதில் என்ன வகை பிரச்சனைகள் வரக்கூடும்ம


ஷைலஜா(3:42:21pm): நல்ல பணி ரஜனிராம்கி பெருமையாக இருக்கு உங்கலப்பார்த்தா


ரஜினி ராம்கி(3:42:37pm): ஷைலஜா, உஷா மேடம், எல்லா நண்பர்களையும் கலந்தாலோசித்துவிட்ட பின்னர் முடிவு செய்யலாம்


உஷா(3:42:44pm): ரோ. வ லீகலாய் நிறைய குழப்பங்கள். அவ்வளவு சுலபமில்லை


ஷைலஜா(3:42:46pm): சரி ரஜனி


ரஜினி ராம்கி(3:42:59pm): நிச்சயம் எழுதுகிறேன் ரோ. வ


ரோஸாவசந்த்(3:43:05pm): அதைத்தான் எழுத முடியுமா என்கிறேன்


ரோஸாவசந்த்(3:43:14pm): எனக்கு ¦புரிந்துகொள்ள


ஷைலஜா(3:43:17pm): பெண்களிடம் பேச உதவி செய்ய நாங்க ரெடி


ரோஸாவசந்த்(3:43:21pm): தேங்க்ஸ்


உஷா(3:43:45pm): வயசு, உங்க பொருளாதாரம், உங்க சொந்த பிள்ளைகள், நீங்க இருக்கும் இடம் .....


ரஜினி ராம்கி(3:44:06pm): முக்கியமான விஷயம். ஆறுமாதம் வரை காத்திருக்க வேண்டுமாம்!


உஷா(3:44:07pm): அதிலும் நீங்க ஜப்பானில் இருப்பதால் மிக கஷ்டம்


ரோஸாவசந்த்(3:44:20pm): நான் அதை கேட்கவில்லை, மற்ற இடத்திலிருந்து, அரசாங்கத்திடமிருந்து, மற்றும் சட்ட ரீதியாய்...


ரஜினி ராம்கி(3:45:44pm): எங்களது இணையத்தளம் சார்பில் (www.rajinifans.com) ஒரு முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. சம்பந்தப்பட்ட பையன் பரம ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். தற்போது மெரிட்டில் மார்க் வாங்கி அரசாங்க கோட்டாவில் மருத்துவ கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். படிப்பு செலவுகளை மட்டும் நாங்கள் கொடுக்கிறோம்


ரஜினி ராம்கி(3:46:04pm): வணக்கம் பத்ரி. எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன்


பத்ரி(3:46:37pm): பி.கே.சிவகுமாருக்கு ஒரு மெயில் அனுப்பிவிடவும்


ரோஸாவசந்த்(3:46:47pm): நான் அனுப்ப்வா?


ரஜினி ராம்கி(3:46:59pm): அனுப்பிவிட்டேன். அவரும் காலையில் போன் செய்தார். பேசிவிட்டேன்.


பத்ரி(3:47:04pm): ஒகே


பத்ரி(3:47:21pm): குட்டி அப்டேட் - இலங்கை பற்றி


ரோஸாவசந்த்(3:47:32pm): ப்ளீஸ்


பத்ரி(3:47:58pm): TRO - கொழும்பு பேசினேன்


ரஜினி ராம்கி(3:48:06pm): சொல்லுங்க பத்ரி. அதைத்தான் எதிர்பார்க்கிறோம்


ரோஸாவசந்த்(3:48:17pm): அந்த மருந்துகள் முடிவில் ப்பொனதா?


பத்ரி(3:48:20pm): என் அலுவலக நண்பரும் பேசினார்.


பத்ரி(3:48:51pm): மருந்துகள் போய்விட்டன. ஆனால் TRO ந்ண்பர்கள் சொல்வது அந்த மருந்துகளை எடுப்பது சிரமம் என்று


பத்ரி(3:48:57pm): ஆனால் முயற்சி செய்கிறார்கள்


பத்ரி(3:49:20pm): டி.ஆர்.ஓ இந்தியாவிலிருந்து காசு கொடுத்து வாங்கும் மருந்துகளையும் அரசு எடுத்துக்கொண்டு தர மறுக்கிறதாம்


ரோஸாவசந்த்(3:49:32pm): எதிர்பார்த்ததுதான்


பத்ரி(3:49:33pm): எனவே என்னை சற்றுப் பொறுக்கச் சொல்கிறார்கள்


பத்ரி(3:49:43pm): மேற்கொண்டு இன்னமும் சில பொருட்கள் என்னிடம் உள்ளன


பத்ரி(3:49:53pm): அவர்கள் சொன்னவுடன் அனுப்பச் சொல்கிறார்கள்


பத்ரி(3:50:06pm): ஆனால் அதற்குள் இன்னமும் பல உயிர்கள் போகலாம்... என்பதுதான் வருத்தமான செய்தி


ரோஸாவசந்த்(3:50:11pm): இது குறித்து தீவிராமாய் ஊடகங்களில் பேசுவதை தவிரா செய்ய அதிகம் எதுவுமில்லை


மூர்த்தி(3:50:18pm): இணைய வேகம் தடை செய்கிறது. தாங்கள் பேசுங்கள். மன்னிக்கவும். காத்திருக்கிறேன்.


ஷைலஜா(3:50:26pm): எங்கே பத்ரி கொழும்புவிற்கா


ரோஸாவசந்த்(3:50:28pm): அரசாங்கம், உல்கைலேயே கொடிஉயi


பத்ரி(3:50:29pm): இந்த நேரத்தில் நடக்கும் தேவையற்ற அரசியல் மிகவும் வருத்தம் தருகிரது


ரோஸாவசந்த்(3:50:31pm): ஜந்து


பத்ரி(3:50:33pm): ஆம்


ஷைலஜா(3:50:38pm):


ரோஸாவசந்த்(3:50:47pm): இது அ·ரசியலாய் தெரியவில்லை,


ரஜினி ராம்கி(3:50:51pm): லேட்டஸ் அப்டேட்

சீர்காழி பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவிகள் வந்து சேரவில்லை என்று புகார். சமாதானப்படுத்தி உதவிப்பொருட்களை சேர்க்க அதிகாரிகள் அவசரமாக இன்று காலை சம்பந்தப்பட் ஏரியாக்களுக்கு சென்றிருக்கிறார்களாம்.



பத்ரி(3:51:22pm): நாகையிலிருந்து பாபுவிடம் பேசினேன்... அங்குள்ள எல்லா மக்களுக்கும் உதவித்தொகை அரசிடமிருந்து வந்துசேர்ந்து விட்டது என்றார்


பத்ரி(3:52:06pm): சொல்லப்போனால் கடந்த மூன்று மாதங்களில் இறந்த சிலரது பெரையும் சுனாமியில் இறந்தவர்கள் என்று சேர்த்து அவர்களுக்குமாக சிலர் உதவித்தொகை வாங்க முயற்சி செய்கின்றனர் என்றும் சொன்னார்


பத்ரி(3:52:39pm): மீனவர்களே இல்லாத சிலரும், மீன்வாங்கப்போனபோது இறந்துவிட்டார் என்று சொல்லி பணத்தைப் பெற முயற்சை செய்கின்றனராம்


ரோஸாவசந்த்(3:53:00pm): இதெல்லாம் நடக்க கூடியதுதான்


ரோஸாவசந்த்(3:53:17pm): எதிர்கொள்ளும்போது எரிச்சலை கிளப்பும்


பத்ரி(3:53:29pm): ஆனால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஒரு வகையில் நிவாரணம் போய்ச்சேர்கிறது என்றார். அவர்களும் வீடுகளைத் திரும்பக் கட்டுவது பற்றி வேலைகளை ஆரம்பித்து விட்டனர்


ரோஸாவசந்த்(3:53:40pm): அதுவே


பத்ரி(3:53:46pm): இன்று பாபு சென்னை வருகிறார். அவரிடம் மேற்கொண்டு பல விஷயங்களைக் கேட்கிறேன்


மூர்த்தி(3:53:50pm): பிடுங்கியவரை லாபம் என நினைக்கும் சிலர்


அலெக்ஸ் பாண்டியன்(3:53:50pm): கடலூரில் உள்ள ஜெயின் சங்கம் இரும்புப் பெட்டி அளிப்பதை நேற்று டிவியில் காண்பித்தார்கள். இது பலருக்கு இப்போது உபயோகப்படும் ஒரு பொருள்


மூர்த்தி(3:53:51pm): வாருங்கள் அலெக்ஸ்,மீனா


பத்ரி(3:53:55pm): முடிந்தால் அவரையும் இந்த மேடைக்கு அழைத்து வருகிறேன்


ரோஸாவசந்த்(3:54:05pm): நீங்கள் படகு, கட்டுமரங்கள் பற்றி எழுதினீர்கள் பத்ரி..


ரோஸாவசந்த்(3:54:18pm): அது குறித்து செய்ய எதுவும் உண்டா?


பத்ரி(3:54:31pm): ஆமாம். அதுதான் அடுத்த பெரிய விஷயம். நான் பாபுவிடம் அந்த படகு/கட்டுமரங்களை இன்சூர் செய்வது பற்று பேசியுள்ளேன்


பத்ரி(3:54:41pm): இரண்டு விஷயங்களைச் செய்ய முடிவு செய்துள்ளோம்


அலெக்ஸ் பாண்டியன்(3:54:44pm): பலர் கொடுக்கும் துணுமணிகள், பணம், இன்ன பிற சாமான்களை பத்திரமாக வைத்துக்கொள்ள இது உதவும்.


ரோஸாவசந்த்(3:55:10pm): இன்ஸ¥ர் இனி,முதலில் புதிய படகுகள் வேண்டுமல்லவா?


பத்ரி(3:55:20pm): இன்சூரன்ஸ் கம்பெனிகளுடன் பேசுவது, குறைந்த வட்டியில் கடன் பெறுவது - இரண்டையும் நாகை எக்ஸ்னோரா கிளப் வழியாக நடைபெறச் செய்வது


பத்ரி(3:55:25pm): ஆமாம்.


ரோஸாவசந்த்(3:55:32pm): நல்லது


பத்ரி(3:55:33pm): அரசு என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை


ரோஸாவசந்த்(3:55:43pm): நாம் செய்யகூடியது ஏதாவது உண்டா?


நம்பி(3:56:02pm): படகுக எவ்வளவு ஆகும்?


அலெக்ஸ் பாண்டியன்(3:56:08pm): இன்றைக்கு சுமத்ராவில் அதிகாலை மறுபடியும் பூகம்பம் என்று ஒரு செய்தி.. இதனால் ஏதேனும் பாதிப்பு உண்டா ?


மூர்த்தி(3:56:13pm): வெளிநாட்டில் இருக்கும் நாம் பண உதவி செய்யலாம்@ரோஸா


ரோஸாவசந்த்(3:56:17pm): பெருசு என்று மட்டும் தெரியும்[


பத்ரி(3:56:23pm): இப்பொழுதைக்குத் தெரியவில்லை. வேண்டுமானால் நாம் சிலர் சேர்ந்து பணம் சேர்த்து சிலருக்கு வட்டியில்லாக் கடன் முறையில் படகுகள் வாங்க வைக்கலாம்


ரோஸாவசந்த்(3:56:36pm): நல்ல ஐடியா?


மூர்த்தி(3:56:42pm): இங்கு செய்திகள் இல்லை@அலெக்ஸ்


பத்ரி(3:56:48pm): மோட்டார் படகு ரூ. 1 லட்சம்


பத்ரி(3:56:51pm): அவ்வளவுதான்


நம்பி(3:56:55pm): பத்ரி, இது நல்ல ஐடியாவாக படுகிறது


ரோஸாவசந்த்(3:56:58pm): ஆனால் கொஞ்சம் ஜாக்கிரதை தேவை


பத்ரி(3:57:18pm): ஆமாம். எது செய்தாலும் உள்ளூர் ஆசாமிகள் - உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் வழியாகச் செய்ய வேண்டும்


உஷா(3:57:21pm): பாங்க், கூட்டுறவு சங்கங்கள் உதவ முன்வரவில்லையா பத்ரி


பத்ரி(3:57:53pm): வங்கிகள், கூட்டுறவுச் சங்கங்கள் எப்பொழுதுமே மீனவர்களை கடனுக்கு அப்பாற்பட்டவர்களாகவே கருதுகின்றன


ரோஸாவசந்த்(3:58:09pm): மீனிங், திரும வராது என்ற·அ?


பத்ரி(3:58:10pm): அவர்களும் பிறரிடம் வட்டிக்குக் கடன்வாங்கியே படகுகளை வாங்குகின்றனர்


பத்ரி(3:58:18pm): அப்படித்தாண் வங்கிகள் னினைக்கின்ற


ரோஸாவசந்த்(3:58:21pm): அண்


பத்ரி(3:58:24pm): ஆனால் அது முட்டாள்தனம்


ரோஸாவசந்த்(3:58:30pm): ஆமாம்


உஷா(3:58:36pm): அநியாய வட்டி


மூர்த்தி(3:59:07pm): கார்டியன் கேட்பார்கள்


பத்ரி(3:59:12pm): ஆனால் மேலிடத்திலிருந்து - சிதம்பரம் ஆணையிட்டால் கடன் கொடுப்பதில் எந்தத் தொல்லையும் இருக்காது


ரோஸாவசந்த்(3:59:13pm): எந்த ஒரு திட்டமும் சிலறால் தவறாய் பயன்படுத்தபடும், அதை வைத்து எளிதான முடிவுக்க வருவதே முட்டாள்தனம்


ரோஸாவசந்த்(3:59:35pm): அரசாங்கம் இலவசாமாய் செய்வதில்லையா எதுவும்


பத்ரி(3:59:43pm): இதுவரை தமிழக அரசியல்வாதிகள் நேரடியாக இதுபற்றி சிதம்பரத்திடம் பேசவில்லை. நான் இதுவரை பேப்பரில் எதையும் பார்க்கவில்லை


பத்ரி(3:59:58pm): அரசு மீன்வலைகளைத் தருவதாகச் சொல்லியுள்ளது


மூர்த்தி(4:00:02pm): ப.சி அவர்களும் பிரதமர் மற்றும் மூத்தவர்கள் சொல்படிதானே நடக்க முடியும்


மூர்த்தி(4:00:20pm): ஆனால் முயன்றால் முடியாததில்லை


பத்ரி(4:00:37pm): இல்லை மூர்த்தி... இதெல்லாம் நிதி அமைச்சர் னிச்சயமாக தானாக முடிவெடுக்கக் கூடிய ஒன்று. ஆனால் அவர் மன்மோகன் சிங்கிடம் பேசுவார்...


மூர்த்தி(4:00:48pm): முக்கியமான சில அரசியல்வாதிகள் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு குரல் கொடுக்கவில்லை


பத்ரி(4:01:02pm): இப்பொழுது விவசாயத்துக்கென கடன் கொடுக்கிறார்கள் அல்லவா, அதுபோல


உஷா(4:01:10pm): பத்ரி, மீனவர்களில் நிறைய பேர்கள் கிறிஸ்துவர்களாய் இருப்பார்கள். அவர்கள் சமய அமைப்பு ஏதாவது?


பத்ரி(4:01:22pm): ஆமாம். முக்கியமாக தமிழக அரசியல்வாதிகளிடமிருந்து குறிப்பான எதிர்பார்ப்புகள் எதுவும் வரவில்லைh


பத்ரி(4:01:31pm): மீனவர்கள் சங்கம் உள்ளது


ரோஸாவசந்த்(4:01:45pm): சிலவற்றை கோரிக்கையாக தொடர்ந்து முன் வஈபது அவசியம், சிலைருக்கும்%ஆவது பலன்


பத்ரி(4:01:47pm): ஆனால் இப்பொழுதைக்கு எந்த வகையில் இயங்கக் கூடிய நிலையில் உள்ளது என்று பார்க்க வேண்டும்


மூர்த்தி(4:01:52pm): மீனவர்கள் சங்கம் மாதாந்திர கூட்டம் நடத்தும்


உஷா(4:02:10pm): பத்ரி, நான் சொல்வது பணம், பொருள் உதவி செய்ய?


பத்ரி(4:02:16pm): நான் என் பதிவில் எழுதியதுபோல உடைந்து வீணாகப் போன போட்களின் மதிப்பு ரூ. 120 கோடிகள் இருக்கலாம்


மூர்த்தி(4:02:18pm): நிதி நிலைமை அந்த அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்க முடியாது


ரோஸாவசந்த்(4:02:48pm): சுனாமி நிதி கலெகஹ்ச்ன அதைவிட அதிகம்


பத்ரி(4:02:56pm): ரூ. 120 கோடி போட்களை மீண்டும் கொண்டுவருவது அரசு உதவியில்லாவிட்டால் னடப்பது சாத்தியம் அல்ல


அலெக்ஸ் பாண்டியன்(4:03:11pm): தமிழக அரசு கேட்டிருக்கும் 4800 கோடி - இது யார் மூலமாக இவர்களுக்குச்ச் சேரும் - கலெக்டர் ?


ரோஸாவசந்த்(4:03:12pm): அர்சால் சாத்தியமே


அலெக்ஸ் பாண்டியன்(4:03:25pm): தாசில்தார் ? அல்லது கழக கண்மணிகளா ?


பத்ரி(4:03:29pm): இந்த ரூ. 120 கோடி போட்கள் ஒன்று சேர்ந்து ஒரு வருடத்துக்குப் பெறும் பணம் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி இருக்கும்


ரோஸாவசந்த்(4:03:33pm): இதை கோரிகையாக்க வேண்டும்ம், அட ஓட்டுகூட கிடைக்குமே\


ரஜினி ராம்கி(4:03:37pm): பத்ரி, கடலுக்கு அருகாமையில் குடிசைகள் இருக்கக்கூடாது என்று எல்லோருமே சொல்ல தயங்குவது ஏன்?


பத்ரி(4:03:46pm): இத்தனையும் தமிழகப் பொருளாதாரத்திலிருந்து அடுத்த வருடம் இல்லாமல் போகும்.


ரோஸாவசந்த்(4:03:50pm): வேறு இடமும் வேண்டுமல்லன்வா


மூர்த்தி(4:04:13pm): தனியாக கட்டிக் கொடுத்தால் நல்லது


பத்ரி(4:04:17pm): ராம்கி: நாகையைப் பொறுத்தவரை நில அமைப்பு காரணமாகத்தான் இத்தனை இழப்புகள்


பத்ரி(4:04:30pm): திடீரென வேறு இடத்துக்குப் போ என்று எப்படிச் சொல்லமுடியும்?


மூர்த்தி(4:04:36pm): ஆனால் அவ்வளவு இடம் அதுவும் ஒரே இடத்தில் வேண்டும்


பத்ரி(4:04:51pm): மேலும் இப்பொழுதுநடந்தது freak accident


பத்ரி(4:05:03pm): அதனால் ஒரேயடியாக ஊரைவிட்டுப் போகமுடியுமா?


ரஜினி ராம்கி(4:05:14pm): திரும்பவும் கடலுக்கு பக்கத்திலேயே குடிசையை போட்டு உட்கார்ந்து கொள்கிறார்களே... கடலூரில் அப்படித்தான் நடக்கிறது.


ரோஸாவசந்த்(4:05:26pm): மீனவர்களும் சகஜமான உடன் பழிய இடத்திற்கு திரும்புவதையே விரும்புவர்


அலெக்ஸ் பாண்டியன்(4:05:26pm): பல வயல்கள் - கடல் நீர்/மண் சேர்ந்து இனி சில வருடங்களுக்கு பயிர்செய்ய முடியாதாமே ?


பத்ரி(4:05:28pm): ராம்கி: யோசித்துப் பாருங்கள். வேறென்ன செய்வது?


ரோஸாவசந்த்(4:05:49pm): மேலும் நமது சமூக அமைப்பு அப்படி


ரஜினி ராம்கி(4:06:02pm): பத்ரி, கண்பார்வை குறைவு வரும் என்று சொல்கிறார்களே.. அது பற்றி விபரம் உண்டா?


பத்ரி(4:06:04pm): மீனவர்களின் சொத்து - படகு, வலை ஆகியவற்றை எங்கு விட்டுச்செல்ல முடியும்? கடற்கரையில்தானே?


ரோஸாவசந்த்(4:06:06pm): வேறு இடத்தில் கூட்டமாய் ஸெட்டிஉலாவது சாத்தியமில்லை


பத்ரி(4:06:27pm): கடற்கரையில் அதை விட்டுவிட்டு ரெண்டு மைல் தள்ளி எப்படி வசிக்க முடியும்? படகுகளுக்கு பூட்டா போடமுடியும்?


ரோஸாவசந்த்(4:06:28pm): அங்கேயே பாதுகாப்பாய் இருக்கநடவடிக்கைகள் எடுக்க முயற்சிக்க்லாம்\


அலெக்ஸ் பாண்டியன்(4:06:38pm): இங்கெல்லாம் தூர் (?) எடுத்து அவ்விளைநிலங்களை பயிர்நிலங்களாக்க சாத்தியமா ?


பத்ரி(4:06:40pm): ஆம். அங்கேயே பாதுகாப்பாக இருக்க முயற்சி செய்யவேண்டும்


ரோஸாவசந்த்(4:06:46pm): அவர்களால் கடலை விட்டு போகமுடியாது


பத்ரி(4:06:53pm): அலெக்ஸ்: அது பெரிய பிரச்னையில்லை. ஒரு வருடத்தில் சரியாகைவிடும்


பத்ரி(4:07:19pm): ராம்கி: கண் பார்வை - பாபுவிடம் விசாரித்ததில் அப்படியன்றும் பெரிய பிரச்னையில்லை என்று தெரிகிறது


பத்ரி(4:07:30pm): ஏதோ "புலனாய்வு" பத்திரிகையில் வந்தது போல


ரோஸாவசந்த்(4:07:38pm): நானும் நேகு தவர கேளிவிபடவில்லை


நம்பி(4:07:52pm): பத்ரி: விளைநிலங்கள் அவ்வளவு எளிதல்ல. நீண்ட காலம் ஆகலாம்.


மூர்த்தி(4:08:05pm): முன்னர் பட்டிணப்பாகத்தில் மீனவர்களுக்கு அரசு அளித்த வீட்டை விற்று(அ)வாடைக்கு விட்டுவிட்டு கடலோரத்தில் கொட்டகை போட்டுக் கொண்டார்கள்


மூர்த்தி(4:08:10pm): முத்துப்பேட்டை போன்று அலையாத்திக் காடுகள் வளர்க்கலாம்


பத்ரி(4:08:11pm): நம்பி: கடலையட்டிய சில நிலங்களில்தான் உப்புத் தண்ணீர் வந்துள்ளது


மூர்த்தி(4:08:14pm): அலையாத்திக் காடுகளுக்கு அலைகளை ஆற்றுப்படுத்தும் தன்மை இருப்பதாகப் படித்தேன்.


பத்ரி(4:08:22pm): அதுவும் மேலாகத்தான்


பத்ரி(4:09:03pm): நாகை போன்ற பகுதிகளில் பல காலங்களாக நரிமணம் பெட்ரோல் எடுப்பதனால் தண்ணீர் மட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது


நம்பி(4:09:41pm): பத்ரி: கோடிக்கரையில் காடுகள் உள்ளன. அங்கு பாதிப்பு எப்படி? பாதிப்பு குறைவு எனில் நாகையிலும் இதை கட்டாயம் யோசிக்க வேண்டும்


மூர்த்தி(4:10:08pm): எனவே அரசு கடலோரங்களில் மரம் வளர்க்க ஆவன செய்யவேண்டும்


பத்ரி(4:10:20pm): பாதிப்பு குறைவுதான் என்று கேள்விப்பட்டேன். நான் அடுத்த மாதம் அங்கெல்லாம்போவேன். பார்த்ததும் எழுதுகிறேன்


அலெக்ஸ் பாண்டியன்(4:10:37pm): கோடியக்கரையில் உள்ள பறவைகள் சரணாலயம் (மற்ற நாட்டுப் பறவைகள் வரும் இடம்).. பாதிக்கப்பட்டதாக ஒரு தினசரியில் படித்தேன்


ரோஸாவசந்த்(4:11:12pm): பத்ரி, நான் ரஜினியிடமும் கேட்டிருக்கிறேன். நீங்களும் குழந்தைகளை தத்து எடுப்பதில் என்ன என்ன சட்டரீதியான பிரச்சனைகள் வர்கூடும் என்று உங்கள் பதிவில் எழுதுங்கள்


மூர்த்தி(4:11:15pm): வேதாரண்யம் பகுதி அவ்வளவாகப் பாதிக்கவில்லை எனப் படித்தேன்


அலெக்ஸ் பாண்டியன்(4:11:45pm): ராம்கி - நீங்கள் சென்ற இடங்களில் பள்ளிகள் தொடங்கப்ப்டு விட்டனவா ?


நம்பி(4:11:58pm): நாகை அளவுக்கு அதை ஒட்டியுள்ள தெற்கு பகுதிகள் பாதிக்கப்படவில்லை என்றே நானும் அறிகிறேன்


இர.அருள்குமரன்(9:41:58pm): நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம், தாங்கள் வந்தால் சற்று நேரம் பொறுத்துப் பாருங்கள், சில நேரத்தில் ஒரு நிமிட இடைவெளிக்குள் நாலு பேர் வந்து யாருமில்லை என திரும்பிப்போவது நடக்கிறது. இன்னொன்று வெளியேறும் போது இன்ன (இந்திய) நேரத்துக்கு மீண்டும் வருவதாக இருக்கிறேன் என்று அறிவித்துச் செல்லுங்கள், மற்றவர்கள் உங்களோடு உரையாட அது சந்தர்ப்பம் தரும்


இர.அருள்குமரன்(9:44:27pm): நண்பர் மாலன் கீழ்கண்ட கருத்துக்களை முன்வைக்கிறார்


அன்புள்ள நண்பர்களுக்கு,

இரவு 7 மணிக்கு என்னால் அரங்கிற்கு வர இயலுமா எனத் தெரியவில்லை. எனவே எனது கருத்துக்களையும் யோச்னைகளையும் இங்கு தந்துள்ளேன். சாத்தியப்பட்டால் அருள்குமரன் அவற்றை அரங்கில் வெளியிட்டு விவாதிக்கலாம்.

மூன்று வகையான நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன: 1. உடனடித் தேவைகள் 2. நீண்டகாலத் தீர்வுகள்.3. உளவியல் ஆறுதல்கள்
உணவு, மருந்துகள், சில தட்டுமுட்டுச் சாமான்கள் போன்ற உடனடித் தேவைகள் விஷயத்தில் பல அமைப்புக்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இது போன்ற தேவைகளுக்கு அதிக நிதியும் உழைப்பும் காலமும் தேவையில்லை என்பதால் இதில் பலர் ஆர்வம் காட்டுவது இயல்பே.

மீனவர்கள் கடலுக்குத் திரும்ப தேவைப்படும் சாதனங்கள், (படகுகள், வலைகள், மோட்டர்கள்) பாதுகாப்பான வீடுகள், பழுது பட்ட கட்டுமான அமைப்புக்களை ( சாலைகள் போன்றவை) சீரமைத்தல் ஆகியவை நீண்டகாலத் தீர்வுகள். இதற்குப் பெரும் பணம் தேவை.

மூன்றாவது வகை உதவி உளவியில் ரீதியில் ஆன ஆறுதல்கள். பல்ர் குடும்ப உறுப்பினர்களை கண்ணெதிரே இழந்திருக்கிறார்கள். பல குழந்தைகள் அனாதைகள் ஆகி உள்ளன. இந்த traumaவில் இருந்து மீட்டு அவர்களுக்கு வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவது பெரும் பணி. இதை நாம் ஏதேனும் வழிகளில் செய்ய முற்படலாம்.

பல் குழந்தைகளுக்கு பாடநூல்கள், விளையாட்டு பொம்மைகள் போன்றவை தேவைப்படுகின்றன. அதை சேகரித்து வழங்க முற்படலா.

குளித்தலைக்கு அருகில் திருப்பராய்த்து



இர.அருள்குமரன்(9:45:29pm): குளித்தலைக்கு அருகில் திருப்பராய்த்துறை என்ற இடத்தில் ராமகிருஷ்ண குடில் (தபோவனம்) என்ற அமைப்பு இருக்கிறது. ராமகிருஷ்ண மடத்தின் ஆதரவில் நடத்தப்படுவது. அங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உறைவிடம், உணவு, கல்வி, கைத் தொழில் ஒன்றில் பயிற்சி இவற்றை இலவசமாக அளிக்கிறார்கள். சுனாமியில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை அடையாளம் கண்டு அந்தக் குழந்தைகளை ராமகிருஷ்ண குடிலில் சேர்க்க முயற்சிக்கலாம். ஒரு குழந்தைக்கு என்ன செலவாகிறது என்று கேட்டு, ஒரு சில குழந்தைகளை +2 வரை படிப்பதற்கான செலவை நம்மில் சிலர் ஏற்றுக் கொள்ளலாம். (அண்மைக்காலம் வரை நான் சென்னையில் உள்ள ஓர் அமைப்பின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளை + 2 வரை படிக்க, 12 ஆண்டுகள் உதவி செய்து வந்தேன். அதிகம் செலவாகவில்லை)

அந்த தபோவனத்தில் ஒரு சிறிய கணினி மையம் அமைத்துக் கொடுத்து அந்த மாணவர்களுக்கு கணினிப் பயிற்சி அளிக்கலாம்.

அன்புடன்
மாலன்




Monday, January 10, 2005

சுனாமி அரங்க உரையாடல்கள்-1

ஜனவரி 9, 2005 ஞாயிறு அன்று சுனாமி மீட்பு உதவி அரங்கத்தில் நடந்த உரையாடல்கள்

இர. அருள் குமரன்(3:05:13pm):

நோக்கம்: சுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகளாவிய தமிழர்கள் அனைவரும் உதவ, உரிய நபர்களோடு கலந்தாலோசிக்க வசதியாக இந்த அரங்கம் நிறுவப்படுகிறது. இணையத்தமிழர்கள் ஒன்று கூடி தங்களின் பங்களிப்பை சரியான திசையில் செலுத்த இந்தத் தொடர்புச்சேவை உதவும் என நம்புகிறேன்.



இர. அருள் குமரன்(3:05:41pm): இந்தப் பேரிடரிலிருந்து மீள நம்மால் இயன்ற அனைத்து வழிகளிலும் முயற்சிப்போம். நம்முடைய முயற்சிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக சென்று சேர்கிறதா என்பதை உறுதிப்படுத்த தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ள இணையத்தமிழர்கள் உதவ வேண்டுகிறேன்


இர. அருள் குமரன்(3:07:03pm): ஜனவரி ஒன்பதாம் தேதி சிங்கை நேரப்படி மாலை 6:01 மணி (இந்திய நேரம், மதியம் 3:31) முதல் இந்த சேவை தொடங்கும்



அருள்(5:58:38pm): இணையத்தமிழர்களுக்கு வணக்கம்


இர.அருள்குமரன்(5:59:57pm): சுனாமி மீட்பு உதவி அரங்கம் உங்களுக்காக திறந்திருக்கிறது


இர.அருள்குமரன்(6:04:11pm): இன்னும் மற்ற நண்பர்களெல்லாம் வரவேண்டும்


மீனா(6:04:14pm): வணக்கம் நன்றி அருள்குமரன்


மீனா(6:04:44pm): உங்களின் இந்த சேவை மிகவும் உதவி


இர.அருள்குமரன்(6:05:24pm): நல்லது. நீங்கள் ChatAlertஐ இறக்கி இயக்கிவிட்டீர்களா?


இர.அருள்குமரன்(6:06:05pm): மலேசியாவில் எல்லாம் சுனாமி அதிர்ச்சியிலிருந்து மீண்டுவிட்டார்களா?


மீனா(6:07:34pm): ஆம் அதிலிருந்து மீண்டு இப்பொழுது எல்லாஇடங்களிலும் மீஈன்டும் சீரமைப்பு வேலைகள் நட்ந்து கொண்டிருக்கிறது


இர.அருள்குமரன்(6:07:43pm): சரி


மீனா(6:08:48pm): அதி வேகமாக எல்லோரும் தங்களால் ஆன உதவிகளை ச்ய்து வருகிறார்கள்


இர.அருள்குமரன்(6:09:00pm): நல்லது


மீனா(6:09:44pm): மலேசிய நண்பன் மூலம் உதவி நிதி படு வேகமாக சேர்கிறது


இர.அருள்குமரன்(6:10:16pm): பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்ததா?


மீனா(6:10:39pm): இல்லை


மீனா(6:11:06pm): ஏன் என்றால் நாங்கள் இருப்பது கோலலம்பூர்


இர.அருள்குமரன்(6:11:15pm): ஓ சரி சரி


மீனா(6:11:29pm): பினாங்கில்த் தான்


மீனா(6:11:40pm): அதிக சேதம்


இர.அருள்குமரன்(6:11:53pm): கேள்விப்பட்டேன்


மீனா(6:12:08pm): தொலைக் காச்சியில் பார்த்ததோடு சரி


மீனா(6:12:43pm): வார்த்தைகள் தவறாக அடிக்கிறேன்


இர.அருள்குமரன்(6:12:58pm): பரவாயில்லை


மீனா(6:13:18pm): எங்கே கஜன்?


மீனா(6:14:07pm): ஆமாம் அருள்குமரன் எங்கே பார்த்தாலும் துணிகள்தான் அதிகம்...


மீனா(6:14:27pm): சேர்கிறது வேண்டாம் என்கிறார்கள்


இர.அருள்குமரன்(6:14:45pm): ஆம், இப்போது தேவை அது அல்ல


மீனா(6:15:51pm): சில இடங்களில் சேலைகள் வேண்டியிருக்கிறது என்று..அப்படியா?


இர.அருள்குமரன்(6:16:46pm): தமிழகத்தில் ரஜினிராம்கி நிறைய இடங்கள் சுற்றியிருக்கிறார். அவரிடம் கேட்டால் தேவை என்ன என்று தெளிவாகத் தெரிந்துவிடும்


மீனா(6:16:54pm): எது அவசியம் தேவை என்பது சரிவரத்தெரிந்தால் நல்லது இல்லையா?


இர.அருள்குமரன்(6:17:00pm): ஆம்


மீனா(6:17:07pm): ஆமாம் நானும் படித்தேன்


இர.அருள்குமரன்(6:17:24pm): இன்னும் பலரை இங்கே எதிர்பார்க்கிறேன்


மீனா(6:18:46pm): இன்னும் சிறிது நேரத்தில் வருவார்கள்


இர.அருள்குமரன்(6:19:09pm): காத்திருப்போம்


மீனா(6:19:47pm): இன்று விடுமுறையல்லவா? அதான்


இர.அருள்குமரன்(6:20:27pm): ஆம், நாளை நிறைய பேரை எதிர்பார்க்கலாம்


சுந்தரவடிவேல்(6:23:52pm): சிங்கையில் பெரும் பாதிப்பில்லை இல்லையா?


இர.அருள்குமரன்(6:23:58pm): உங்களில் தமிழகத்தில் இருப்பவர்கள் யார்யார்


சுந்தரவடிவேல்(6:24:13pm): நானுமில்லை. ரோசாவுமில்லை


ரோஸாவசந்த்(6:24:18pm): நான் இன்று ரஜினி ராம்கி, பாபுவிடன் தொலைபேச நினைத்தேன் விடுபட்டுவிட்து


ரோஸாவசந்த்(6:24:31pm): இல்லை, நான் இருப்பது டோக்கியோவில்


இர.அருள்குமரன்(6:24:36pm): ஆமாம் சுந்தரவடிவேல் (சுருக்கி சுவ ன்னு வைச்சுக்கவா?) சிங்கை தப்பிவிட்டது


இர.அருள்குமரன்(6:24:47pm): அப்படியா


மீனா(6:24:53pm): இப்போ சமீபத்தில் ஒரு செய்தி..


இர.அருள்குமரன்(6:25:00pm): சொல்லுங்க மீனா


ரோஸாவசந்த்(6:25:19pm): நேசகுமார் சொன்னது கொஞ்சம் அதிர்சியா இருந்தது.


மீனா(6:25:26pm): பாதிக்கப் பட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு வருகிறது என்றூ?


இர.அருள்குமரன்(6:25:27pm): ஆமாம்


ரோஸாவசந்த்(6:25:31pm): ராகாகியில் படித்தேன்.


ரோஸாவசந்த்(6:25:45pm): அதேதான்.


இர.அருள்குமரன்(6:25:52pm): அவரே வந்தாச்சு


சுந்தரவடிவேல்(6:26:00pm): நாகையில் தடுப்பூசி தீவிரமென அறிகிறேன்.


சுந்தரவடிவேல்(6:26:46pm): என்னாச்சு, கண்ணுல?


மீனா(6:26:50pm): உண்மையிலேயே கடல்த் தண்ணி பட்டதனால்த்தானா?


நேச குமார்(6:27:10pm): 15 பேருக்கு கண் தெரியாமல் போய்விட்டது என்றார்


நேச குமார்(6:27:17pm): அப்படித்தான் சொல்கிறார்


மீனா(6:27:22pm): மணல் ஏதும் கண்ணுக்குள் புகுந்து?


நேச குமார்(6:27:46pm): சரியாய்த் தெரியவில்லை அவர்களுக்கே


இர.அருள்குமரன்(6:27:47pm): மணலானால் காயம் இருக்குமே


நேச குமார்(6:28:09pm): திருச்சிக்கு அனுப்பியிருக்கிறார் கலெக்டர்


இர.அருள்குமரன்(6:28:16pm): சரி


சுந்தரவடிவேல்(6:28:22pm): சில நேரங்களில் கிருமிகளாலுமிருக்கலாம்.


நேச குமார்(6:28:29pm): பல சிறுவர்களுக்கு இப்படி நேர்ந்துள்ளது என்றார்


இர.அருள்குமரன்(6:28:43pm): கொடுமை


சுந்தரவடிவேல்(6:28:52pm): பொன்னுக்குவீங்கி ஆங்காங்கே இருப்பதாகப் படித்தேன்.


நேச குமார்(6:28:57pm): முதலில் டாக்டர்கள் யாருமே அங்கு போகவில்லையாம்


நேச குமார்(6:29:10pm): வேதனையாக இருந்தது


ரோஸாவசந்த்(6:29:14pm): எனக்கு எதுவும் சொல்லதெரியவில்லை. நினைக்க ரொம்ப கஷ்டமாய் இருக்கிறதுய். u


இர.அருள்குமரன்(6:29:16pm): ஆம்


மீனா(6:29:19pm): ச்சே என்னது பிழைத்தும் இப்படியரு கஷ்டம்


நேச குமார்(6:29:21pm): பின்பு நிலைமை முன்னேறியது


நேச குமார்(6:29:42pm): தஞ்சாவூர் கலெக்டர்தான் போய் நிறைய செய்திருக்கிறார்


சுந்தரவடிவேல்(6:30:12pm): சரி நண்பர்களே நான் கிளம்புகிறேன், பின்னொரு முறை வருகிறேன்.


நேச குமார்(6:30:13pm): நாகை கலைக்டரை கோபம் கொண்ட


நேச குமார்(6:30:21pm): சரி சு.வ


இர.அருள்குமரன்(6:31:09pm): நான் இன்னும் சில மடற்குழுக்களில் அறிவித்துவிட்டு வருகிறேன்


ரோஸாவசந்த்(6:31:49pm): இந்த கண்பார்வை விஷயம் குறித்து ஏதாவது துரித நடவடிக்கை உண்டா, நேசகுமார்?


நேச குமார்(6:32:21pm): முந்தா நாள் பேசினார்.


ரோஸாவசந்த்(6:32:25pm): அரசு, தனிட்ப்பட தரப்பில்


நேச குமார்(6:32:32pm): அதற்குப் பின் என்ன நடந்தது என்று தெரியாது


ரோஸாவசந்த்(6:32:43pm): யார் பேசினார்?


நேச குமார்(6:32:43pm): அரசு தரப்பில், தஞ்சை கலைக்டர்தான்


நேச குமார்(6:32:51pm): அவர்களை அனுப்பியிருக்கிறார்


மீனா(6:32:51pm): பாதிக்கப் பட்டவர்கள் எல்லோருமே சிறுவர்கள்தானா?


நேச குமார்(6:33:04pm): இல்லை, பெரியவர்களும் உண்டு


நேச குமார்(6:33:35pm): ஒரு ஓ என் ஜி சி இன் ஜினியர், அவரது மூன்று குழந்தைகளும் இறந்து விட்டனர்


நேச குமார்(6:33:51pm): அவருக்கும் இப்போது கண் தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது என்றார்


மீனா(6:34:04pm): இது எங்கே நடந்தது


இர.அருள்குமரன்(6:34:18pm): வாங்க நெய்ன்


நேச குமார்(6:34:24pm): அக்கரைப் பேட்டை(நாகபட்டனம்)


நெய்ன்(6:34:24pm): வணக்கம்


ரோஸாவசந்த்(6:34:29pm): வணக்கம்


மீனா(6:34:30pm): வங்க நெய்ன்


நேச குமார்(6:34:34pm): வணக்கம் நெய்ன்


நெய்ன்(6:34:57pm): இப்போதுதான் தலையை நீட்டுகிறேன்


மீனா(6:35:07pm): நீங்கள் எங்கிருந்து?



நெய்ன்(6:35:45pm): துபாய் !!


நேச குமார்(6:38:02pm): நல்ல முயற்சி அருள்குமரன்


இர.அருள்குமரன்(6:38:19pm): ஒரு குறிப்பிட்ட நேரம் வைத்துக்கோள்வோமா?


நேச குமார்(6:38:24pm): தொடர்ந்து செய்து கொண்டு வருகிறீர்கள் இந்த மாதிரி


நேச குமார்(6:38:29pm): ஆம்.


இர.அருள்குமரன்(6:38:37pm): எதோ என்னால் முடிந்தது


நேச குமார்(6:38:48pm): இரண்டு நேரங்கள் வைத்துக் கொண்டால் நல்லது


ரோஸாவசந்த்(6:38:54pm): என் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும் . நான் வந்துபோய் கொண்டு இருப்பேன்


இர.அருள்குமரன்(6:39:00pm): நீங்களே சொல்லுங்களேன்


நேச குமார்(6:39:03pm): பல டைம் ஜோன்களில் இருப்பவர்களுக்கும் வசதியாக இருக்கும்


நேச குமார்(6:39:10pm): இருக்கிறமாதிரி


இர.அருள்குமரன்(6:39:23pm): இந்திய நேரமாக


நேச குமார்(6:39:55pm): இந்திய நேரமென்றால் , மாலையிலும் , நடு இரவிலும் வைத்துக் கொள்ளலாம்


நேச குமார்(6:40:05pm): என்பது எனது அபிப்ராயம்


ரோஸாவசந்த்(6:40:13pm): இந்திய நேரமாய் இரவில் 11.00 மணிவரை எனக்கு ஒகே!


நேச குமார்(6:40:14pm): என் வசதியை உத்தேசித்துச் சொல்கிறேன்


ரோஸாவசந்த்(6:40:23pm): அது எனக்கு 2மணிவரை


இர.அருள்குமரன்(6:40:31pm): சரி இந்திய நேரம் இரவு 7 மற்றும் 10


இர.அருள்குமரன்(6:40:37pm): ஒத்துவருமா?


ரோஸாவசந்த்(6:40:50pm): எனக்கு ஒத்துவரும்., மற்றவர்கள் சொல்லட்டும்


இர.அருள்குமரன்(6:41:04pm): மீனா உங்களுக்கு?


நேச குமார்(6:41:40pm): நான் போய் வருகிறேன் அகு, ரோவ, மீனா


ரோஸாவசந்த்(6:41:45pm): ஆனால் இந்தியாவில் மீட்பு பணி தொற்ற்புள்ளவர்கள் வந்து சேரும்போதே இதற்கு பயன் இருக்கும் என்று தெரிகிறது


ரோஸாவசந்த்(6:41:54pm): சரி, நேசகுமார்


மீனா(6:41:58pm): முக்கியமாக இந்தியாவில் உள்ளவர்களின் வசதிப்படி


ரோஸாவசந்த்(6:42:04pm): ஆமாம்


ரோஸாவசந்த்(6:43:24pm): நான் பொதுவாய் இதை கவனிப்பதற்கே வந்துள்ளேன். வேற்று நாட்டில் இருப்பதால் சொல்ல அதிகம் இல்லை.


ரோஸாவசந்த்(6:43:53pm): அலோசனைகள் அளிக்கபடும்போது என்னால் முடிந்ததை செய்ய முடியும்.


மீனா(6:43:58pm): அவர்களிடம்தான் நாம் நிறைய விஷயங்களைத்தெரிந்து அதன் ஏதும் செய்ய தோதாக இருக்கும்


மீனா(6:44:17pm): அதன்படி


மீனா(6:46:37pm): அருள் அகத்தியரில்,தமிழுலகத்தில் எல்லாம் போட்டிருக்கிறீர்கள் அல்லவா?


மீனா(6:48:31pm): இலங்கை சம்பந்தபட்டவர்களின் வசதிக்கேற்றபடிகூட நேரம் வைத்துக் கொள்ளலாம்


'மரவண்டு' வருகை [Sun Jan 9 18:51:53 GMT-0800 2005]

மரவண்டு(6:52:45pm): வணக்கம் அருள் குமரன்


மரவண்டு(6:53:03pm): மீண்டும் ஒரு முறை உருப்படியான காரியம் :-)


இர.அருள்குமரன்(7:03:04pm): மீண்டும் இந்திய நேரம் இரவு 7:00 மற்றும் 10:00 க்கு சந்திப்போம். வந்து போகும் நண்பர்களிடமும் இதே சேதியை பகிர்ந்து கொள்ளவும்


ரோஸாவசந்த்(7:05:59pm): எல்லாருக்கும் பார்க்கலாம், நன்றி!


இர.அருள்குமரன்(7:23:14pm): நான் பல மடற்குழுக்களுக்கு இந்த அரங்கம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்


எஸ்.கே(7:24:46pm): அது சரி, ட்சுனாமியால் இலங்கை தமிழர் பகுதி மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறது


இர.அருள்குமரன்(7:25:28pm): ஆம், இலங்கை நண்பர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்


இர.அருள்குமரன்(7:25:51pm): கஜன் ஆரம்பத்தில் வந்து உடனே காணாமல் போய்விட்டார்


எஸ்.கே(7:26:59pm): தமிழ்நாட்டில் மிகவும் குழப்பமாக இருக்கிறது


எஸ்.கே(7:28:08pm): மீனவர்களைப் பற்றி பலவித செய்திகள் வருகின்றன


இர.அருள்குமரன்(7:28:31pm): சொல்லுங்கள் எஸ்.கே


நேச குமார்(7:33:30pm): ஆம். ரொம்ப தன்மானம் மிக்கவர்கள்


நேச குமார்(7:34:03pm): ரிலீ·ப் மெட்டீரியல் டிஸ்ற்றிப்யூஷன் பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருந்தது


எஸ்.கே(7:34:09pm): தன்மானத்தைத் தாண்டிய


எஸ்.கே(7:34:17pm): நிலை


நேச குமார்(7:34:32pm): அவர்களை பிச்சைக்காரர்கள் போன்று நடத்தியவிதம், டிவிக்கள் காட்டிய விதம்


இர.அருள்குமரன்(7:34:33pm): நேகு, ஆங்கிலம் தட்டச்ச F2 உபயீகிக்கவும்


எஸ்.கே(7:34:36pm): அவர்களுக்குள் கோஷ்டி


நேச குமார்(7:34:48pm): சரி அகு


இர.அருள்குமரன்(7:35:01pm): ஆமாம் நெகு எனக்கு கூட கஷ்டமாக இருந்தது


நேச குமார்(7:35:03pm): ம்ம்


எஸ்.கே(7:35:09pm): நிவாரணத் துகைக்காக சாலை மறியல் தினமும் நடக்கிறது


நேச குமார்(7:35:18pm): ஆம் எஸ்கே


இர.அருள்குமரன்(7:35:22pm): இதனாலே கூட அவர்களில் சிலர் வாங்காமலே இருந்திருப்பார்கள்


நேச குமார்(7:35:43pm): நாகப்பட்டினம் கலைக்டரை அடித்துவிட்டார்கள் சில இளைஞர்கள் என்று கேள்விப்பட்டேன்


எஸ்.கே(7:35:46pm): அவர்கள் ஏராளமாக சம்பாதிக்கும்போது வரி கட்டினார்களா என்ப்து தெரியாது


நேச குமார்(7:35:55pm): அவர் ரொம்ப மந்தமாக செயல்படுபவராம்


நேச குமார்(7:36:08pm): தஞ்சாவூர் கலைக்டர் வந்தபின்பு தான்


நேச குமார்(7:36:12pm): நிலைமை மாற்


நேச குமார்(7:36:17pm): மாறியதாம்


இர.அருள்குமரன்(7:36:23pm):


நேச குமார்(7:37:20pm): அப்பகுதிகளின் பொருளாதாரமே மீனவர்களை பெரும்பாலும் சார்ந்து இருந்தது


எஸ்.கே(7:37:25pm): ஆமாம்


நேச குமார்(7:37:43pm): கல்·ப் பணம் வறண்ட பிறகு


எஸ்.கே(7:37:47pm): நானயத்தின் இரு பக்கம்!


நேச குமார்(7:37:51pm): கடந்த 15 வருடங்களில்


எஸ்.கே(7:37:58pm):


நேச குமார்(7:38:01pm): மெதுவாக கஷ்டப்பட்டு முன்னேறினார்கள்


நேச குமார்(7:38:11pm): எல்லாம் போய்விட்டது ஒரே நாளில்


இர.அருள்குமரன்(7:38:24pm): ஹ¤ம்


எஸ்.கே(7:38:29pm): அது உண்மை


நேச குமார்(7:38:49pm): அவர்களின் மீன்கள் ஏற்றுமதியால் அரசுக்கு அந்நியச் செலாவணீ வந்தது


நேச குமார்(7:39:03pm): அவர்கள் வாங்கியதால், வியாபாரம் பெருகியது


நேச குமார்(7:39:21pm): நிறைய பேர் சீமென்களாகவும் பணி புரிந்து


நேச குமார்(7:39:26pm): பணம் அனுப்பினார்கள்


இர.அருள்குமரன்(7:39:42pm): ம்


நேச குமார்(7:39:48pm): இப்படி மறைமுகமாக அரசுக்கு நிறைய வந்தது


நேச குமார்(7:40:11pm): இன்கம் டாக்ஸ் கட்டியிருப்பார்களா என்றால், சந்தேகம் தான். ஆனால் அதை வைத்து சொல்ல முடியாது


நேச குமார்(7:40:13pm): இப்படி


இர.அருள்குமரன்(7:40:27pm): ம்


நேச குமார்(7:40:37pm): படகுக்கு வரி


நேச குமார்(7:40:49pm): படகுகளுக்கு பயன்படுத்தும் பெற்றோலுக்கு வரி


நேச குமார்(7:40:57pm): இன் ஜின் வரி


நேச குமார்(7:41:21pm): என்று தீப்பெட்டியிலிருந்து, சோப் முதல் எல்லாவற்றிலும் வரி போகத்தான் செய்தது


எஸ்.கே(7:43:53pm): அக்கரைப் பேட்டையில்தான்


எஸ்.கே(7:44:07pm): மீனவக் குப்பம் ஆரம்பிக்கிறது


நேச குமார்(7:44:17pm): இல்லை இல்லை...


நேச குமார்(7:44:28pm): நாகப்பட்டினம் நகரிலேயே கூட


நேச குமார்(7:44:35pm): மீனவப் பகுதிகள்


நேச குமார்(7:44:42pm): நாகப்பட்டினத்துக்கு வடக்கே


எஸ்.கே(7:44:50pm): உப்பனாரு பகுதியில் அங்கு ஆரம்பித்து வேதாரண்யம் போகும் பாதயில் பல ஊர்கள் பலத்த சேதம்


நேச குமார்(7:44:54pm): பட்டினச்சேரி


நேச குமார்(7:45:00pm): காரைக்கால் மேடு


நேச குமார்(7:45:11pm): என்று கடலூர் வரை


நேச குமார்(7:45:20pm): ஆனால் மிகவும் பாதிக்கப் பட்டவை


நேச குமார்(7:45:23pm): நாகூரில் தொடங்கி


எஸ்.கே(7:45:26pm): அது நாகூர், காரைகால் பக்கம். ஆமாம் . அங்கும் இருக்குது


நேச குமார்(7:45:29pm): வேதாரண்யம் வரை


நேச குமார்(7:47:58pm): வேளாங்கன்னி சோகம் கொடூரமானதுதான்


எஸ்.கே(7:49:26pm): நிவாரணப் பொருள் ஏற்றிவரும் லாரிகளை வழிநெடுக மடக்கி கொள்ளையடிக்கிறார்கள்


நேச குமார்(7:49:32pm): ஆம்


KVR(7:49:33pm): :(


நேச குமார்(7:49:39pm): அது நிறைய நடந்திருக்கிறது


நேச குமார்(7:49:48pm): ரஜினி ராம்கி கூட எழுதியிருந்தார்


எஸ்.கே(7:53:03pm): நான் அடுத்த வாரம் செல்லலாம்னு இருக்கேன்


நேச குமார்(7:53:14pm): ஓ...சென்று வாருங்கள்


நேச குமார்(7:53:18pm): செல்வதற்கு முன்


எஸ்.கே(7:53:21pm): சரி, நேச குமார்


நேச குமார்(7:53:25pm): டைபாய்ட் வாக்ஸின்


நேச குமார்(7:53:48pm): சென்னையில் அப்போலோ பார்மஸிகளில் சனிக்கிழமை போடுகிறார்கள்


நேச குமார்(7:53:55pm): கலரா வாக்ஸின்


எஸ்.கே(7:54:01pm): சரி


எஸ்.கே(7:54:09pm): போட்டுக் கொள்கிறேன்


இர.அருள்குமரன்(8:11:20pm): இந்திய நேரம் 7:00 மற்றும் 10:00 மணிக்கு இங்கே கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


எஸ்.கே(8:59:33pm): அ.கு, சௌந்தர் கஜனைப் பற்றி விசாரித்தார்


இர.அருள்குமரன்(9:01:09pm): வந்து உடனே காணாமல் போய்விட்டார்


உஷா(9:03:50pm): அகு சுனாமி பற்றி மட்டும்தானா? ராம்கியை வந்தால் கேட்கலாம்


எஸ்.கே(9:04:06pm): அ.கு: நம் இணைய நண்பர்கள் பங்களிப்பை ஒரு விதமாக ஒருங்கிணைத்து பெரிய அளவில் ஏதாவது செய்யலாமே


இர.அருள்குமரன்(9:04:31pm): அது தான் நோக்கம்


இர.அருள்குமரன்(9:04:58pm): சேவை என்பது பணம் மட்டுமல்ல


எஸ்.கே(9:06:38pm): ஆமாம். பாதிக்கப் பட்ட இடங்கள் பரவலாக இருக்கு. ஒரு சர்வே பண்ணினால்தான் எங்கு அதிகம் நிவாரணம் போய்ச் சேர்ந்திருக்கு. எங்கு ஒண்ணுமே சேரல்லேங்கறது புலப்படும்


எஸ்.கே(9:06:56pm): logistics தான் முக்கிய பிரச்னை


ஆசிப் மீரான்(9:07:15pm): இப்பதான் அறிவிப்பை பார்த்தேன்


எஸ்.கே(9:07:24pm): இப்போ ரொம்ப confusing-ஆக இருக்கு


இர.அருள்குமரன்(9:08:18pm): ஆமாம் எஸ்கே


இர.அருள்குமரன்(9:08:59pm): ரஜினி ராம்கியை நீங்க தொலைபேசியில் பிடிக்க முடியுமா


எஸ்.கே(9:10:31pm): இப்பொ அதுதான் ட்றை பண்ணறேன்


இர.அருள்குமரன்(9:10:41pm): நல்லது


இர.அருள்குமரன்(9:11:42pm): அவர் வந்தால் பேச சொல்லியே கேட்கலாம்


இர.அருள்குமரன்(9:11:57pm): இங்கே மேடையேறி பேசவும் முடியும்


எஸ்.கே(9:13:09pm): அவருடைய மொபைல் எட்ட வில்லை


இர.அருள்குமரன்(9:13:32pm):


எஸ்.கே(9:13:53pm): மறுபடியும் டிரை பண்ணறேன்


எஸ்.கே(9:15:30pm): இந்த widget-ஐ flash-ல் அமைத்திருக்கிறீர்களா


இர.அருள்குமரன்(9:15:39pm): ஆம்


எஸ்.கே(9:17:06pm): multimedia - கூட இருக்கா


இர.அருள்குமரன்(9:17:16pm): இருக்கு


எஸ்.கே(9:47:24pm): சுனாமி பத்தி என்ன செய்யணும்னுதான் பேசணும்


மரவண்டு(9:47:33pm): பெண்களை வெறுப்பவர்களை


உஷா(9:48:08pm): ஆனா எனக்கு கடல் பக்கதுல வீடு வேணும்ங்கர ஆசையில் சுனாமி மண் வாரி போட்டு விட்டது


சௌந்தர்(9:59:08pm): மரபிலக்கியத்திலும் மற்ற குழுக்களிலும் தொடர்ந்து பங்கு கொள்ளும் கஜனிடமிருந்து சுனாமி தனத்திலிருந்து ஒரு தகவலும் இல்லை. அவருக்கு நான் எழுதிய தனி மடலுக்கும் பதில் இல்லை. இந்த சாட் வகுப்பில் கஜன் வந்ததாக அறிந்தேன். அவர் நலமா?


இர.அருள்குமரன்(10:00:09pm): யாரும் இல்லாத நேரத்தில், அரங்கம் துவங்கும் முன் ஒரு முறை வந்து உடனே போய்விட்டார்


உஷா(10:00:17pm): நேத்து சன் டீவியில் இலங்கையில் சுற்றுலா துறை மிக மோசமாய் பாதித்துள்ளதாய் செய்தி. அந்தமானியில் அதே


இர.அருள்குமரன்(10:00:52pm): நண்பர்களுக்கு ஒரு செய்தி


உஷா(10:00:56pm): நாகூர், வேளாங்கண்ணி, ராமேஸ்வரத்தில் சிறு வியாபாரிகள் வயிற்றில் அடி


சௌந்தர்(10:00:58pm): ஏதானும் எழுதிச் சென்றாரா?


இர.அருள்குமரன்(10:01:34pm): இங்கே பேசிக்கொள்வதனைத்தையும் மறுநாள் இணையத்தில் வெளியிடுவதாக இருக்கிறேன்


இர.அருள்குமரன்(10:01:57pm): மற்றவர்களுக்கும் விஷயம் சென்று சேரவேண்டும் என்பதே நோக்கம்


இர.அருள்குமரன்(10:31:46pm): சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்யலாம்?


எஸ்.கே(10:31:52pm): சுனாமி நிவாரணத்துக்கு அமேரிக்கால யாரனும் வசூல் பண்ணினாங்களா


ஷைலஜா(10:32:01pm): நேரில் போய் பர்க்கணும் அருள் எனக்கு


அருண்(10:32:35pm): இங்கே பி.கே.எஸ் பணம் வசூலிச்சார்...பிரயோஜனமா பண்ணினார். நானும் அவர் கேட்டதை செஞ்சேன்.


இர.அருள்குமரன்(10:32:54pm): முழு நிலவரம் சொல்ல ரஜினி ராம்கியை நாளைக்காவது இங்கே வரவைக்கவேண்டுயது எஸ்.கே உங்க பொறுப்பு


அருண்(10:33:01pm): ரஜினி ராம்கி கிட்டே பேசினேன்...கொஞ்ச நாள் வெயிட் பண்ண சொல்லியிருக்கிறார்


ஷைலஜா(10:33:03pm): இங்க ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமா உதவறோம் ஆனா...


எஸ்.கே(10:33:05pm): ராம்கி சொன்னார் - ஜமக்காளம், பெட் ஷீட் பத்தி


ஷைலஜா(10:33:19pm): ராம்கி கிட்ட நானும் பேசினேன்


அருண்(10:33:20pm): அருள்குமரன்...ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க


இர.அருள்குமரன்(10:33:26pm): :)


அருண்(10:33:32pm): வாழ்த்துக்கள்


ஷைலஜா(10:33:47pm): தேவைப்படும்போது பெற்றூக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்


அருண்(10:33:50pm): இதை இரா.முருகன், பத்ரி கிட்டே தெரிவியுங்க


எஸ்.கே(10:33:54pm): அ.கு: இன்னும் அவர் கிடைக்கல்ல. தொடர்ந்து try பன்ணி கொண்டு வந்துசேர்க்கறேன்


உஷா(10:33:55pm): நாகை மாவாட்டத்தில் மருந்து பொருட்கள் வேண்டாம் என்ற அறிக்கை பார்த்தேன்


இர.அருள்குமரன்(10:34:08pm): அப்படியா? ஏன்?


அருண்(10:34:09pm): அவங்க இது போல ஒண்ணு பண்ணனும்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க


இர.அருள்குமரன்(10:34:35pm): ரா.கா.கிலயும் எழுதியிருக்கேன்


அருண்(10:34:44pm): எல்லோரும் ஒரு சமயம் வந்து பேசினா...உபயோகமா இருக்கும்


இர.அருள்குமரன்(10:34:49pm): அவங்களும் சீக்கிரப் வந்துடுவாங்க


ஷைலஜா(10:34:54pm): சில இடங்களில் துணி மணி எல்லம் சாலையில் கிடக்குதாம்


ஷைலஜா(10:35:14pm): ஆகவே தேவை அறிந்து உதவணும் நாம்


இர.அருள்குமரன்(10:35:20pm): இன்ன நேரம் சந்திப்புன்னு யாராவது பொறுப்பெடுத்து அறிவிக்கணும்


அருண்(10:35:25pm): ஆனா, சுனாமி விஷயத்துலே கொஞ்சம் 'இந்த முயற்சி' லேட் ..ஏன்னா, நிறைய நிவாரணப் பொருட்கள் கெடைச்சுட்டதா அரசாங்கமே சொல்லுது


இர.அருள்குமரன்(10:35:31pm): உரிய நபரை தேடிகிட்டிருக்கேன்


இர.அருள்குமரன்(10:35:48pm): யாராவது செய்ய முடிந்தால் நல்லது


ஷைலஜா(10:35:54pm): இங்கே சமூக அமைப்பு ஒன்றுடன் நாங்கள் சிலர் பொங்கல் முடிந்து நேரில் போகப் போகிறோம்


இர.அருள்குமரன்(10:36:15pm): இல்லை அருண், இப்பதான் வேலை இருக்குன்னு நினைக்கிறேன்


அருண்(10:36:25pm): அதுனால...ஒண்ணும் தப்பு இல்லை...எதிர்காலத்துலே இணைய நண்பர்கள் எல்லாரும் கலந்து பல விஷயங்கள் பண்ணா உதவியா இருக்கும்


இர.அருள்குமரன்(10:36:32pm): எல்லாரும் இதை மறந்து போகிற நேரம் இது


ஷைலஜா(10:36:35pm): அங்கு எங்கள் பணி எப்படி இருக்கலாம் என இங்கு யாரும் கூறிவிடவும்


உஷா(10:36:47pm): ஷைலு ஜனவரி 24 சென்னை வருகிறேன்


இர.அருள்குமரன்(10:37:01pm): @கணேஷ், எத்தனை பேர் வேண்டுமானாலும்


மரவண்டு(10:37:06pm): குட்


அருண்(10:37:06pm): அருள் குமரன் ...அப்படி ஏதேனும் நல்லது செய்யமுடிந்தால் நலமே..


எஸ்.கே(10:37:17pm): அம்மம். வீடியோ கேமரா எல்லாம் அந்த இடத்தை விட்டு போனப்பறம் எங்க என்ன நடக்குதுன்னு தெளிவாதெரியும்n


உஷா(10:37:36pm): நீங்கள் எத்தனை நாள் இருப்பீர்கள்? நான் ஒருவார பயணமாய் வருகிறேன்


இர.அருள்குமரன்(10:37:45pm): மருத்துவம், உடை, சுகாதாரம் தாண்டியும் தேவை இருக்கு


அருண்(10:37:52pm): தமிழ்மணத்துலே அறிவிப்பும், சுட்டியும் கொடுத்தா எல்லாரையும் இணைக்க முடியும்


ஷைலஜா(10:37:53pm): யாரைகேகறீங்க உஷா


உஷா(10:38:12pm): ஷைலு உங்களைதான்


ஷைலஜா(10:38:41pm): நான் அங்குபோய்ப்பார்த்து உங்களுக்கு விவரம் சொல்கிறேன்


இர.அருள்குமரன்(10:38:50pm): நல்லது ஷை


அருண்(10:39:10pm): எந்த உதவி வேணும்னானும் சொல்லுங்க...இங்கே பல விதமா பணம் சேகரிச்சுக்கிட்டு இருக்காங்க


இர.அருள்குமரன்(10:39:27pm): சரி அருண்


ஷைலஜா(10:39:35pm): நம்மில் ஒருவர் அங்கு போய்ப் பார்த்தாலே ஒழிய உண்மை நிலவரம் புரிய வாய்ப்பில்லை


உஷா(10:39:37pm): ஒரு பிள்ளையை படிக்க வைக்கலாம்னு ஐடியா. தத்து எல்லாம் சட்ட பிரச்சனை வரும்.


அருண்(10:39:39pm): ஒரு ஆர்க்கெஸ்ட் ரா பொங்கல் நிகழ்ச்சி போது நடத்தி பணம் சேகரிக்கறதா தகவல்


இர.அருள்குமரன்(10:39:55pm): இங்கே நண்பர்கள் கிட்டேயும் பேசினேன், பொருளா உதவி செய்ய தயாரா இருக்காங்க


அருண்(10:39:58pm): அப்புறம் நாடகமும் நடத்தப்போறதா சொல்றாங்க


ஷைலஜா(10:40:36pm): ஆமாம் இசைகலைஞர்கள் ஏதோ செய்வதாய் தகவல்


இர.அருள்குமரன்(10:40:47pm): நல்லதுதான்


ஷைலஜா(10:41:11pm): பலவிதங்களீல் பணம் புரட்டப்படுகிறது


இர.அருள்குமரன்(10:41:18pm): நிறைய பேருக்கு தேவைப்படுவது ஆதரவான பேச்சுத்தான்


இர.அருள்குமரன்(10:41:31pm): அடிபட்ட மனது


ஷைலஜா(10:41:44pm): உயிருக்கு என்ன விலை கொடுத்து நாம் மீட்டுத்த்ர முடியுமோ


எஸ்.கே(10:41:45pm): அமேரிக்கால சேகரிக்கற பணமெல்லாம் சரியான கைக்கு போய் சேறரதாa


ஷைலஜா(10:42:25pm): குழந்தைகளை இழந்த தாய்க்கு என்ன சொல்லி சமாதானப்படுத்துவது


எஸ்.கே(10:42:28pm): பிழச்சவங்களுக்குத்தானேதாவதுசெய்யணும
anfkuLL



எஸ்.கே(10:43:08pm): அங்க பல குழந்தைங்க திட்டிர்னு அன்னதை யாயிட்டாங்க்a


எஸ்.கே(10:43:58pm): அவங்களை ஏமாத்தறத்துக்குனே பல கேங்குகம் இருக்கு


ஷைலஜா(10:46:42pm): ராம்கி நேர்ல போனவர் வந்து சொல்ல்லட்டும் காத்திருப்போம்


ஷைலஜா(10:47:21pm): நமது பங்கு இதில் எப்படி என யாராவது கூறலாமே


எஸ்.கே(10:47:26pm): அருள்: சொல்லுங்க


ஷைலஜா(10:47:51pm): கிச்சு சொல்லுங்க என்ன பண்ணலாம் சுனாமிக்கு நாம்


எஸ்.கே(10:49:41pm): our team will visit the areas which are really affected including those places which have escaped the limelight


இர.அருள்குமரன்(10:49:51pm): good


ஷைலஜா(10:49:56pm): கண்டிப்பா போலாம்


எஸ்.கே(10:50:04pm): and make an assessment which will be realistic


இர.அருள்குமரன்(10:50:17pm): நல்லது


ஷைலஜா(10:50:19pm): பொங்கல் ஆனதும் நான் வரேன் அங்க சென்னைக்கு திட்டம் போடுங்க கிச்சு


ஷைலஜா(10:50:28pm): கலந்துக்கறேன்


எஸ்.கே(10:50:46pm): right now, the situation is so chaotic that we could make no sence out of the deafening noice created


எஸ்.கே(10:51:11pm): we all will have to take cholera and other shots


இர.அருள்குமரன்(10:51:22pm): சரி


எஸ்.கே(10:51:24pm): collect our own kit


எஸ்.கே(10:51:32pm): water and stuff for us


எஸ்.கே(10:51:56pm): meanwhile I'll talk to ramki and take a list of essentials


எஸ்.கே(10:52:17pm): and also try and speak to my friends in Ngapattinam


எஸ்.கே(10:52:33pm): till then let our friends keep the earmarked donation with themselves


இர.அருள்குமரன்(10:52:33pm): நல்லது


இர.அருள்குமரன்(10:59:35pm): இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்த்த நபர்கள் யாரும் அரங்குக்கு வரவில்லை


இர.அருள்குமரன்(10:59:52pm): நாளை வருவார்கள் என்று எதிர்பார்கிறேன்


பழனியப்பன்(11:00:09pm): அங்கு சுனாமி பேரலையில் பாதித்தவர்பக


இர.அருள்குமரன்(11:00:16pm): ம்..


பழனியப்பன்(11:00:26pm): பாதித்தவர்களுக்குப் பிராத்தனை செய்தோம்


இர.அருள்குமரன்(11:00:34pm): நல்லது


எஸ்.கே(11:00:45pm): அ.கு: நாலை இந்திய நேரம் எப்போது கூடலாம். rkk-யில் எழுதுகிறீர்களா


எஸ்.கே(11:00:52pm): நாளை


இர.அருள்குமரன்(11:01:22pm): நல்ல சமயம் எது என்று பார்த்து நீங்கள் கூட எழுதலாம்


பழனியப்பன்(11:01:26pm): சிங்கப்பூர் முழுவதும் யின்று மாலை வழிபாடு-ஒரு நிமிட மெளன அஞ்சலி செய்யப்பட்டது


இர.அருள்குமரன்(11:01:42pm): ரஜினி ராம்கியையும் அழைத்து வரவும்


இர.அருள்குமரன்(11:02:04pm): ஆம், அதன் பிறகுதான் இந்த அரங்கம் திறக்கப்பட்டது


பழனியப்பன்(11:02:21pm): நல்ல செயல், வாழத்துக


இர.அருள்குமரன்(11:02:26pm): நன்றி


பழனியப்பன்(11:02:27pm): வாழ்த்துகள், அருள்


ரோஸாவசந்த்(11:03:39pm): நான் தீவிரமா விவாதம் இருக்கும்னு நினைச்சு வந்தேன்


இர.அருள்குமரன்(11:03:45pm): இன்னும் பலரும் படித்திருக்க மாட்டார்கள், ஓய்வு நாள் அல்லவா?


பழனியப்பன்(11:04:07pm): கூட்டம் யில்லாவிட்டால் என்ன நாம் யிருக்கிறோமே?


ரோஸாவசந்த்(11:04:18pm): இருக்கலாம். பத்ரி, ராம்கி


இர.அருள்குமரன்(11:04:25pm): நாளை சம்பந்தப்பட்டவர்கள் வருவார்க்ள் என்று நம்புகிறேன்


ரோஸாவசந்த்(11:04:27pm): போன்றவ்சர்கள் வந்தால் நல்லது


இர.அருள்குமரன்(11:04:47pm): உண்மை நிலவரம் அறிய அவர்கள் தேவைதான்


ரோஸாவசந்த்(11:05:27pm): இந்தியாவில் இருப்பவ்ரக்ளாலேயே ஏதாவது சொல்லமுடியும்


இர.அருள்குமரன்(11:05:49pm): முதலில் நாம் சேகரிக்க நினைப்பது யோசனைகளை


இர.அருள்குமரன்(11:06:32pm): அடுத்து உண்மை நிலவரத்தோடு பொறுத்திப் பார்த்தல்


ரோஸாவசந்த்(11:07:33pm): ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் தெரிவித்து அறிவிக்கலாமே!


இர.அருள்குமரன்(11:08:08pm): அதை இந்தியாவில் இருக்கும் நேரடி தொடர்புள்ள யாரேனும் செய்தால் நலம்


இர.அருள்குமரன்(11:08:36pm): அந்த பொறுப்பை எற்றுக்கொள்ள ஆள் தேடுகிறேன்


ரோஸாவசந்த்(11:08:38pm): எதை நேரத்தை அறிவீபதையா?


பழனியப்பன்(11:13:46pm): சரி, அருள் யிந்த உரையாடல் குழு வழி என்ன செய்யலாம் என்று கருதுகிறீர்கள்?


ரோஸாவசந்த்(11:14:01pm): சரி, என்னகென்னவோ, நாம் எந்தவகையிலே உருப்படியா ஏதாவதௌ செய்யலாம்னு பேசலாமே!


இர.அருள்குமரன்(11:14:16pm): பலரையும் சந்திக்க வைத்து உரையாட வைக்கலாம்


பிகேசிவகுமார்(11:14:26pm): அருள் இந்திய நேரம் 3:30 இஎஸ்டி நேரம் காலை 5 மணி. ஞாயிறு காலை ஐந்து மணிக்கு இங்கு எல்லாரும் நித்திரையில் இருப்பார்கள். எனவெ முடிந்தால் அடுத்த முறை தயவுசெய்து நேரத்தை இன்னும் கொஞ்சம் தள்ளிப் போட்டால் நிறைய அமெரிக்க நண்பர்கள் பங்கெடுக்கலாம்.


ரோஸாவசந்த்(11:14:29pm): ஓ சரி!


இர.அருள்குமரன்(11:14:32pm): நல்ல யோசனைகளை தொகுக்கலாம்


பிகேசிவகுமார்(11:14:48pm): அதே போல, அறிவிப்பை இன்னும் கொஞ்சம் முன்கூட்டித் தாங்க ப்ளீஸ்.


இர.அருள்குமரன்(11:15:06pm): சரி பிகேஎஸ்


இர.அருள்குமரன்(11:15:25pm): அரங்கம் எல்லா நேரமும் திறத்திருக்கும்


பிகேசிவகுமார்(11:15:27pm): நான் இரவு 12:30 வரை விழித்திருந்தேன். அறிவிப்பு இல்லை. காலை எழுந்து வந்து பார்த்தால் இருக்கிறது. முன்கூட்டியே அறிந்தால் அலாரம் வைத்தாவது எழ முடியும். நன்றி.


உஷா(11:16:04pm): அகு பாதிக்கப்பட்ட அனாதை பிள்ளைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும்


ரோஸாவசந்த்(11:16:13pm): அதே


இர.அருள்குமரன்(11:16:20pm): அதனால்தான் அறிவிக்க தாமதம்


ரோஸாவசந்த்(11:16:29pm): உஷாசரியான விஷய்த்தை பேசறீங்க


இர.அருள்குமரன்(11:16:34pm): கட்டாயம் செய்வோம் உஷா


இர.அருள்குமரன்(11:17:36pm): பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா?


உஷா(11:17:40pm): தத்து என்று லீகலாய் முடியாத சூழ்நிலை. ஒரு பிள்ளையின் படிப்பு, எதிர்காலம் பொறுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறோம்


ரோஸாவசந்த்(11:18:11pm): நல்லது உஷா நீங்க அந்த மாதிரியும் செய்யலாம்


உஷா(11:18:21pm): யாராவது சரியான வழி காட்ட முடியுமா


இர.அருள்குமரன்(11:18:22pm): பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா? @மதுரபாரதி


இர.அருள்குமரன்(11:18:38pm): நல்லது உஷா


ரோஸாவசந்த்(11:18:40pm): உஷா ஒஇது தொடர்பா ராம்கி பாபு கூட பேச உத்தேசம்


மதுரபாரதி(11:19:06pm): இங்கு பாதிக்கப்பட்ட இடங்களுக்குக் கிட்டத்தட்ட தினமும் போய்ப் பார்த்து உதவி வருகிறோம் நானும் நண்பர்களும்


உஷா(11:19:20pm): ராம்கியை சென்னை போகும்பொழுது சந்திக்க உத்தேசம்


பழனியப்பன்(11:19:23pm): நல்ல சேவை


ரோஸாவசந்த்(11:19:39pm): உதாரணமா பாலாஜி பாரியோட பதிவுலே பாலு என்று ஒருவர் எழுதியிருக்கார். அதில் இரு 15 நாட்கள் குழந்தை இருந்ததாக


பழனியப்பன்(11:19:56pm): தனியார் உதவியுடன் அரசினரின் உதவி எப்படி யிருக்கிறது?


ரோஸாவசந்த்(11:20:07pm): மதுர பாரதி நீங்க இது குறித்து எழுதி படிகல


இர.அருள்குமரன்(11:20:08pm): நீங்கள் செய்வீர்கள் என்று தெரியும் அதனால்தான் கேட்டேன் @ம.பா.


மரவண்டு(11:20:13pm): பெங்களூரில் இருக்கும் பெரும்பாலான கணினி நிறுவன ஊழியர்களும் ஒரு நாள் ஊதியத்தை சுனாமி நிவாரணத்திற்காக அளித்திருக்கிறார்கள்


மதுரபாரதி(11:20:22pm): அரசினர் உதவியில் அரசியல் உண்டு :-)


பிகேசிவகுமார்(11:20:44pm): ராஜிவ் காந்தி பவுன்டேஷன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரையும் தத்து எடுக்கப் போகிறதாய்ப் படித்தேன். தத்தெடுக்க நினைத்த என் நண்பரும் அதனாலேயே அத்திட்டத்தைத் தள்ளி வைத்திருக்கிறார். இல்லையென்றால், அவர் 50 குழந்தைகளைத் தத்தெடுக்க உத்தேசித்துள்ளார். அப்போது ஒரு குழந்தைக்கு ஒருவர் என்று செலவுகளைப் பிறர் பொறுப்பேற்றுக் கொள்ள முடியும். மேலதிக விவரம் அறிந்ததும் எழுதுகிறேன்.


எஸ்.கே(11:20:56pm): முன்பு நான் சொன்னபடி திடீரென்று அனாதையான ஆத்ரவற்ற குழந்தைகல் தான் முதல் target


உஷா(11:21:11pm): ராம்கிருஷ்ணா மடம் சத்தமில்லாமல் தொண்டு செய்வதை நான் பார்த்துள்ளேன்


மரவண்டு(11:21:16pm): நன்று @ பிகேஎஸ்


மதுரபாரதி(11:21:17pm): எழுத நேரமில்லை. திருக்கழுக்குன்றம் வரை சென்று 3 நாள் சாப்பிடாத குழுக்களைப் பார்த்தோம்.


பழனியப்பன்(11:21:17pm): யில்லை. நான் கேட்டது அரசு யியந்திரம் யிதில் எவ்வளவு தூரம் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான்


இர.அருள்குமரன்(11:21:18pm): சரி பி.கே.எஸ்


இர.அருள்குமரன்(11:21:37pm): கொடுமை @ ம.பா


ரோஸாவசந்த்(11:21:40pm): சிவக்குமார் தகவல் பயனுள்ள்ளது


பழனியப்பன்(11:21:55pm): அரசு ஊழியன் என்ற முறையில் அறிய ஆவல்


மதுரபாரதி(11:21:59pm): சென்னை மெரினா, பெசண்ட் நகரில் உணவு வீணாகிறது. ஒரு 30 மைல் அந்தப் பக்கம் கேட்பார் இல்லை


இர.அருள்குமரன்(11:22:08pm): ஹ¤ம்


உஷா(11:22:17pm): பி.கே.எஸ் எப்படி செய்வது என்று முழித்துக் கொண்டு இருக்கிறேன். சரியான தகவல் கொடுக்கவும்


மதுரபாரதி(11:22:37pm): அரசு ஊழியர்களுக்குச் சில லிமிடேஷன் உள்ளதே. சிவப்பு நாடா என்பார்கள்.


பிகேசிவகுமார்(11:22:45pm): சரி உஷா. திட்டம் செயல்படுத்தப்படுமானால் கண்டிப்பாகச் சொல்கிறேன்.


ரோஸாவசந்த்(11:23:02pm): உங்கள் Bளாகில் எழுதலாம்


பிகேசிவகுமார்(11:23:14pm): எழுதுகிறேன் @ வசந்த்


இர.அருள்குமரன்(11:23:20pm): இதோ இப்போது பேசுகிறோமே, இப்படி நேரடியாக பேசி ஏதேனும் நல்லது நடக்க வழி செய்வதுதான் இந்த அரங்கின் நோக்கம்


பழனியப்பன்(11:23:24pm): யிருக்கலாம் ஆனாலும் யித்தகைய பேரிடர்களின்போது அரசு யியந்திரம் செயல்படுவது உத்தமம் அல்லவா


மதுரபாரதி(11:23:29pm): ஆனால் ஒரு பத்து நாளில் மஹாபலிபுரம் வரை உணவுப் பொருள் மற்றும் அவசர உதவித் தொகை கொடுத்திருக்கிறார்கள்.


இர.அருள்குமரன்(11:23:52pm): அது நிறைவேற ஆரம்பித்திருப்பது குறித்து எனக்கு மெத்த மகிழ்ச்சி


பிகேசிவகுமார்(11:24:08pm): சென்னையில் உதவ விரும்புவோர் வித்யா ஷங்கர் மூலமும் உதவ யோசிக்கலாம். அவரைப் பற்றி மிகவும் நல்லவிதமாக அறிகிறேன். இதுகுறித்து வலைப்பதிவில் எழுதியும் இருக்கிறேன்.


இர.அருள்குமரன்(11:24:19pm): சரி


ரோஸாவசந்த்(11:24:25pm): பார்தேன்


பிகேசிவகுமார்(11:25:16pm): ராம்கியும் அவர் நண்பரும் இப்போது சென்னையில் இருக்கிறார்கள் போல. விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் திரும்புவார்கள் என்று நினைக்கிறேன். நேற்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன். பிடிக்க முடியவில்லை.


இர.அருள்குமரன்(11:26:01pm):


மதுரபாரதி(11:26:14pm): ஆனால் அரசு செயல்படவே இல்லை என்பதும் ஒருவகை அவதூறுப் பிரச்சாரம்தான்.


ரோஸாவசந்த்(11:26:15pm): அவரை இந்த வாரம் ஒரு நாள் அழைக்கலாம் (ராம்கி போன்றவர்களை)


இர.அருள்குமரன்(11:26:24pm): ஆம்


பிகேசிவகுமார்(11:27:24pm): பத்ரி, இன்றைக்கு ராம்கியுடன் பேசப் போவதாகச் சொன்னார். பிரசன்னாவையும் ராம்கியைப் பிடித்து ஸ்டேட்டஸ் அறியும்படிக் கேட்டிருக்கிறேன். விவரம் அறிந்தவுடன் மரத்தடியில் இடுகிறேன்.


உஷா(11:27:30pm): சுற்றுலா சார்ந்த இடத்தில் உள்ள சிறுவியாபாரிகளும் பாவம்தான்


இர.அருள்குமரன்(11:27:50pm): நல்லது @பி.கே.எஸ்


இர.அருள்குமரன்(11:28:10pm): அந்த வசதி செய்ய நேரம் போதவில்லை @ எஸ்.கே


மதுரபாரதி(11:28:40pm): உஷா, உங்களுக்குத் தெரியுமா, மீனவர்கள் தங்களைத் தவிர வேறு யாருக்கும் உதவி கிடைக்கக் கூடாது என்று சண்டை போடுகிறார்கள். இதனால் பாதிக்கப் படுவது சிறு வியாபாரிகள்தாம்.


உஷா(11:29:30pm): உண்மையில் மீனவர்கள் ஓரளவு வசதியானவர்கள்தான்


பிகேசிவகுமார்(11:29:38pm): அப்படியில்லை உஷா


பிகேசிவகுமார்(11:29:47pm): எல்லா மீனவர்களும் வசதியானவர்கள் இல்லை


பிகேசிவகுமார்(11:29:58pm): பகுதிக்குப் பகுதி வேறுபடும்.


இர.அருள்குமரன்(11:29:58pm): உண்மை @பி.கே.எஸ்


மதுரபாரதி(11:30:09pm): அதுமட்டுமல்ல, பாதிப்பு இல்லாதவர்களும் தமக்கு 'நஷ்ட ஈடு' வேண்டும் என்கிறார்கள்!


உஷா(11:30:29pm): பி.கே.எஸ், நான் சென்னையில் பட்டினபாக்கத்தில் இருந்திருக்கிறேன் அப்போது பார்த்த விஷய்ம் இது


ரோஸாவசந்த்(11:30:34pm): மதுரபாரதி இது போல பிரச்சனை இருக்கத்தான் செய்யும்


எஸ்.கே(11:30:46pm): மதுரபாரதி: அடிக்கடி சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள் அலைத் தடுப்பு சுவர்கள் கட்டிய இடங்களில் பெருமளவு பாதிப்புஇல்லை. ஆனாலும் அவர்களும் நிவாரணப் பணத்துக்குப் போராடுகிறார்கள். பாதிக்கட்ட விவசாயிகளுக்கும் பிரச்னை


மதுரபாரதி(11:31:18pm): உண்மைதான் எஸ்.கே.


உஷா(11:31:24pm): சிறுவியாபாரிகள் கந்துவட்டி வாங்கி வியாபாரம் ஆரம்பித்து இன்று எல்லாம் இழந்து நிற்கிறார்கள்


ரோஸாவசந்த்(11:31:25pm): உஷா பெசன்ட் நகர் சர்ச் பின்னாடி போய் பாருங்க


ரோஸாவசந்த்(11:31:49pm): எனக்கெனவோ ஒப்பிடுவது தேவையில்லை என்று நினைக்கிறேன்


உஷா(11:32:22pm): ரோ. வ எல்லா இடத்திலும் இப்படியும் இருக்கும், அப்படியும் இருக்கும்


பழனியப்பன்(11:32:30pm): யிங்கு யிரவு 11.30 நாளை வாய்ப்பிருந்தால் சந்திப்போம். வணக்கம்


ரோஸாவசந்த்(11:32:32pm): அதே


பிகேசிவகுமார்(11:32:43pm): 11:30 எந்த நேரம்


ரோஸாவசந்த்(11:32:49pm): எங்கு இரவு


பழனியப்பன்(11:32:55pm): சிங்கையில்


ரோஸாவசந்த்(11:33:07pm): கொஞ்சம் இத்திய நேரம்


உஷா(11:33:07pm): இங்கு மாலை ஏழரை


பிகேசிவகுமார்(11:33:11pm): அருள், இங்கே வடகிழக்கில் நாங்கள் இந்திய நேரத்தைவிட 10:30 மணிகள் பின்தங்கி இருக்கிறோம்


மதுரபாரதி(11:33:11pm): ரோஸாவசந்த், யாருக்கு அதிக இழப்போ அவர்களைத்தானே முதலில் கவனிக்க வேண்டும். வீடு, உடமைகளை இழந்தவரும் மற்றவரும் ஒன்றல்லவே.


ரோஸாவசந்த்(11:33:21pm): ஆமாம்


ரோஸாவசந்த்(11:33:57pm): மீனவர்கள் அந்த வகியில் அதிகமாய் பாதிக்க படவில்லை என்Kஇறீர்களா?


ரோஸாவசந்த்(11:34:15pm): எனக்கு எல்லாம் செய்திகள்தான்


மதுரபாரதி(11:34:37pm): அப்படி முயற்சிக்கையில் இழக்காதவரும் வந்து சண்டையிடுகின்றனர். அவர்களது கல்வி நிலைமையை நினைக்கையில் நாம் ஒரு அறியாத குழைந்தைபோலத்தான் அவர்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.


ரோஸாவசந்த்(11:35:19pm): பிச்சனைதான்


மதுரபாரதி(11:35:23pm): இல்லை. அப்படிச் சொல்லவில்லை. அதிகம் பாதிக்கப்பட்டது மீனவர்கள்தாம்.


எஸ்.கே(11:35:33pm): @மதுரபாரதி: நாகை பகுதியிலும், சில இடங்களுக்கே மேல்மேல் சாமான்கள் போய்ச் சேருகின்றன. செருதூர் போன்ற இடங்கள் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை


மதுரபாரதி(11:35:52pm): ஆனால் ஓரிரண்டுபேர் பிறர் இருந்தால் அவர்களை ஒதுக்கமுடியாது, கூடாது.


ரோஸாவசந்த்(11:36:43pm): /அறியாத குழைந்தைபோல/ நல்ல வார்த்தை அப்படித்தான் செய்யவேண்டும்


மதுரபாரதி(11:37:21pm): அந்த அளவு நேயம் இல்லாவிட்டால் அங்கே பணிசெய்ய முடியாது.


ரோஸாவசந்த்(11:37:49pm): ஆமோதிக்கிறேன்


பிகேசிவகுமார்(11:38:00pm): எஸ்.கே. - பிற பகுதிகளில் நீங்கள் நேரடியாக ஈடுபடக் கூடிய பகுதிகளில் உதவி தேவையென்றால் பத்ரியைத் தொடர்பு கொள்ளுங்கள். பெட்ஷீட்களை நேரடியாக விநியோகிக்க வழி பார்த்துக் கொண்டிருக்கிறார்.அவற்றைப்பயன்படுத்திக் கொள்ளலாம்


மதுரபாரதி(11:39:09pm): நான் போன சமயம் ஒரு 23 வயது இளைஞர்-எல்லாம் இழந்தவர்-அழுதுகொண்டிருந்தார். கேட்டால் குடல்வால் வீக்கம். உடனடி அறுவை சிகிச்சை வேண்டும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். ரூ 4000 கட்டாமல் முடியாது.


பிகேசிவகுமார்(11:39:34pm): அவருக்கு அந்த அறுவைசிகிச்சை நடந்ததா @ ம.பா


மதுரபாரதி(11:39:56pm): மிகவும் மனது கஷ்டமாகிவிட்டது. நல்லவேளையாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஒரு நண்பரைத் தொடர்பு கொண்டேன்.


பிகேசிவகுமார்(11:40:03pm): தேவையென்றால் உங்கள் மூலம் அந்த 4000 ரூபாய்கள் நான் தருகிறேன்.


மதுரபாரதி(11:40:19pm): 2 மணிநேரத்துக்குள் நடந்தது, நல்லபடி, இலவசமாக.


பிகேசிவகுமார்(11:40:30pm): வெரி குட்.


ரோஸாவசந்த்(11:40:31pm): நல்லது


எஸ்.கே(11:40:34pm): @சிவகுமார்: OK. அவரிடம் பேசரேன். நன்றி


மதுரபாரதி(11:40:34pm): அரசு மருத்துவமனையிலும் நல்லவைகள் நடப்பதுண்டு.


இர.அருள்குமரன்(11:40:38pm): மிக்க மகிழ்ச்சி @ ம.பா


ரோஸாவசந்த்(11:40:59pm): நேசகுமார் சிலருக்கு கண் பார்வை போவதாக எழுதியிருந்தார். அது குறித்து மேலதிக தகவல்


ரோஸாவசந்த்(11:41:02pm): உண்டா?


பிகேசிவகுமார்(11:41:06pm): மருத்துவ உதவி, கல்வி உதவி, தினசரி வாழ்க்கை மீட்பு உதவிகளுக்கு முன்னுரிமை தந்து செயல்படலாம்


பிகேசிவகுமார்(11:41:22pm): லாங் டெர்மில் இவை மிகவும் பயனளிக்கும்


ரோஸாவசந்த்(11:41:35pm): நேசக்குமாரின் தகவல் மேலும் அதிர்ச்சியாய் இருந்ததௌ


உஷா(11:41:37pm): வறுமை, நோய், துர்மரணங்கள் ஏன் என்று புத்தருக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் என்க்கும் தோன்றும்


பிகேசிவகுமார்(11:41:56pm): பத்ரியிடம் நேசகுமார் தகவல் பற்றிப் பேசினேன்


எஸ்.கே(11:41:57pm): @மதுரபாரதி: எந்தப் பக்கமெல்லாம் நீங்க போனீங்க


ரோஸாவசந்த்(11:42:08pm): பத்ரி என்ன சொன்னார்


பிகேசிவகுமார்(11:42:18pm): கண் சுரம் என்று ஒன்று வருவதாக கேள்விப்பட்டாரம். மேலதிக விவரங்கள் அறிந்து சொல்கிறேன் என்றார்


மதுரபாரதி(11:42:29pm): சிவகுமார் மற்றும் நண்பர்கள், நீண்டநாள் பணிக்கு உதவவிரும்பினால் என்னை 091 44 22474302 அல்லது 98400 86650 என்ற எண்களில் தொடர்புகொண்டால் முழு விவரம் சொல்கிறேன்.


எஸ்.கே(11:42:39pm): கண் பார்வை பர்றி ஏதோ பத்திரிக்கையில் படிச்சேன்


பிகேசிவகுமார்(11:42:52pm): அவர் பாவம், புத்தகக் கண்காட்சியில் பிஸியாக இருக்கிறார். அவரைச் சிரமப்படுத்துவது கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் நான் தொல்லைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன்.


மதுரபாரதி(11:43:05pm): நாங்கள் சென்னை உத்தண்டி முதல் திருக்கழுக்குன்றம் வரை போனோம்.


பிகேசிவகுமார்(11:43:06pm): நன்றி ம.பா. உங்கள் எண்களைக் குறித்துக் கொண்டேன்.


ரோஸாவசந்த்(11:43:44pm): நானும் குறித்துகோன்டேன். மோசமான கிராமம் ஒன்றை 'தத்து' எடுப்பது பற்றி ரஜினி ராம்கி எழுதியிருந்தார். அது குறித்து முடிவு செய்து. தொடர முயற்சிக்கலாம்.


எஸ்.கே(11:44:17pm): அமேரிக்காவில் வசூல் செய்யும் பணமெல்லாம் எங்கே கொடுக்கிறார்கள் அரசிடமா அல்லது ஏதாவது NGO-க்களிடமா


இர.அருள்குமரன்(11:44:21pm): இன்றைய அரங்க உரையாடலை நாளை மற்றவர்கள் படிப்பதற்காக இணையத்தில் வெளியிடுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


ரோஸாவசந்த்(11:44:53pm): பெரிதாய் ஒன்றும் இல்லை. பயனுள்ளதாய் பெரிதாய் உறவாடவில்லை என்று நினஈகிறேன்


¡டருங்கள்.


பிகேசிவகுமார்(11:45:08pm): ஆமாம், ஒன்றும் பெரிதாய்ப் பேசிவிடவில்லை அருள்


ரோஸாவசந்த்(11:45:12pm): ஒகே சிவகுமார்


பிகேசிவகுமார்(11:45:17pm): வேண்டுமானால், தொகுத்து வெளியிடுங்கள்


மதுரபாரதி(11:45:35pm): அருள், முக்கியமானதைமட்டும் தொகுத்து வெளியிடுங்கள்.


குமரேசன்(11:45:53pm): வேண்டுமானால் தொகுத்து வெளியிடலாம்


இர.அருள்குமரன்(11:46:10pm): அதுதான் பிரச்சனை, யார் தினமும் தொகுப்பது?


மதுரபாரதி(11:46:27pm): இது எத்தனை நாளுக்கு?


எஸ்.கே(11:46:40pm): i have offered already1


இர.அருள்குமரன்(11:46:45pm): தேவைப்படும் வரை நீடிக்க உத்தேசம்


ரோஸாவசந்த்(11:46:58pm): இந்த வாரம் எனக்கு தொகுக்கும் வேலை செய்ய முடியாத்


உஷா(11:47:49pm): பாரதி சார், உங்களுக்கு போன் செய்கிறேன்


ரோஸாவசந்த்(11:47:57pm): மீட்பு பணிகள் என்ப்து இன்னும் ஒரு வரிஷத்திற்கு தேவை என்று நினைக்கிறேன். இதையும் மற்ரதையும் தொடரவேண்டும். மதுரபாரதி உங்களை நேரடியாய் தொடர்பு கொள்கிறேன்


குமரேசன்(11:48:01pm): இதை அப்படியே save செய்ய இயலுமா அருள்?


இர.அருள்குமரன்(11:48:11pm): ம.பா, தங்கள் மடலுக்காக காத்திருக்கிறேன்


குமரேசன்(11:48:35pm): ok madurabhaarathi sir


எஸ்.கே(11:48:40pm): மீண்டும் 7-30 அல்லது 8-00 மணிக்குகூடலாமா


மதுரபாரதி(11:48:40pm): எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் அருள். மீட்புப்பணி தலைக்குமேல்.


ரோஸாவசந்த்(11:48:58pm): தகவலுக்கு நன்றி


எஸ்.கே(11:49:02pm): எல்லொரும் வேலையிலிருந்து கூட்டுக்கு வந்திருப்பார்கள்


உஷா(11:49:04pm): பாரதி சார், பத்து நாளில் சென்னை வருகிறேன்


இர.அருள்குமரன்(11:49:06pm): முடியும் குமரேசன், Chat Alertஐ தரவிறக்கிக்கொண்டு இயக்கினால், அதுவே செய்துவிடும் @ குமரேசன்


மதுரபாரதி(11:49:29pm): வந்தால் என்னைக் கூப்பிடுங்கள். என் தொலைபேசி எண் குறித்துக்கொண்டீர்களா?


உஷா(11:49:49pm): எழுதி வைத்துக் கொண்டேன்


ரோஸாவசந்த்(11:49:55pm): நான் உதவி குறித்த்க பதிவில் உங்கள் எண்ணை வெலிYஈTஆளாஆMஆஆ


இர.அருள்குமரன்(11:50:15pm): http://www.shockwave-india.com/tamil/tsunami/ இந்த பக்கத்தை முழுவதும் படித்துவிடுங்கள் @ குமரேசன்


ரோஸாவசந்த்(11:50:39pm): மதுரபாரதிக்கு, உங்கள் எண்ணை உதவி குறித்த பதிவில் வெளியிடலாமா


குமரேசன்(11:50:53pm): ok படிக்கிறேன் அருள்.


மதுரபாரதி(11:51:04pm): ரோ.வ. மடற்குழுவுக்கானால் வெளியிடலாம். எல்லோரும் நண்பர்களே.


ரோஸாவசந்த்(11:51:20pm): நான் சொல்வது தமிழ் மணம் பதிவில்


ரோஸாவசந்த்(11:51:25pm): என் Bளாகில்


ரோஸாவசந்த்(11:51:37pm): உங்களுக்கு பிரச்சனை என தோன்றினால் வேண்டாம்


இர.அருள்குமரன்(11:51:38pm): அதாவது இணையத்தி;


மதுரபாரதி(11:51:38pm): ஓ, செய்யலாம். விரும்புகிறவர்கள் தொடர்புகொள்ள வசதியாக இருக்குமே.


இர.அருள்குமரன்(11:51:45pm): ஆம்


ரோஸாவசந்த்(11:51:58pm): ஏற்கனவேபத்ரி ராம்கி, பாபு எண் உள்ளது


ரோஸாவசந்த்(11:52:05pm): உங்களதையும் சேர்க்கிறேன்


ரோஸாவசந்த்(11:53:02pm): எங்களால் செய்யகூடியதை சொல்லுங்கள்


இர.அருள்குமரன்(11:55:04pm): தமிழகத்தின்பாதிக்கப்பட்ட கோடிகளின் உண்மை நிலை, தேவைகள் இதுபற்றி


இர.அருள்குமரன்(11:56:06pm): வாசன், இன்று நடந்த முக்கிய உரையாடல்கள் இணையத்தில் வெளியிடப்படும்


வாசன்(11:56:41pm): சரி..பலவிதமான செய்திகள் வருகின்றன.வெகு தூரத்தில் வாழ்ந்து கொண்டு எதை நம்புவது என தெரியவில்லை.தமிழக உறவினர்களும் தொ.பேசியில் சரியாக விளக்கம் அளிக்கவில்லை..


ரோஸாவசந்த்(11:56:46pm): நல்லது அருள்


இர.அருள்குமரன்(11:57:09pm): ஆம் சிக்கல் அதுதான் @ வாசன்


உஷா(11:58:35pm): வாசன் பாதிக்கப்பட்டவர்கள் குடிசைவாசிகள், நம்ம உறவினர்களுக்கு என்ன தெரியும்?


வாசன்(11:59:59pm): அதுதான் வருத்தமளிக்கிறது.இங்கே எனது மகன் படிக்கும் தனியார் பள்ளியில் காசு சேர்க்க கைவினை பொருட்களை அடுத்த வாரம் ஏலம் போட்டு ,சுனாமிக்கு நிதி அளிக்க உள்ளனர்..




தேவையற்ற உரையாடல்களை நீக்க உதவிய எஸ்.கே அவர்களுக்கு நன்றி!

சுனாமி மீட்பு உதவி அரங்கில் ரஜினி ராம்கி

நண்பர்களே,

பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்த்தவராகிய ரஜினி ராம்கியை தொடர்பு கொண்டேன் அவர் இன்று மதியம் இந்திய நேரம் 12:30க்கு அரங்குக்கு (http://www.shockwave-india.com/tamil/tsunami/) வருவதாக சொன்னார்

அந்த நேரத்தில் நீங்களும் வந்தால் நிலவரத்தை அவர் வாயால் சொல்லக் கேட்கலாம்

அன்புடன்,
இர.அருள் குமரன்

Sunday, January 09, 2005

சுனாமி மீட்பு உதவி கலந்துரையாடல்

சுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகளாவிய தமிழர்கள் அனைவரும் உதவ, உரிய நபர்களோடு கலந்தாலோசிக்க வசதியாக இந்த அரங்கம் நிறுவப்படுகிறது. இணையத்தமிழர்கள் ஒன்று கூடி தங்களின் பங்களிப்பை சரியான திசையில் செலுத்த இந்தத் தொடர்புச்சேவை உதவும் என நம்புகிறேன்.

இந்தப் பேரிடரிலிருந்து மீள நம்மால் இயன்ற அனைத்து வழிகளிலும் முயற்சிப்போம். நம்முடைய முயற்சிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக சென்று சேர்கிறதா என்பதை உறுதிப்படுத்த தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ள இணையத்தமிழர்கள் உதவ வேண்டுகிறேன்

ஜனவரி ஒன்பதாம் தேதி சிங்கை நேரப்படி மாலை 6:01 மணி முதல் (இந்திய நேரம், மதியம் 3:31, அதாவது இன்னும் சில நிமிடங்களில்) இந்த சேவை தொடங்கும்.
(சுனாமியால் இறந்தவர்களுக்கான ஒரு நிமிட மௌன அஞ்சலி 6:00 மணிக்கு சிங்கப்பூரில் கடைபிடிக்கப் படுகிறது, அது முடிந்தவுடனே)

சுட்டி : http://www.shockwave-india.com/tamil/tsunami/

மேல்விபரங்கள் அறிய மேற்கண்ட சுட்டியை சுட்டவும்.

உங்களை அங்கே சந்திக்கிறேன்

அன்புடன்,
இர.அருள் குமரன்