கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!
வலைப்பதிவாளர்களும் வாசகர்களுமாகிய உங்களை வருக வருக என வரவேற்கிறேன். தங்கள் முன்னிலையில், ஒலிப்பெருக்கி முழக்கமோ மேடையோ அலங்காரமோ இன்றி மெல்ல ஒரு வெளியீட்டு விழா.
என்ன வெளியிடப்போகிறோம்?
தற்போது வெளிவரும் புதிய கைப்பேசிகள் கைக்கணினியின் பெரும்பாலான அம்சங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றன. அவைகளின் வசதிகளைக் கொண்டு தமிழில் குறுந்தகவல் அனுப்பும் செயலி சமீபத்தில் சிங்கையில் வெளியீடு கண்டதை அறிந்திருப்பீர்கள்.
குறுந்தகவல்களையும் சிறுகவிதைகளையும் தாண்டி கதைகளையும் நாவல்களையும் கைப்பேசியிலேயே எடுத்துச்செல்லும் வண்ணம் வடிவமைத்தால் நமது பேருந்து மற்றும் இரயில் பயண நேரத்தை மேலும் பயனுள்ள வகையில் செலவழிக்கமுடியும் அல்லவா?
அதற்கான முதல் படியில் காலை எடுத்து வைத்திருக்கிறோம். எழுத்தின் காப்புரிமை பிரச்சனைகளை தவிர்க்கும் விதமாக (மற்றும் என் சுயநலம் காரணமாக) நான் எழுதிய மரத்தடி போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற பாதுகாவல் என்னும் சிறுகதையின் இரண்டாம் பதிப்பை கைப்பேசிக்கான இலவச மின்நூலாக தற்போது வெளியிடுகிறோம்.
என்னுடைய கைப்பேசியில் இந்த நூலை தரவிறக்கி படிக்க முடியுமா?
மேக்ரோ மீடியாவின் ஃபிளாஷ் லைட்டை ஏற்கக்கூடிய கீழ்க்காணும் கைப்பேசி மாதிரிகளில் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருந்தால் இயலும்
ஃபிளாஷ் லைட் பிளேயர் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்க வேண்டும் இல்லை எனில் அதை மேற்கண்ட மேக்ரோமீடியா தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் (தற்போதைக்கு இதற்கு USD 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் விரைவில் இது கைப்பேசியில் பொதிக்கப்பட்டே கிடைக்கும்)
மின்நூலை நிறுவுவது எப்படி?
53 Kb அளவுள்ள இந்த கோப்பை (Right Click -> Save Target) உங்கள் கணினியில் இறக்கி பின் உங்கள் கைப்பேசிக்கு மாற்றியோ அல்லது நேரடியாக கைப்பேசியில் இறக்கியோ ஃபிளாஷ் லைட் பிளேயர் கொண்டு இயக்கிக்கொள்ளவும். பக்கங்களை திருப்ப அம்புக்குறிகளை பயன்படுத்திக்கொள்ளவும்
மேற்கூறப்பட்ட எந்த வசதியும் இல்லாதவர்கள் இந்நூலைக் காண ஏதும் வழியுண்டா?
உண்டு! இதற்கெனவே கணினியில் இயங்கக்கூடிய பிரத்யேக மொபைல் சிமுலேட்டரை இந்தத் தளத்தில் (கீழே) நிறுவியுள்ளேன். அதன் பொத்தான்களை இயக்கி காணவும்
இனி...
இது குறித்த உங்கள் சந்தேகங்களையும் கேள்விகளையும் பின்னூட்டமாக இட்டால் நான் பதிலளிக்கிறேன்
இப்படிப்பட்ட தமிழ் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் ஈடுபடும் என் போன்றவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் உங்களால் கொடுக்க முடிந்த ஊக்கமும், உற்சாகமும், இவை எல்லாம் பயன்பட்டன என்னும் திருப்தியும்தான்
கிடைக்கும்தானே?
அடுத்து என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தபடி, தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி கூறும்
அன்புடன்,
இர.அருள் குமரன்
என்ன வெளியிடப்போகிறோம்?
தற்போது வெளிவரும் புதிய கைப்பேசிகள் கைக்கணினியின் பெரும்பாலான அம்சங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றன. அவைகளின் வசதிகளைக் கொண்டு தமிழில் குறுந்தகவல் அனுப்பும் செயலி சமீபத்தில் சிங்கையில் வெளியீடு கண்டதை அறிந்திருப்பீர்கள்.
குறுந்தகவல்களையும் சிறுகவிதைகளையும் தாண்டி கதைகளையும் நாவல்களையும் கைப்பேசியிலேயே எடுத்துச்செல்லும் வண்ணம் வடிவமைத்தால் நமது பேருந்து மற்றும் இரயில் பயண நேரத்தை மேலும் பயனுள்ள வகையில் செலவழிக்கமுடியும் அல்லவா?
அதற்கான முதல் படியில் காலை எடுத்து வைத்திருக்கிறோம். எழுத்தின் காப்புரிமை பிரச்சனைகளை தவிர்க்கும் விதமாக (மற்றும் என் சுயநலம் காரணமாக) நான் எழுதிய மரத்தடி போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற பாதுகாவல் என்னும் சிறுகதையின் இரண்டாம் பதிப்பை கைப்பேசிக்கான இலவச மின்நூலாக தற்போது வெளியிடுகிறோம்.
என்னுடைய கைப்பேசியில் இந்த நூலை தரவிறக்கி படிக்க முடியுமா?
மேக்ரோ மீடியாவின் ஃபிளாஷ் லைட்டை ஏற்கக்கூடிய கீழ்க்காணும் கைப்பேசி மாதிரிகளில் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருந்தால் இயலும்
- Nokia 3600, 3620, 3650, 3660, 6600, 6620, 6630, 6670, 7610, N-Gage, N-Gage QD
- Siemens SX1
- Sendo X
- Sony Ericsson P800, P900, P910
ஃபிளாஷ் லைட் பிளேயர் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்க வேண்டும் இல்லை எனில் அதை மேற்கண்ட மேக்ரோமீடியா தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் (தற்போதைக்கு இதற்கு USD 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் விரைவில் இது கைப்பேசியில் பொதிக்கப்பட்டே கிடைக்கும்)
மின்நூலை நிறுவுவது எப்படி?
53 Kb அளவுள்ள இந்த கோப்பை (Right Click -> Save Target) உங்கள் கணினியில் இறக்கி பின் உங்கள் கைப்பேசிக்கு மாற்றியோ அல்லது நேரடியாக கைப்பேசியில் இறக்கியோ ஃபிளாஷ் லைட் பிளேயர் கொண்டு இயக்கிக்கொள்ளவும். பக்கங்களை திருப்ப அம்புக்குறிகளை பயன்படுத்திக்கொள்ளவும்
மேற்கூறப்பட்ட எந்த வசதியும் இல்லாதவர்கள் இந்நூலைக் காண ஏதும் வழியுண்டா?
உண்டு! இதற்கெனவே கணினியில் இயங்கக்கூடிய பிரத்யேக மொபைல் சிமுலேட்டரை இந்தத் தளத்தில் (கீழே) நிறுவியுள்ளேன். அதன் பொத்தான்களை இயக்கி காணவும்
இனி...
இது குறித்த உங்கள் சந்தேகங்களையும் கேள்விகளையும் பின்னூட்டமாக இட்டால் நான் பதிலளிக்கிறேன்
இப்படிப்பட்ட தமிழ் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் ஈடுபடும் என் போன்றவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் உங்களால் கொடுக்க முடிந்த ஊக்கமும், உற்சாகமும், இவை எல்லாம் பயன்பட்டன என்னும் திருப்தியும்தான்
கிடைக்கும்தானே?
அடுத்து என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தபடி, தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி கூறும்
அன்புடன்,
இர.அருள் குமரன்