உள்ளத்து ஓசை

Friday, April 14, 2006

உள்ளத்தின் அடங்கிய ஓசை

கடந்த ஒரு வருட காலமாக என் உள்ளத்தின் ஒலியற்ற ஓசையை கேட்டிருப்பீர்கள். சிரங்கு அல்லது பேனா பிடித்தவன் கையைப் பற்றி உணர்ந்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இத்தனைநாள் மௌனத்திற்கும், இப்போதைய தொடக்கத்திற்கும் ஒரு வலுவான காரணம் இருக்கிறது. அதை இன்றே உங்களிடம் பகிர்ந்துகொள்ள செய்த முயற்சி பலிக்கவில்லை. ஆனால் அநேகமாக நாளை ஈடேறும் என்று தோன்றுகிறது. அந்த காரணம் என்ன என்று உங்கள் ஊகத்தை பின்னூட்டமிடுங்கள். ஒரே ஒரு தடயக் குறிப்பு தருகிறேன். என்னுடைய கடைசிப்பதிவுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறது :)

2 மறுமொழிகள்:

  • வாங்க அருள் வாங்க, என்ன கைப்பேசியிலேயே ஏதாவது புதுசா செய்ஞ்சிருப்பீங்கன்னும் நினைக்கிறேன். எதுவாயிருந்தாலும் ரொம்ப நன்றி

    மறுமொழி: karthikramas, நேரம்: 12:15 AM  

  • கண்டுபிடிச்சிட்டீங்களே கார்த்திக்ரமாஸ், உங்க கைப் பேசியை தயாரா வைங்க :)

    மறுமொழி: Arul, நேரம்: 12:30 AM  

Post a Comment

<< முதல் பக்கம்